வெள்ளி, 18 ஜூலை, 2014

ஒற்றனாக காட்டாமல் நண்பனாக காட்டிக் கொள்ளுங்கள்


ஒற்றனாக காட்டாமல் நண்பனாக காட்டிக் கொள்ளுங்கள்

சிறிய வயதிலேயே நம் குழந்தைகள் கற்பதற்கு இணையம் நல்ல ஒரு தூணாக, கலைக் களஞ்சியமாக விளங்குகிறது. எனவே சிறு வயது முதலே, அனைவரும் தங்கள் குழந்தைகளைக் கம்ப்யூட்டருக்கும், இணையத்திற்கும் அறிமுகப்படுத்தி அவற்றைப் பயன்படுத்துவதில் அவர்களைக் கை தேர்ந்தவர்களாக உருவாக்குகின்றனர்.

ஆனால் அதே சமயத்தில், நாணயத்தின் இன்னொரு பக்கம் போல, இதில் கெடுதல் விளைவிக்கும் சமாச்சாரங்களும் அமைந்துள்ளன. கவனக் குறைவான பயன்பாட்டினால், கம்ப்யூட்டர்களை மால்வேர்கள் கைப்பற்றுகின்றன. சிறுவர்களைத் தவறான பாதையில் அழைத்துச் செல்ல பாலியல் தளங்கள் நாள்தோறும் இணையத் தில் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. சிறுவர்களின் நம்பிக்கைகுரியவர்களாகச் சிலர் அவர்களை இணையம் வழி ஏமாற்றுகின்றனர். மிகவும் மோசமான வன்முறையைத் தூண்டும் வகையில் விளையாட்டுக்களும் சிறுவர்களின் மனதைக் கெடுக்கின்றன. இவற்றிலிருந்து நம் குழந்தைகளைக் காப்பது எப்படி?
மேலே தரப்பட்டுள்ள விவகாரங்கள் மட்டுமின்றி, இணையத்திற்கு சிறுவர்கள் அடிமையாவதும் நடக்கிறது. பாதுகாப்பான தளங்களை அவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்றாலும், இணையத்தில் அவர்கள் செலவிடும் அதிகப்படியான நேரம், மற்ற பயனுள்ள அவர்கள் வாழ்விற்குத் தேவையான விஷயங்களில் பயன்படுத்தக் கூடியதாக வீணாகும் நேரமாக மாறுகிறது. மானிட்டர் திரையுடன் ஒன்றிப் போகும் அந்த நேரம் அவர்கள் உடல்நலத்திற்குத் தேவையான பயிற்சிகளில் ஈடுபடலாம்; வெளியே சென்று நல்ல விளையாட்டுக்களை மேற்கொள்ளலாம்; இணையத்தில் கிடைக்கும் நிழல் நண்பர்கள் இல்லாமல், வெளி உலகில் மற்றவர்களோடு பழகலாம்; தங்கள் பாடங்களைப் படிக்கலாம். ஏன்? நன்றாகத் தூங்கி உடலுக்கு ஓய்வு கொடுக்கலாம்.

குழந்தைகளின் இணைய உலாவினைக் கட்டுப்படுத்தவும், கட்டுப்பாடு இருப்பது தெரியாத வகையில் கண்காணிக்கவும் பல சாப்ட்வேர் புரோகிராம்கள் கிடைக்கின்றன. அதற்கு முன் உங்கள் குழந்தைகளைக் கண்காணிக்க சாப்ட்வேர் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திடும் முன், நீங்கள் நல்ல பெற்றோராக இதனை மேற்கொள்கிறீர்கள் என்று அவர்களுக்கு உணர்த்துங்கள். அவர்களுக்கும் அவர்கள் வழியாகக் கம்ப்யூட்டருக்கும் ஏற்பட இருக்கும் இடர்களைச் சுட்டிக் காட்டுங்கள். அவர்களுடைய தனிப்பட்ட வாழ்வியல் சூழ்நிலைகளில் நீங்கள் தலையிடுவது போன்ற தோற்றத்தைத் தர வேண்டாம். நீங்கள் அல்லது நீங்கள் நிறுவும் சாப்ட்வேர் புரோகிராம்களின் தடைகளைக் கூறுங்கள். அவற்றை யும் அவர்கள் மீறும் பட்சத்தில், அதனையும் நீங்கள் கண்டறிய முடியும் என்று உணர்த்துங்கள்.

சரி, இதற்கான சாப்ட்வேர் புரோகிராம்கள் எவை? அவை எங்கு கிடைக்கின்றன என்று பார்ப்போமா! விண்டோஸ் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டம் பெற்றோர் தடுப்பு புரோகிராம் (Parental Controls program) ஒன்றைக் கொண்டுள்ளது. அதன் மூலம் எந்த நேரத்தில் உங்கள் குழந்தைகள் இணைய தொடர்பினை மேற்கொள்ள முடியும் என்பதனையும், எந்த கேம்ஸ் மற்றும் புரோகிராம்களை அவர்கள் பயன்படுத்த முடியும் என்பதனையும் நீங்கள் வரையறை செய்திடலாம். எந்த வகை தளங்களை அவர்கள் பார்க்கக் கூடாது என வரையறை செய்து தடை விதிக்கலாம். அல்லது எவற்றை அவர்கள் பார்க்கலாம் (whitelisting) எனவும் அனுமதிக்கலாம். 

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மேலே விஸ்டாவில் உள்ள வசதி தரப்படவில்லை. இதனை மேற்கொள்ள Windows Live Family Safety என்ற மைக்ரோசாப்ட் தரும் புரோகிராம் ஒன்றை http://explore.live. com/windowslivefamilysafety?os=other என்ற முகவரி யில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்திட வேண்டும்.
இந்த வேலைகளை மேற்கொள்ள, உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் அட்மினிஸ்ட் ரேட்டராக பதிவு செய்து இயங்க வேண்டும். இவற்றை செட் செய்திட Start கிளிக் செய்து parental என்று டைப் செய்து என்டர் தட்டவும். பின்னர் Parental Controls என்பதில் கிளிக் செய்திடவும். இது உங்களுக்கான பல வழிகளைத் தரும்.

எக்ஸ்பி சிஸ்டத்தில் கிடைக்கும் இத்தகைய வசதி அவ்வளவாகக் குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை. ஆனால், எக்ஸ்பி சிஸ்டத்தில் இயங்கி இந்த வசதியைத் தரும் புரோகிராம் ஒன்று http://onlinefamily. norton.com/என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. இதன் பெயர் நார்டன் ஆன்லைன் பேமிலி (Norton Online Family). இந்த புரோகிராம் மிகவும் பயனுள்ளதாக வடிவமைக் கப்பட்டுள்ளது. 

இந்த தடை விதிக்கும் புரோகிராம் களைக் காட்டிலும், உங்கள் குழந்தைகளை நீங்கள் அணுகும் முறை மிகவும் முக்கியம். அவர்களைக் கண்காணிக்கும் ஒற்றனாக உங்களைக் காட்டிக் கொள்ளாமல், இணையத்தில் அவர்களை வழி நடத்தும் நண்பனாகக் காட்டிக் கொள்ளுங்கள். தீமைகளையும் கெடுதல்களையும் சுட்டிக் காட்டுங்கள். அப்போது அவர்களிடம் உங்கள் மதிப்பும் உயரும்.
பாலியல் தளங்கள் என்பது ஒரு வகை தீமை மட்டுமே. கம்ப்யூட்டரில் அளவுக்கதிகமாக நேரம் செலவிடுவது அதைக் காட்டிலும் அதிக தீமை விளைவிக்கும் செயல்பாடாகும். எனவே அதனையும் கண்காணிக்கும் வகையில் உங்கள் கவனிப்பு இருக்க வேண்டும்

ஸ்மார்ட் போன் ஏராளமானோரை முடக்கிப்போட்டுள்ளது

 

ஸ்மார்ட்

போன்

ஏராளமானோரை முடக்கிப்போட்டுள்ளது


"இளைஞர்களில் பெரும்பாலோர், தங்களிடம், ஸ்மார்ட் போன் இல்லாமல் போய்விடுமோ" என, மனதளவில் பயப்படுவதாக, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, சிஸ்கோ என்ற பிரபல தொலைத் தொடர்பு நிறுவனம்,  30 வயதுக்கு கீழ் உள்ள , 3,800 பேரிடம் ஆய்வு மேற்கொண்டது. இதில், பெரும்பாலானவர்கள், ஸ்மார்ட் போனுக்கு அடிமை ஆகிவிட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, சிஸ்கோ முதன்மை தொழில்நுட்ப அலுவலர், கெவின் பிளாக் கூறியதாவது: ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகிவிட்ட பலர், ஒருவேளை அந்தபோன் தொலைந்து போய்விட்டால் தங்களால் எதுவுமே செய்யமுடியாது என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்.

அவர்களது ஆழ்மனதிலும் இந்த எண்ணம் நன்கு வேரூன்றிவிட்டதை எங்களால் உணரமுடிந்தது. ஸ்மார்ட் போன் இல்லாவிட்டால், தங்களது வாழ்க்கையே பறிபோய் விட்டதாக பலர் கருதுகின்றனர்.

நவீன யுகத்தின் கதாநாயகனாக உள்ள மொபைல் போன், "நோமோ போபியா" என்ற உளவியல் ரீதியிலான குறைபாட்டையும் மக்களிடையே ஏற்படுத்திவிட்டது. ஐந்து பேரில், ஒருவர் வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும் போதே, எஸ்.எம்.எஸ்., அனுப்பும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இவ்வாறு கெவின் பிளாக் கூறினார்.

காலையில் படுக்கையில் இருந்து எழுவது முதல், இரவு படுக்கப் போகும் வரை, தொலைபேசியே கதி என, ஏராளமான இளைஞர்கள் மாறிப்போயிருந்ததை இந்த ஆய்வு உறுதிபடுத்தியுள்ளது.

குயின்ஸ்லாந்தை சேர்ந்த, கம்ப்யூட்டர் பாதுகாப்பு துறையில் பணியாற்றி வரும், கைக்கேல் கார் க்ரெய்க் என்பவர் குறிப்பிடுகையில், "ஸ்மார்ட் போன் மீதான இந்த மோகம் பலரை பன்படுத்தியிருந்தாலும் ஏராளமானோரை முடக்கிப்போட்டுள்ளது என்பதுதான் நிதர்சனம்.

10 நிமிடத்திற்கு ஒரு முறை, இவர்கள், தங்களது மொபைல் போனில், -மெயில் வந்துள்ளதா என்பதை தொடர்ந்து சோதிப்பவர்களாக இருக்கின்றனர். இவ்வாறு நாள் ஒன்றுக்கு, 96 முறை இப்படி சோதிக்கின்றனர்" என்றார்.

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...