அழுகின்ற தீர்க்கதரிசி
🌹 எரேமியா 🌹
💥 தீர்க்கதரிசியாகிய எரேமியா பெயரால் அழைக்கப்படும் இப்புத்தகம் மூல மொழியாகிய எபிரேயத்தில், யிர்மீயா (Yirmeyah) அல்லது யிர்மீயாஹு (Yirmeyahu) என்றழைக்கப்படுகிறது.
💥 இதன் அர்த்தம், “யாவே உயர்த்துகிறார்” அல்லது, “யாவே தளர்த்துகிறார்” என்பதாகும்.
💥 நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 24-வது புத்தகமாக வருகிறது.
💥 எரேமியா, ஆனதோத் ஊரிலிருந்த ஆசாரியரான இல்க்கியாவின் குமாரன். இந்த ஆனதோத் ‘பென்யமீன் தேசத்தில்’ எருசலேமின் வடக்கேயிருந்த நாட்டில் அமைந்திருந்த ஆசாரியருக்குரிய ஒரு பட்டணம். (1:1)
💥 ஏசாயா தீர்க்கதரிசி இறந்து 70 வருடங்கள் ஆன பிறகு, யோசியாவின் 13 ஆம் ஆண்டிலே, மிகவும் சிறிய வயதிலே, ஆன்டோத்திலே வசிக்கும்போது எரேமியா தீர்க்கதரிசனம் சொல்ல அழைக்கப்பட்டார். (எரே.1:6).
💥 இப்புத்தகம் எரேமியாவின் ஊழிய தொடக்க காலமுதல் யோயாக்கிமீன் நான்காம் ஆண்டு வரை இவர் உரைத்த தீர்க்க தரிசனங்கள் இவர் சொல்ல இவரது உதவியாளராகிய பாரூக்கால் எழுதப்பட்டது.
💥 இதை யோயாக்கீம் படித்து கத்தியால் கிழித்து எரித்துவிட்டான். பின்பு பரிசுத்த ஆவியானவரினால் ஏவப்பட்டு மீண்டும் ஆரம்ப முதல் மேலும் அவர் உரைத்த தீர்க்கதரிசனங்கள் சேர்த்து எழுதும்படி எரேமியாவால் சொல்லப்பட்டு பாரூக்கால் எழுதப்பட்டது. (36-38)
💥 52-ம் அதிகாரம், 2 இராஜா 24:18 – 25:30 வரையுள்ள வசனங்களோடு தொடர்புடையதால் அவருக்கு நெருங்கிய தொடர்புடைய ஒருவரால் (பாரூக்) பின்னாட்களில் எழுதி சேர்க்கப்பட்டிருக்கலாம்.
💥 இப்புத்தகத்தில் உள்ள தகவல் காலவரிசையின்படி அல்ல, பொருளுக்கேற்ற படி ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. ஆகவே இப்பதிவில் காலத்தையும் சந்தர்ப்ப சூழ் நிலைகளையும் குறித்ததில் பல வித்தியாசங்களை காணமுடிகிறது.
💥 இது பெரும்பான்மையான தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தை காட்டுகிறது. அதுமட்டுமல்லாமல், பின்தொடரும் புலம்பல் புத்தகத்துக்கு ஏற்ற சூழமைவையும் அளிக்கிறது.
💥 பரிசுத்த வேதாகமத்தின் நீளமான புத்தகம் என்ற பட்டியலில் எரேமியா இரண்டாம் இடத்தை பிடிக்கிறது.
💥 சங்கீதங்களின் புத்தகத்திற்கு அடுத்து அதிகமான வார்த்தைகள் (அதிகாரம் அல்ல) கொண்டு புத்தகம் இதுவாகும்.
💥 பழைய ஏற்பாட்டின் மற்ற தீர்க்கதரிசனங்களை விட எரேமியாவின் தனிப்பட்ட வாழ்க்கை, போராட்டம் மிக ஆழமாக பதிவு செய்துள்ளது.
💥 தேவனுடைய புதிய உடன்படிக்கையை மக்களுக்கு வெளிப்படுத்திய இப்புத்தகம் இறையியல் வெளிப்பாட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
💥 மற்ற தீர்க்கதரிசன புத்தகங்களைப் போல இவை அடுக்கப்படாமல் எரேமியாவின் தீர்க்கதரிசன தொகுப்பாகவே இப்புத்தகம் காட்சியளிக்கிறது.
💥 கிறிஸ்துவைக் குறித்த தீர்க்கதரிசனங்கள்
அ) மேசியா நல்ல மேய்ப்பராகவும்,
ஆ) நீதியுள்ள தாவீதின் கிளையாக கூறப்பட்டுள்ளார்.
இ) ராமாவின் புலம்பல் கூக்குரல் கேட்கப்பட்டது என்ற வார்த்தை குழந்தை இயேசு கொல்ல முயன்றபொழுது நிறைவேறியது.
💥 இதில் அதிகமான வாக்குத்தத்தங்கள் மற்ற தீர்க்கதரிசனம் புத்தகங்களை போல காணமுடியவில்லை. ஆனால் கீர்த்திவாய்ந்த சில வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
அ. “கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரண வைத்தியனும் அங்கே இல்லையோ?” (8:22)
ஆ. “எத்தியோப்பியன் தன் தோலையும், சிவங்கி தன் புள்ளியையும் மாற்றக் கூடுமோ?” (13:23)
இ. “எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது” (17:9)
ஈ. “என் வார்த்தை அக்கினியைப் போலவும் கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப் போலும் இருக்கிறது” (23:29)
உ. “என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் உண்டோ” (32:17,27)
ஊ. “யோசனையில் பெரியவரும் செயலிலே வல்லவருமாயிருக்கிறீர்” (32:19)
எ. “என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உனக்கு உத்தரவு கொடுப்பேன்” (33:3)
💥 பாபிலோன், நேபுகாத்நேச்சார் குறித்த தீர்க்கதரிசனங்கள் அதிகமாக காணப்படும் புத்தகம் இதுவாகும். (21-29 அதிகாரங்கள்.)
💥 மொத்தம் 52 அதிகாரங்களும், 1364 வசனங்களையும் கொண்டுள்ளது.
💥 51-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 45-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது.
💥 எசேக்கியேலைப் போல பலவித உவமையையும், அடையாளச் செயல்களையும் எரேமியா உபயோகப்படுத்துகிறார்.
சணல் கச்சை (13:1-14), மழைத்தாழ்ச்சி (14:1-9), திருமணம் செய்ய தடை (16:1-9), குயவனும் களிமண்டபம் (18:1-11), குயவனின் உடைப்பட்ட கலசம் (19:1-13), அத்திப்பழங்களுள்ள இரண்டு கூடைகள் (24:1-10), அவனுடைய கழுத்தில் பூட்டப்பட்ட நுகம், (27:1-11), அவன் சொந்த ஊரில் நிலம் வாங்குதல் (32:6-15), பார்வோனின் வாசலில் புதைக்கப்பட்ட பெரிய கற்கள் (43:8-13),
💥 எரேமியா தீர்க்கதரிசனம் உரைத்த தேசங்கள்
எகிப்து (46:1-28),
பெலிஸ்தியா (47:1-7), மோவாப் (48:1-47), அம்மோன் (49:1-6),
ஏதோம் (49:7-22)
, தமஸ்கு (49:23-27), அரேபியா (49:28-33), ஏலாம் (49:34-39), பாபிலோன் (50:1-51:64).
💥 மோசேயை தவிர பூர்வ தீர்க்கதரிசிகளில் வேறு யாரை காட்டிலும் எரேமியாவின் வாழ்க்கை வரலாற்றே நம்மிடம் முழுமையாக உள்ளது.
💥 யூதாவின் கடைசி 5 அரசர்களாகிய யோவாகாஸ், யோசியா, யோயாக்கீம், யோயாக்கீன் (எகொனியா), சிதேக்கியா ஆகியோரின் ஆட்சிகாலத்தில் 40 ஆண்டுகள் அவர் எருசலேமில் தீர்க்கதரிசனம் உரைக்கவேண்டும். (எரே.1:2,3)
💥 பின்பு, சிறைபடுத்தப்பட்டிருந்த யூதர்களின் விக்கிரகாராதனை சம்பந்தமாக அவர் எகிப்தில் தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டியிருந்தது. அவருடைய புத்தகம் கி.மு. 580-ல் எழுதி முடிக்கப்பட்டது.
💥 இவ்வாறு எரேமியாவில் அடங்கியுள்ள முக்கியமான காலப்பகுதி 67 ஆண்டுகளாகும்.
💥 யூதா தேசத்தின் வீழ்ச்சியுற்ற நிலைமையைக் கண்டு மிகவும் துக்கப்பட்டதால் அவருக்கு “அழுகின்ற தீர்க்கதரிசி” என்ற பட்டம் கிடைத்தது.
💥 இவரது மரணத்தைக் குறித்த இரண்டு விதமான கருத்துகள் உண்டு.
1). அவர் எகிப்தில் வைத்து யூதர்களால் கல்லெறிந்து கொல்லப்பட்டார் என்று தெர்த்துல்லியன் என்பவர் கூறுகிறார்.
2). எகிப்திலிருந்து பாபிலோனுக்கு சென்றவர் அங்கு மரித்தார் என்று யூத பாரம்பரியம் சொல்லுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக