எரேமியாவின் ஒப்பாரி
🌹 புலம்பல் 🌹
💥 எபிரேயத்தில் இந்தப் புத்தகம் அதன் முதல் வார்த்தையாகிய எஹ்கா! (Ehkhah!) என்பதன் அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் ‘எவ்வாறு!’ என்பதாகும்.
💥 கிரேக்க மொழிபெயர்ப்பு “எரேமியாவின் புலம்பல்” என்னும் பொருள் கொண்ட “Threnoi Hieremiou” என்னும் பெயரால் அழைக்கப்பட்டது.
💥 இலத்தீனில் எழுதிய ஜெரோம் இதற்கு லாமென்டேஷனெஸ் (Lamentationes) என பெயரிட்டார். இதிலிருந்தே ஆங்கில பெயர் லாமென்டேஷன்ஸ் வந்தது.
💥 புலம்பல் புத்தகமானது தற்கால வேதாகமங்களில் எரேமியாவிற்கு அடுத்து உள்ளது.
💥 தற்கால எபிரேய வேதாகமங்கள் சிலவற்றில் இது ரூத்துக்கும் பிரசங்கிக்கும் அல்லது எஸ்தருக்கும் பிரசங்கிக்கும் இடையில் உள்ளது.
💥 ஆனால் பூர்வ பிரதிகளில், இன்று நம்முடைய வேதாகமங்களில் இருப்பது போலவே எரேமியாவுக்கு பின் இருந்ததாக சொல்லப்படுகிறது.
💥 எரேமியாவே இந்தப் புத்தகத்தை எழுதினார் என்பதற்கு அத்தாட்சிகளாக, “2-ம் 4-ம் அதிகாரங்களிலுள்ள எருசலேமின் தத்ரூபமான விவரிப்புகளை வாசிக்கையில் அது கண்கண்ட சாட்சி எழுதியவையே என்பது தெளிவாய் தெரிகிறது.
💥 அவ்வாறே அந்தச் செய்யுட்கள் முழுவதிலும் காணப்படும் ஆழ்ந்த இரக்கமும் தீர்க்கதரிசன அம்சமும் அவருக்கே சொந்தமானவை.
💥 அதோடு அவற்றின் எழுத்துநடையும் சொல்நயமும் கருத்துகளும் கூட எரேமியாவிற்கே உரியவை.” புலம்பலிலும் எரேமியாவிலும் காணப்படும் அநேக சொற்றொடர்கள் ஒரேவிதமாக உள்ளன. உதாரணமாக, துயரம் மிகுந்த ‘கண்கள் நீராய் (கண்ணீர்) சொரிகின்றன’ என்பது, (புல.1:16, 2:11, 3:48,50 ; எரே.9:1, 13:17, 14:17) தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் செய்த ஊழல் காரணமாக அவர்களிடம் வெறுப்பைக் காண்பிப்பது போன்றவை. (புல.2:14, 4:13,14 ; எரே.2:34, 5:30,31, 14:13,14)
💥 எரேமியா 8:18-22-லும் 14:17,18-லும் உள்ள பகுதிகள், புலம்பலில் காணப்படும் துயர்மிகுந்த எழுத்து நடையில் எரேமியாவால் நிச்சயம் எழுத முடிந்திருக்கும் என்பதைக் காட்டுகின்றன.
💥 கி.மு. 586இல் எருசலேமுக்கு நேரிட்ட பேரழிவையும், அதன் தொடர் நிகழ்ச்சியான நாடுகடத்தப்படுதலையும் பற்றிய புலம்பலாக இப்புத்தகம் அமைந்துள்ளது.
💥 முதல் புலம்பல் (அதிகாரம் 1): எருசலேம் அழிவுற்ற நிலையில் தன் துயரங்களை எடுத்துக் கூறி, ஒரு “கைம்பெண்” போல ஒப்பாரி வைக்கிறது.
💥 இரண்டாம் புலம்பல் (அதிகாரம் 2): எருசலேமுக்கு ஏற்பட்ட அழிவுக்குக் காரணம் மக்களின் பாவமே என்றும், அதனால் கடவுள் தண்டனை அளித்தார் எனவும் அமைந்துள்ளது.
💥 மூன்றாம் புலம்பல் (அதிகாரம் 3): கடவுளால் தேர்ந்துகொண்ட மக்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்னும் கருத்து வெளிப்படுகிறது. கடவுள் அனுப்பும் துன்பங்கள் மக்களைக் கண்டித்துத் திருத்தி அவர்களை நல்வழிக்குக் கொண்டுவரும் என்னும் கருத்து துலங்குகிறது.
💥 நான்காம் புலம்பல் (அதிகாரம் 4): மக்கள் செய்த பாவத்தின் விளைவாக எருசலேம் நகரும் தேவாலயமும் அழிந்துபட்டன என்னும் கருத்து எடுத்துரைக்கப்படுகிறது.
💥 ஐந்தாம் புலம்பல் (அதிகாரம் 5): மக்கள் மனம் திரும்பி கடவுளை நாடிச்சென்று மன்னிப்பு அடையும்படியாக வேண்டல்.
💥 இந்தப் புலம்பல் புத்தகம், உணர்ச்சிகளை வெளிப்படுத்தி, கவிதை நடையில் எழுதப்பட்ட ஐந்து பாடல்களின் தொகுப்பாகும்.
💥 முதல் நான்கும் புலம்பல் பாடல்களாகும், அதாவது துயரப் பாடல்களாகும்.
💥 ஐந்தாவது பாடல் ஒரு விண்ணப்பமாகும், அதாவது ஜெபமாகும்.
💥 முதல் நான்கு பாடல்களும் அகரவரிசையில் எழுதப்பட்டுள்ளன; அதாவது, அவற்றின் ஒவ்வொரு வசனமும் எபிரேய மொழியின் 22 எழுத்துக்களில் ஒன்றோடு தொடங்குகிறது.
💥 ஐந்தாம் பாடலில் எபிரேய மொழியின் எழுத்துக்களுக்கு இணையாக 22 வசனங்கள் இருக்கிற போதிலும், அது அகரவரிசையில் எழுதப்படவில்லை.
💥 கடவுளுடைய பல எச்சரிக்கைகளும் தீர்க்கதரிசனங்களும் நிறைவேற்றமடைந்ததைக் புலம்பல் புத்தகம் காட்டுகிறது. (புல.1:2 — எரே.30:14, புல.2:15 — எரே.18:16, புல.2:17 — லேவி.26:17, புல.2:20 — உபா.28:53)
💥 உபாகமம் 28:63-65-ன் நிறைவேற்றத்திற்கான தெளிவான அத்தாட்சியைப் புலம்பல் புத்தகத்தில் பார்க்கிறோம்.
💥 பரிசுத்த வேதாகமத்தின் மற்ற பாகங்களிலிருந்து எடுக்கப்பட்ட பல மேற்கோள்களும் இந்தப் புத்தகத்தில் உள்ளன. (புல.2:15 — சங்.48:2, புல.3:24 — சங்.119:57)
💥 புலம்பல் 1:5-ம் 3:42-ம் கூறுவது போல ஜனங்களின் சொந்த மீறுதல்கள் காரணமாகவே அழிவு வந்தது என்பதை தானியேல் 9:5-14 உறுதிப்படுத்துகிறது.
💥 மொத்தம் 5 அதிகாரங்களும், 154 வசனங்களையும் கொண்டுள்ளது.
💥 1,2,4,5 ஆகிய அதிகாரங்கள் முறையே 22 வசனங்களை உள்ளடக்கிய அதிகாரங்களாகவும் 3-ம் அதிகாரம் 66 வசனங்களையும் கொண்டுள்ளது.
💥 சீயோனை நினைவுகூர்ந்து அதைத்திரும்ப நிலை நாட்டுவார் என்ற நம்பிக்கையைப் புலம்பல் அளிக்கிறது. (புல.3:31,32; 4:22)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக