ஜெபம் என்பதைக் குறித்து ஒரு
சிறிய சிந்தனையை தளத்தின் முன் வைக்க விரும்புகிறேன். நாம் அனைவரும் ஜெபம் என்பதை குறித்து
பல முறை பேசியிருக்கலாம், இன்னும் சொல்லப் போனால் நாம் அனுதினமும் ஜெபிக்கிறவர்களாகவும்
இருக்கிறோம். ஆனலும் ஜெபம் என்பதன் கருத்து இன்னமும் முழுமையக சரியாக பெரும்பாலோனோரால்
புரிந்து கொள்ளப்படவில்லை. So.....
நீங்கள் யாருடனாவது தொலை பேசியில் பேசுகிறீர்கள்
என்று வைத்துக் கொள்வோம். அப்போது நீங்கள் எதிர்முனையில் இருப்பவரிடம் நான் பேசுவேன்
பேசுவேன்...... பேசிக்கொண்டே இருப்பேன், கேட்க வேண்டியது மட்டுமே உன் கடமை ஆகவே கேளுங்க
கேளுங்க கேட்டுக்கிட்டே ...... இருங்க என்று நீங்க சொன்னால் எதிர் முனையில் இருப்பவர்
என்ன செய்வார்? முதலில் பொறுமையாக கொஞ்ச நேரம் கேட்பார். பின்பு சற்று எரிச்சலுடன்
கேட்பார் பின்பு இவன் என்ன நான் என்ன நினைக்கிறேன் என்பதையும் இவனுக்கு நான் ஏதாவது
உதவி செய்யலாம் என்று நினைத்தால் கூட இவன் கேட்க மாட்டேங்கிறானே என்ற ஆதங்கத்துடன்
இணைப்பை துண்டித்து விடுவார். இன்று அனேக கிறிஸ்த்வர்கள் செய்யும் ஜெபங்களில் கூட இதே
நிலைதான் என்பதை மிகவும் மன் வேதனையுடனும் பாரத்துடனும் கூற வேண்டியதாயுள்ளது.
சரி. ஜெபம் என்றால் என்ன?
ஜெபம் என்பது தேவனுடன், தேவன் நம்முடன் பேசும் ஒரு
வழிமுறை ஆகும். அது ஒரு வழிச் சாலை அல்ல, இருவழிச் சாலை. நாம் பேச அவர் பேச இருவரும்
உரையாடி மகிழும் ஒரு இனிமையான நேரம் அதுவாகும்.
இன்று ஜெபம் செய்தீர்களா?
பொதுவாக கிறிஸ்தவர்களைப் பார்த்து நீங்கள் ஜெபம்
செய்தீர்களா என்று கேட்டால் சாரி பிரதர், சாரி சிஸ்டர் எனக்கு நேரமே கிடைக்க மாட்டேங்குது
என்பார்கள். இன்றைய வேகமான சூழ்நிலையில் நாம் அத்தகைய பதில்களில் ஓரளவுக்கு புரிந்து
கொள்ள முடிகிறது. ஆனால் இயேசுவின் வாழ்க்கையை கவனித்துப் பார்த்தால் அவர் சமயம் கிடைக்கும்
போதெல்லம் ஜெபித்தார். அவரைச் சுற்றிலும் எப்போதும் ஜனங்கள் இருந்தனர். ஊழியம் இருந்தது.
அவருக்கு போஜனம் அருந்தக் கூட நேரமில்லாதிருந்தது என்று நாம் வாசிக்கிறோம். அதேவேளையில்
அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது
அங்கே தனிமையாயிருந்தார் என்று மத்தேயு14:23, மாற்கு6:46 ஆகிய இடங்களில் வாசிக்கிறோம்.
இன்னும் பல இடங்களில் இயேசு ஜெபம் செய்ய சென்றதை நாம் காண்கிறோம். தேவனும் தேவ குமாரனுமாகிய
இயேசுவுக்கே ஜெபம் தேவையானதாக இருந்தது, மற்றும் அவருக்கு நேரமும் கிடைத்தது. நமக்கு
ஏன் நேரம் கிடைப்பதில்லை? ஏன் காலங்கள் பல ஆன பின்பும் நாம் சுருக்கமான ஜெபம் பெருக்கமான
ஆசீர்வாதம் என்ற கொள்கையுடன் அவசரம் அவசரமாக ஜெபித்துக் கொண்டிருக்க வேண்டும்? சற்று
சிந்தித்துப் பார்ப்போமாக.
என்ன ஜெபிக்க வேண்டும்?
நம் எல்லாருக்குமே அதிக நேரம் ஜெபிக்க ஆசைதான். ஆனால்
அது நடப்பதுதான் இல்லை. நம்மில் பலர் அதிக நேரம் ஜெபிக்க வேண்டுமெனில் ஏராளமான ஜெப
விண்ணப்பங்களோடு ஆயத்தத்துடன் சென்றால் போதும். மணிக்கணக்கில் ஜெபிக்கலாம் என்று நினைக்கிறோம்.
உண்மை என்ன? நம்மிடம் ஒரே ஒரு ஜெபக் குறிப்பு இருந்து நாம் உண்மையான பாரத்தோடு ஜெபித்தால்
அதற்கே பல மணி நேரங்கள் ஆகலாம். அதிக வசனிப்பு ஜெபத்திற்கு அலங்காரமாக இருந்தாலும்
தேவன் அப்படிப்பட்ட ஜெபங்களை விட ஆயக்காரன் அன்று செய்தது போல சிறிய எளிய ஜெபங்களை
மிகவும் விரும்புகிறார். அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்
வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று
நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள்
வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்
என்று மத்தேயு6:7,8 ஆகிய வசனங்களில் இயேசு சொல்லியிருக்கிறார்.
அப்படியானால் நாம் எதற்காகத்தான் ஜெபிப்பது?
நம்முடைய கரியங்களுக்காக ஜெபிக்க தேவையில்லைதான்.
ஆனால் ஜெபிப்பது தவறில்லை.
1.தேசத்திற்காக
தேசத்தின் எதிர்காலம் ஜெபிக்கிற தேவனுடைய பிள்ளைகளின்
கையிலேதான்.
என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி,
ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது
பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக்
கொடுப்பேன் என்று தேவன் 2 நாளாகமம்7:14ல் சொல்லியிருக்கிறார்.
மேலும் அப்போஸ்தலனகிய பவுல் நமக்கு ஒரு பிரதானமான
ஆலோசனையை தருகிறார்.
நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில்,
எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும்
பண்ணவேண்டும்; நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள
ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.
நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது (1தீமோ.2:1-
3).
2.பின்மாரிக்காக
நாமெல்லாரும் முன்மாரியைக் குறித்து அறிந்திருக்கிறொம்.
அன்று பரிசுத்த ஆவியின் வல்லமையில் சபை உண்டானது, 3000பேர் ஒரே பிரசங்கத்தினால் இரட்சிக்கப்பட்டனர்.
சபை வேகமாக வளர்ந்து பரவியது. முன்மாரியை கண்டு ஆச்சரியப்பட்ட நாம் பின்மாரிக்காகவும்
ஆவலுடன் காத்திருந்து அதற்காக் ஜெபிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். பல தேவ
ஊழியர்கள் மூலமாக அதை அடிக்கடி நினைவு படுத்தவும் செய்கிறார். நாம் பின் மாரிகாலத்து
மழைக்காக பரிசுத்த ஆவியானவரின் அருள் மாரிக்காக் ஜெபிக்கிறோமா? இன்றே ஜெபிப்போம்.
பின்மாரிகாலத்து மழையைக் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்;
அப்பொழுது கர்த்தர் மின்னல்களை உண்டாக்கி, வயல்வெளியில் அவரவருக்குப் பயிருண்டாக அவர்களுக்கு
மழையைக் கட்டளையிடுவார். ( சகரிய.10:1)
3. ஊழியர்கள் எழும்ப
அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு
எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்று
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வேண்டிக் கொள்கிறதை நம் மத்தேயு9:37,38 மற்றும் லூக்கா10:2
ஆகிய வசங்களில் நாம் வாசிக்கிறோம். பாருங்கள். நாம் மேற்சொன்னது போல தேசத்திற்ககவும்
பின்மாரிக்காகவும் ஜெபிக்கும் போது நிச்சயமாக தேவன் நம் ஜெபத்தைக் கேட்டு ஒரு பெரிய
அறுவடையை அனுப்புவார். அறுவடைக்கு ஆட்கள் இல்லையேல் என்னவாகும் அறுவடை அனைத்தும் வீணாகிவிடும்.
அனைவரின் உழைப்பும் வீண். எஜமானுக்கும் வேலையாட்களுக்கும் எல்லாம் நஷ்டமே?
இன்றும் நாம் இந்தியாவில் காண்கிற உபத்திரவங்கள்
எல்லாம் காட்சிகள் எல்லாம் பயிர் முற்றி அறுவடைக்கு ஆயத்தம் என்பதை நமக்கு மறைமுகமாக
சொல்கிறது., சீக்கிரத்தில் இந்திய தேசத்தில் ஒரு பெரிய அறுவடை உள்ளது. எல்லாரும் எதிர்பார்க்கிறோம்.
அறுவடைக்கு ஆட்கள் உள்ளனரா என்று பார்க்கிறோமா. ஆகவே நாமெல்லோரும் வேலையாட்களை தேவன்
அனுப்பும் படி ஜெபிப்போம்.
தேவன் என்ன செய்வார்?
பின்பு யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப்
போவான்? என்று கேட்பார். நாம் என்ன செய்ய வேண்டும்? இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை
அனுப்பும் என்று சொல்வோமாகில் இந்திய தேசம் இரட்சகரைக் காணும் நாள் தூரத்திலில்லை.
ஆகவே ஆண்டவரின் மனவேதனையை அறிந்து அதைப் புரிந்தவர்களாக நாம் ஜெபிப்போம். ஜெபிப்பதற்கு
நமக்கு பல காரியங்கள் இருந்தாலும் இது மூன்றும் முக்கியமானது. ஆகவே ஜெபம் செய்வோமாக.............ஆமென்.
ஒருவரும் இல்லையென்று கண்டு, விண்ணப்பம் பண்ணுகிறவன்
இல்லையென்று ஆச்சரியப்பட்டார்.(ஏசாயா 59:16)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக