புதன், 30 டிசம்பர், 2015

வெளிப்படுத்தின விசேஷம் - போராட்டமும் முடிவும்

போராட்டமும் முடிவும்

🌹வெளிப்படுத்தின விசேஷம் 🌹

☀ மூல மொழியாகிய கிரேக்கத்தில் இப்புத்தகம் “Apokalypsis” (Book of Revelation) என்று அழைக்கப்படுகிறது.

☀ அப்பாக்கலிப்ஸிஸ் (Apokalypsis [Apocalypse]) என்பதற்கு “திறத்தல்” அல்லது “திரை நீக்குதல்” என்று அர்த்தம்.

☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே கடைசியும், 66-வது புத்தகமாகவும் வருகிறது.

☀ இந்த புத்தகத்தின் எழுத்தாளர் யோவான்; இயேசு கிறிஸ்துவின் அடிமை என்றும், சகோதரனும், உபத்திரவத்தில் பங்காளியும், பத்மு தீவுக்கு நாடுகடத்தப்பட்டிருந்தவர் என்றும் இவரைப் பற்றி நமக்கு சொல்லப்படுகிறது.

☀ இந்த யோவான் யாருக்காக இதை எழுதினாரோ அவர்களுக்கு நன்கு அறிமுகமானவர்; ஆதலால் தன்னை யாரென மேலும் அடையாளங்காட்ட வேண்டிய அவசியமில்லை.

☀ அவர் அப்போஸ்தலன் யோவானாகவே இருக்க வேண்டும். இந்த முடிவை பெரும்பாலான பூர்வ சரித்திராசிரியர்கள் ஆதரிக்கின்றனர்.

☀ யோவானின் மற்ற புத்தகங்கள் அன்பை பெருமளவு வலியுறுத்துவது உண்மைதான். அதற்காக, அதிக வல்லமை வாய்ந்த, ஊக்கமிக்க இந்த வெளிப்படுத்துதலை அவர் எழுதியிருக்க முடியாதென்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை.

☀ யோவானும் அவருடைய சகோதரனாகிய யாக்கோபும்தான் ஒரு சமாரிய பட்டணத்தின் மீது மிகுந்த கோபமூண்டவர்களாய் வானத்திலிருந்து அக்கினி விழுந்து அதிலிருந்தவர்களைப் பட்சிப்பதற்கு அனுமதி கேட்டனர். இதனிமித்தமே இவர்களுக்கு, “பொவனெர்கேஸ்” அல்லது “இடிமுழக்க மக்கள்” என்ற பட்டப் பெயர் கொடுக்கப்பட்டது. (மாற். 3:17; லூக். 9:54)

☀ வெளிப்படுத்துதலில் சொல்லப்பட்ட விஷயம் வேறுபட்டது என்பதை நாம் நினைவில் வைக்கையில், இதன் எழுத்துநடையிலுள்ள வேறுபாடு எந்த விதத்திலும் இடையூறாய் இருக்காது.

☀ இந்தத் தரிசனங்களில் யோவான் கண்டது இதற்கு முன் அவர் கண்ட எதற்கும் ஒத்ததாய் இருக்கவில்லை.

☀ ஆரம்ப கால அத்தாட்சியின்படி, எருசலேமின் அழிவுக்குப் பெரும்பாலும் 26 ஆண்டுகளுக்குப் பின், ஏறக்குறைய கி.பி. 96-ல் யோவான் வெளிப்படுத்துதலை எழுதினார். இது பேரரசன் டொமிஷியனுடைய ஆட்சி காலம் முடிவடையும் சமயமாக இருந்திருக்கும்.

☀ எருசலேமை அழிப்பதற்கு ரோம படையை வழிநடத்திய டைட்டஸின் சகோதரன்தான் டொமிஷியன்.

☀ டைட்டஸின் மரணத்திற்குப்பின் இவன் பேரரசனானான்; இது வெளிப்படுத்துதல் புத்தகம் எழுதப்பட்டதற்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது.

☀ டொமிஷியன் தன்னை கடவுளாக வணங்க வேண்டுமென்று இவன் கட்டளையிட்டு, (“நம்முடைய கர்த்தரும் கடவுளும்” என்று அர்த்தப்படும்) டொமினஸ் எட் டியஸ் நாஸ்டர் என்ற பட்டப்பெயரை தனக்கு சூட்டிக் கொண்டான்.

☀ பொய்க் கடவுள்களை வணங்கினவர்களுக்குப் பேரரசனை வணங்குவதில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை; ஆனால் ஆரம்ப கால கிறிஸ்தவர்களால் இதில் ஈடுபட முடியாது. இந்த விஷயத்தில் அவர்கள் தங்கள் விசுவாசத்தை விட்டுக்கொடுக்க மறுத்தனர்.

☀ இவ்வாறு, டொமிஷியனின் ஆட்சி கால முடிவில் (கி.பி. 81-96), கிறிஸ்தவர்களின்மீது கொடூர துன்புறுத்துதல் துவங்கியது. டொமிஷியனே யோவானைப் பத்மு தீவுக்கு நாடுகடத்தினானென கருதப்படுகிறது.

☀ கி.பி. 96-ல் டொமிஷியன் படுகொலை செய்யப்பட்டபோது, அவனுக்குப் பதில் சகிப்புத்தன்மை மிக்க பேரரசன் நெர்வா பதவி ஏற்றான்; இவனே யோவானை விடுதலை செய்ததாக தோன்றுகிறது.

☀ பத்மு தீவில் சிறைப்பட்டிருந்த சமயத்திலேயே யோவான், தான் எழுத்தில் வடித்த தீர்க்கத்தரிசனங்களைப் பெற்றார்.

☀ எதிர்காலத்தில் நடக்கவிருக்கின்ற காரியங்களைக் குறித்து தேவன் தனக்களித்த தரிசனங்களை ஆசியாவின் 7 சபைகளுக்கும் யோவான் எழுதுகிறார். கிறிஸ்துவினுடைய இரண்டாம் வருகையில், பரிசுத்தவான்களுக்கு உபத்திரவம், துன்மார்க்கருக்குக் கோபாக்கினை மற்றும் தேவனுடைய மக்களுக்கு இறுதியான ஜெயமும், பலனும் கிடைப்பதைப் பற்றி அறிவிக்குமாறு எழுதப்பட்டது.

☀ சாத்தானுடைய தீய வல்லமைகளை முறியடித்து, தேவனோடு ஜெயங்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கு அவர் பலனளிக்கும் ஒரு முடிவு காலம் சமீபமாயிருக்கிறதென்பதை அவர்களுக்கு எடுத்துக் காட்டுவதன் மூலம், தங்களுக்கு நேரிடும் உபத்திரவங்களைப் பொறுமையோடு சகிக்கும்படி அவர்களை இப்புத்தகம் ஊக்குவிக்கின்றது.

☀ இயேசு கிறிஸ்துவினுடைய அதிகதிகமான கர்த்தத்துவத்தைக் குறித்து நான்கு மடங்கான தரிசனம்; ஒவ்வொரு தரிசனத்திலும் “ஆவிக்குள்ளானேன்” என்ற சொற்றொடர் இடம் பெறுகிறது. (வெளி. 1:10; 4:2; 17:3; 21:10).

1. முதலாம் தரிசனம்: கிறிஸ்து - சபையின் கர்த்தர் (வெளி. 1:9-3:22).

2. இரண்டாம் தரிசனம்: கிறிஸ்து - சரித்திரத்தின் கர்த்தர் (வெளி. 4:1-16:21).

3. மூன்றாம் தரிசனம்: கிறிஸ்து - கர்த்தாதி கர்த்தர் (வெளி 17:1-21:10).

4. நான்காம் தரிசனம்: கிறிஸ்து - சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் (வெளி 21:11-22:5).

☀ நிகழ்ச்சிகள் உருவகமாகவும், எண்களின் மூலமாகவும் விவரிக்கப்பட்டுள்ளது. உதாரணம்: முத்திரை, கோபகலசம், கலியாணம், ஆட்டுக்குட்டி; 7 என்ற எண் சுமார் 54 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. 6, 12, 24, 666, 1260, 1,44,000 ஆகிய எண்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

☀ இப்புத்தகத்தை மூன்று பகுதியாக பகுத்து படிக்கலாம்: அவை:

1. நீ கண்டவை:

உயிர்த்தெழுந்த கிறிஸ்து (வெளி. 1:9-20)

2. இருப்பவை:

ஏழு சபைகளின் நிலை (வெளி. 2:1-3:22)

3. இனி சம்பவிப்பவை:

(இதில் 3 வகை) (வெளி. 4:1-22)

அ) சபைக்கு சம்பவிப்பவை:

✍ பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படல் (4:1-5)

✍ பரலோக ஆராதனை (4:1-5:14)

✍ ஆட்டுக்குட்டியானவரின் கலியாணம் (19:9)

ஆ) யூதருக்கு சம்பவிப்பது:

✍ உபத்திரவம் (12:1-17)

✍ செய்தி பெறுதல்: இரு சாட்சிகள் (11:1-12)

✍ முத்திரையிடப்பட்டு பாதுகாப்பு (7,14)

இ) உலகத்திற்கு சம்பவிப்பது:

✍ அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி (6:1-13)

☀ ஏழு முத்திரைகள்:

1. ஆறு முத்திரைகள் உடைக்கப்படல் (6:1-17)

2. இடைவெளி: இரு ஜனத்திரள் (7:1-17)

3. ஏழாம் முத்திரை (8:1-6)

4. ஏழு எக்காளங்கள்:

✍ ஆறு எக்காளம் ஊதப்படல் (8:7-9:21)

✍ 2ம் இடைவெளி சிறு புத்தகம் (10:1-11)

5. ஏழாம் எக்காளம்: (11:15-19)

✍ 3ம் இடைவெளி 7 கோப கலசங்களையுடைய தூதர்கள் (15:1-8)

✍ 7 கோப கலசங்கள் (16:1-21)

6. மார்க்க அமைப்பு வீழ்ச்சி: (17:1-18)

7. உலக பாபிலோன் வீழ்ச்சி: (18:1-24)

✍ அர்மகதோன் யுத்தம் (19:11-20; 14:17-20)

✍ ஆயிர வருட அரசாட்சி (20:1-6)

✍ இறுதி யுத்தம் (20:7-10)

✍ வெள்ளை சிங்காசன நியாயத் தீர்ப்பு (20:11-15)

✍ புதிய வானம், புதிய பூமி (21:1)

☀ இப்புத்தகத்தில் நாம் காணும் முக்கிய உண்மைகள்:

1. தேவன் சர்வ வல்லவர் (4:8; 15:3; 19:6; 11:7)

💥 பரிசுத்தர் (4:8; 15:4)

💥 ஆராதனைக்குப் பாத்திரர் (4:11; 5:12)

💥 நீதி செய்பவர் (19:6)

2. தேவன் ராஜ்யபாரம் பண்ணுபவர் - யாவும் அவருடைய ஆளுகைக்கு உட்பட்டது. (19:6; 17:14)

3. அநீதி, அநியாயத்திற்கு தேவன் தீர்ப்பளிப்பார் - சாத்தானுக்கு முடிவு உண்டு.

4. தேவன் ஒருவரே, ஆராதனைக்கு உரியவர்; தேவனால் பயன்படுபவர்கள் அல்ல (22:8,9)

5. தேவன் தம்முடையவர்களைப் பாதுகாப்பவர் (அதிகாரம்: 7,12)

6. தேவன் நம்மிலுள்ள நற்காரியங்களை பாராட்டுபவர்; குறைகளை சுட்டிக் காண்பிக்கிறவர் (அதிகாரம்: 2,3)

7. மனந்திரும்ப வாய்ப்பளிப்பவர் (அதிகாரம்: 2,3,11)

8. தேவனுடைய கிருபையை அவமாக்கினால் தண்டனைக்கு தப்ப இயலாது (அதிகாரம்: 6,9)

9. அவரவரின் கிரியைக்கு நிச்சயம் பிரதி பலன் உண்டு (22:12)

10. நியாயத்தீர்ப்பு உண்டு; நரகம் உண்மையானது. நரகத்தில் இடம் பெறுபவர் (20:15: 21:8)

11. நித்திய மகிமை, பரலோகம், நித்திய வாழ்வு உண்மையானவை.

☀ தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது:

✍ அவர் சொல்லுவதை கவனமாக கேட்பது, ஜாக்கிரதையாகக் கைக்கொள்ளுவது, ஜெயிக்கும் வாழ்க்கை (12:10).

✍ உண்மையுள்ள வாழ்க்கை (17:14) மேலும், பரிசுத்தமாகுதல் (22:11)

✍ வசனத்தின்படி வாழ்தல் (1:3)

✍ முடிவு பரியந்தம் நிலைத்திருத்தல்.

☀ மொத்தம் 22 அதிகாரங்களும், 404 வசனங்களையும் கொண்டுள்ளது.

☀ 2-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 15-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது.

☀ வெளிப்படுத்தின விசேஷ சுருக்கம்.

வேதத்தின் இறுதி புத்தகமான வெளிப்படுத்தின விசேஷம் ஒன்றும் புரிந்துகொள்ளுவதற்கு கடினமான ஒரு புத்தகமல்ல.அதன் சீரான அமைப்பை மட்டும் நாம் அறிந்துகொண்டாலே இன்னும் ஆழமாக அதை நாம் படிக்கலாம்.

வெளிப்படுத்தின விசேஷத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அப்போஸ்தலனாகிய யோவானுக்கு “கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும்” காட்டிக்கொடுக்கிறார்.(வெளி:1:19). அதாவது கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் காட்டிக்கொடுக்கிறார்.

✍ அவர் கண்டவை என்ன? அவை முதலாம் அதிகாரத்தில் வருகிறது. சீஷனாகிய யோவான், மரித்து உயிரோடெழுந்த இயேசுவை அவர் மகிமையிலும் வல்லமையிலும் காண்கிறார்.இது கடந்தகாலம்.

✍ இருக்கிறவை என்ன? அவை இரண்டாம் மற்றும் மூன்றாம் அதிகாரத்தில் வருகிறது.போதகரான யோவான் தன் சபைகளுக்கு கடிதங்களை எழுதுகிறார். இது சபையின் காலம். ஏறத்தாழ கி.பி. 33ல் தொடங்கி இன்றுவரைக்கும் அது நீடிக்கிறது. சபை இரகசிய வருகையிலே எடுத்துக்கொள்ளப்படும் வரை அது தொடரும். இது நிகழ்காலம்.

✍ இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கப்போகிறவை என்ன? நான்காம் மற்றும் ஐந்தாம் அதிகாரத்தில் இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்பட்ட சபையை நாம் பரலோகத்திலே காணலாம். ஏழு வருட காலம் இது நீடிக்கும்.

அதே வேளை பூமியிலே முதல் மூன்றரை வருட உபத்திரவ காலமும் பின்பு இன்னும் மூன்றரை வருட மகா உபத்திரவகாலமும் நடைபெறும். அதுவே அந்திக்கிறிஸ்துவின் ஆட்சிக்காலம். இதை ஆறாம் அதிகாரம் முதல் பத்தொன்பதாம் அதிகாரம் வரை நாம் காணலாம்.

அந்த ஏழு வருட முடிவில் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நடைபெறும். இஸ்ரேலுக்கு எதிராக வரும் அர்மகெதோன் யுத்தத்தில் கர்த்தர் வெற்றி சிறப்பார், சாத்தான் பாதாளத்திலே அடைக்கப்படுவான். இயேசுகிறிஸ்து பூமியிலே ஆயிரம் வருடம் அரசாட்சியை செய்வார். இதை இருபதாம் அதிகாரத்தில் காணலாம்.

ஆயிர வருட முடிவில் சாத்தான் பாதாளத்திலிருந்து வெளியே விடப்படுவான். அவன் உலக ஜாதிகளையெல்லாம் கூட்டிக்கொண்டு வர கோகு மாகோகு எனும் இறுதி யுத்தம் நடைபெறும். சாத்தான் எரிகிற நரகத்திலே தள்ளப்படுவான். இந்த பழைய வானமும் பூமியும் ஒழிந்துபோம்.

இருபத்தி ஒன்று மற்றும் இருபத்தி இரண்டாம் அதிகாரத்தில் புதிய வானம் புதிய பூமி உருவாக இனி அங்கே மரணமில்லை. கண்ணீர் இல்லை. என்றென்றும் கர்த்தரோடே கூட இருப்போம். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்...

திங்கள், 28 டிசம்பர், 2015

வேதாகம புதையல்

💥வேதாகம புதையல்💥

பழைய ஏற்பாட்டிலேயே மிகப் பழமையான புத்தகமாக சிலர் யோபுவையும் (கி.மு.1500), வேறு சிலரோ முதல் ஐந்து ஆகமங்களையும் (கி.மு 1446-1406) குறிப்பிடுகின்றனர்.
பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து ஆகமங்களையும் எழுதியது மோசே. இவற்றை எபிரேய மொழியில் தோரா (Torah)என்பர். இது தான் யூதர்களின் புனிதப் புத்தகம். நாம் பஞ்சாகமம் என்கிறோம். Pentateuch என்று ஆங்கிலத்திலே கூறுகின்றனர்.

• வேதாகமம் ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பிய கண்டங்களை மையமாக கொண்டுள்ளது. 66 புத்தகங்கள், 40 ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். 1600 வருட இடைவெளியில் எழுதப்பட்டது. எபிரேயம், கிரேக்கம், அராமிக் மொழிகளில் ஆதியில் எழுதப்பட்டது. கிறிஸ்துவை நோக்கியே எழுதப்பட்டுள்ளதை அறியலாம்.

• பழைய ஏற்பாட்டில் மிக சமீபத்தில் எழுதப்பட்ட புத்தகம் மல்கியா.இது எழுதப்பட்ட காலம் கி.மு 400.
புதிய ஏற்பாட்டின் மிகப் பழமையான புத்தகமாக கருதப்படுவது யாக்கோபு. இது கி.பி 45-ல் எழுதப்பட்டது.
புதிய ஏற்பாட்டில் சமீபமாய் எழுதப்பட்ட புத்தகம் வெளிப்படுத்தின விசேசம், இது கி.பி 95-ல் எழுதப்பட்டது.

• புதிய ஏற்பாட்டிற்க்கும் பழைய ஏற்பாட்டிற்க்கும் இடைப்பட்ட காலம் 400 ஆண்டுகள். கடவுளின் குரல் அப்போது இல்லை.

• எஸ்ரா 6 -க்கும் 7-க்கும் இடையே அந்த காலகட்டத்திலே வாழ்ந்த கன்பூசியசும் புத்தரும் மரித்துப் போனார்கள்.
(கிமு 516-458)

• சங்கீத புத்தகத்தில் ஒரு ஹாட்ரிக் சாதனை உண்டு. வேதாகமத்தின் மிகச் சிறிய அதிகாரம் சங்கீதம் 117, நடுவான வசனம் சங்கீதம் 118-ல் உள்ளது. மிக நீளமான அதிகாரம் சங்கீதம் 119.
நடுவான வார்த்தை கர்த்தர் என அமைந்து விட்டது.

• சங்கீதம் 21 கடந்த காலத்தையும், 22 சங்கீதம் நிகழ்காலத்தையும் 23 சங்கீதம் எதிர்காலத்தையும் குறிப்பதை படித்து உணரலாம்.

• சாலமோன் ஒரு தீர்க்கதரிசனத்தை மாத்திரம் உரைத்துள்ளார்.

• II இராஜாக்கள் 19 -ம் அதிகாரமும் ஏசாயா 37-ம் அதிகாரமும் பிரதி எடுத்தது போல் ஒரே மாதிரியானவை.

• I கொரிந்தியர் 13-ம் அதிகாரத்தை “அன்பின் அதிகாரம்” என்றால், எபிரெயர் 11-ம் அதிகாரத்தை “விசுவாசத்தின் அதிகாரம்” எனலாம்.

• வேதாகமத்தில் பாட்டி என்கின்ற உறவுமுறை குறித்து ஒரே ஒருமுறைதான் குறிப்பிடப்பட்டுள்ளது.
(II தீமோத்தேயு 1:5.)

• வேதாகமத்தில் மிக அதிகமாக பேசப்படும் விலங்கு ஆடு. நாய்கள் பற்றி 14 முறையும் சிங்கத்தை குறித்து 55 முறையும் குறிப்பிடபட்டுள்ளது. 133 வகையான விலங்குகள் குறிக்கப்பட்டுள்ளன.
வேதாகமத்தில் பூனை பற்றிய குறிப்பு ஒருமுறை கூட இல்லை.
கழுதை பேசிய நிகழ்ச்சி கர்த்தரின் நகைச்சுவை உணர்வு என்று பலர் எழுதியிருந்தாலும் உலகில் அவர் படைத்த எல்லோரும் பேசுகிறார்கள் என்பதுதான் உண்மை. வெ.விசேசத்தில் எக்காளம் பேசுவதால் சொல்ல முடிகிறது.

• வேதாகமத்தின் படி மிக அதிகமான நாட்கள் பூமியில் உயிரோடு வாழ்ந்தவர் மெத்தூசலா. இவர் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம் வாழ்ந்தார்.  (ஆதி:5:27)

• கர்த்தரோடு சஞ்சரித்தவர்கள்
(Walk with God)ஏனோக்கும் நோவாவும்.  பெரும்பாலான தீர்க்கதரிசிகளின் இறப்பு வேதனை மிகுந்தது. சில தீர்க்கதரிசிகள் சமாதானத்தோடே மரித்தனர், உதாரணமாக டேனியல், நாத்தான், செப்பானியா, மல்கியாவை சொல்லலாம்.

• இருவர் வேதாகமத்தின் படி மரிக்கவேயில்லை.ஒருவர் ஏனோக்கு (ஆதி:5 :22-24). இன்னொருவர் எலியா (IIஇராஜா:2:11). இவ்விருவரும் உயிரோடிருக்கும் போதே தேவனால் பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்கள்.

• வேதாகமத்தில் மிக பராக்கிரமசாலியான மனுஷன் சிம்சோன்.
மிக ஞானியாக திகழ்ந்தவர் சாலோமோன். மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தவர் மோசே.(எண்:12:3)
கர்த்ருக்கு பிரியமானவன் தாவீது. ( 2 சாமுவேல்
மிகச் சிறந்த வீரனாக திகழ்ந்தவர் கிதியோன். தேவ உதவியோடு 135,000 மீதியானியர்களை வெட்டிப்போட்டவன்.

• அதிக மனைவிகளையும், மறுமனையாட்டிகளையும் கொண்டிருந்தவர் சாலமோன் இராஜா.700 மனைவிகளையும் 300 மறுமனையாட்டிகளையும் கொண்டிருந்தார்.

• வேதாகமத்தில் மிக உயரமான மனிதனாக வருபவன் கோலியாத். ஒன்பதரை அடி உயரம். குள்ளமான மனிதனாக வர்ணிக்கப்பட்டவர் சகேயு.

• எபிரேயன் என வேதாகமத்தில் முதன் முதலில் அழைக்கப்பட்டவர் ஆபிரகாம். எபிரேயர்கள் முதன் முதலாக யூதர்கள் என அழைக்கப்பட்டது
II இராஜாக்கள்:16:6-ல்.

• கிறிஸ்தவர்கள் அல்லது கிறிஸ்தவன் எனும் சொல் வேதாகமத்தில் மொத்தம் மூன்று இடங்களில் மட்டுமே குறிக்கப்பட்டுள்ளது. அப் 11:26, 26:28 மற்றும்
I பேதுரு:4:16

• எபிரேயத்தில் இயேசுவை Yeshua என்பதுதான் பிதா இட்ட பெயர். தமிழ் உச்சரிப்பு அதே மாதிரி இருக்கும்.
கிரேக்க மொழியில் Jesous என்றும் ஆங்கிலத்தில் Jesus என்றும் வழங்குகின்றனர். கிரேக்க மொழி வழக்கில் இல்லை. மலையாளத்தில் യേശ (Yeshu),  மராட்டியில் Yeshu, தெலுங்கில் Yesu, கன்னடத்தில் Yesu, இந்தியில்
Yisu என அழைக்கின்றனர். தமிழ் உச்சரிப்பில் ஏசு என்று பொதுவாக உலகம் முழுதும் அழைக்கப்பட்டாலும், ஜீசஸ் என ஆங்கிலத்திலும், சில மொழிகளிலும் இயேசு அழைக்கப்படுகிறார். எம்மொழியிலும் நம் ஜெபத்தை கேட்கிறவர் கர்த்தர்.

• வேதாகமத்தில் அந்திக்கிறிஸ்து எனும் வார்த்தை யோவான் சீஷனால் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர் நான்கு முறை இந்த வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். மூன்று முறை  I யோவானிலும், ஒருமுறை II யோவானிலும் வருகிறது. வெளிப்படுத்தின விசேசம் புத்தகத்தில் அந்திக்கிறிஸ்து எனும் வார்த்தை பயன்படுத்தப் படவேயில்லை.
கள்ளத்தீர்க்கதரிசி என்ற வார்த்தை 4 சுவிசேசங்களிலும் வெ. விசேசத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

• புதிய ஏற்பாட்டின் அதிகமான புத்தகங்களை எழுதியது அப்போஸ்தலனாகிய பவுல். இவர் எழுதிய புத்தகங்கள் மொத்தம் 14 .

• எஸ்தர் 8: 9 தான் நீளமான வசனம்,  குறைவான வசனம் :

யோவான் 11: 35
” இயேசு கண்ணீர் விட்டார்.”

• நீளமான வார்த்தை:
   ஏசாயா 8: 1
” மகேர் – சாலால் – அஷ் – பாஸ் ”

• பைபிளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஜான் வொய்கிளிப் முதன்முதலில் முயற்ச்சித்தார், அதை 1338 ல்
ஜான் புர்வே நிறைவு செய்தார்.

• உலகில் முதன்முதலாக 1450 ல் குட்டன்பெர்க் அச்சகத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தகம் பைபிள்தான். பைபிள் அதிகாரங்களாகவும் வசனத்திற்க்கு எண்கள் போடப்பட்டும் 1560 ம் ஆண்டு வெளிவந்தது ஜெனிவா பைபிள் பதிப்பில்தான்.

• அமெரிக்கா அச்சகத்தால் 1663 ம் ஆண்டில் இந்திய மொழியில் பைபிள் அச்சடிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் முதன்முதலாக தமிழில் அச்சடிக்கப்பட்ட புத்தகம் பைபிள் ஆகும்.

• பைபிள் உலகில் உள்ள 1200 மொழிகளில் முழுவதுமாகவோ பகுதியாகவே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
உலகில் அதிகமாக விற்பனையாகும் புத்தகமும் பைபிள்தான்.

• ஒரு சாதாரண மனிதன் 70 மணி நேரத்தில் பைபிளை தொடர்ந்து படித்து முடித்து விடலாம்.

• ஒரு நாளைக்கு 3 அதிகாரம் – ஞாயிற்றுக் கிழமை 5 அதிகாரமாக படித்தால் ஒரு வருடத்தில் படித்து விடலாம்.

• ஒரு நாளைக்கு 14 அதிகாரம் படித்தால்
3 மாதத்தில் படித்து விடலாம்.

யூதா - விசுவாசத்திற்காக போராடுதல்

விசுவாசத்திற்காக போராடுதல்

        🌹யூதா 🌹

☀ மூல மொழியாகிய கிரேக்கத்தில் இப்புத்தகம் “Iouda” (Letter [Epistle] of Jude) என்று அழைக்கப்படுகிறது.

☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 65-வது புத்தகமாக வருகிறது.

☀ இந்த நிருபத்தை “இயேசுகிறிஸ்துவின் அடியானும் யாக்கோபின் சகோதரனுமான யூதா,... அழைக்கப்பட்டவர்களுக்கு” எழுதினாரென்று தொடக்க வார்த்தைகள் நமக்குச் சொல்கின்றன.

☀ இயேசுவின் 12 அப்போஸ்தலர்களில் 2 பேர் யூதா என்ற பெயரில் இருந்தனர். (லூக். 6:16)

☀ யூதா தன்னை அப்போஸ்தலன் என சொல்லிக் கொள்வதில்லை; அதற்குப் பதிலாக, அப்போஸ்தலர்களை ‘அவர்கள்’ என்ற படர்க்கைச் சொல்லால் குறிப்பிட்டு தன்னை அவர்களிலிருந்து பிரித்துக் காட்டுகிறார். (யூ. 1:17,18)

☀ யூதா, தன்னை ‘யாக்கோபின் சகோதரன்’ என குறிப்பிடுகிறார். யாக்கோபு நிருபத்தின் எழுத்தாளரான, இயேசுவின் சகோதரனை இது குறிக்கிறது. (1:1)

☀ எருசலேமிலிருந்த சபையின் “தூண்களில்” ஒருவராக இருந்த இந்த யாக்கோபு எல்லாராலும் நன்கு அறியப்பட்டவர்; ஆகவேதான் யூதா தன்னை அவரோடு சம்பந்தப்படுத்தி அடையாளம் காட்டுகிறார். அப்படியென்றால் இவர் இயேசுவின் சகோதரன், மற்றவர்களும் அவ்வாறே கருதினர். (கலா. 1:19; 2:9; மத். 13:55; மாற். 6:3)

☀ எனினும், இயேசுவுடனான இரத்த சம்பந்தமான உறவுக்கு யூதா முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ‘இயேசுகிறிஸ்துவின் அடியான்’ என தன் ஆவிக்குரிய உறவையே மனத்தாழ்மையுடன் வலியுறுத்தினார். (1 கொ. 7:22; 2 கொ. 5:16; மத். 20:27).

☀ கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் மியூராடோரியன் சுருளில் இது குறிப்பிடப்பட்டிருக்கிறது.

☀ குறிப்பிட்ட ஒரு சபையையோ தனி நபரையோ அவர் குறிப்பிடாமல், “அழைக்கப்பட்டவர்களுக்கு” என யூதா எழுதுகிறார்; ஆகவே அவருடைய நிருபம் கிறிஸ்தவர்கள் எல்லாரும் வாசிப்பதற்கு அனுப்பப்பட வேண்டிய ஒரு பொது நிருபம்.

☀ யூதா புத்தகம் எங்கு எழுதப்பட்டது என குறிப்பிடப்படாவிட்டாலும், பலஸ்தீனாவாகவே பெரும்பாலும் இருக்கலாம்.

☀ இப்புத்தகம் எழுதப்பட்ட காலப்பகுதியைத் திட்டவட்டமாக குறிப்பிடுவதும் கடினம். எனினும் கிறிஸ்தவ சபை நன்கு வளர்ச்சியடைந்த காலமாய் அது இருந்திருக்க வேண்டும்; ஏனெனில், “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலரால் முன் சொல்லப்பட்ட வார்த்தைக”ளிடம் யூதா கவனத்தைத் திருப்பி, 2 பேதுரு 3:3-ஐயும் மேற்கோள் காட்டுவதிலிருந்து இது தெரிகிறது. (யூ. 1:17,18)

☀ மேலும், யூதாவுக்கும் இரண்டு பேதுருவின் இரண்டாம் அதிகாரத்துக்கும் நெருங்கிய ஒப்புமை உள்ளது.

☀ ஏறக்குறைய பேதுரு எழுதின அதே சமயத்தில் எழுதப்பட்டதை இது குறிப்பாய் தெரிவிக்கிறது. அவை இரண்டுமே அந்தச் சமயத்தில் சபை எதிர்ப்படும் ஆபத்தின் பேரில் அதிக கவலையை வெளிப்படுத்துகின்றன.

☀ ஆகவே, பெரும்பாலும் அந்தக் காலப்பகுதி கி.பி. 65 ஆக இருக்கலாமென குறிப்பிடப்பட்டிருக்கிறது.

☀ கி.பி. 66-ல் செஸ்டியஸ் காலஸ் யூதரின் கலகத்தை அடக்குவதற்கு வந்ததைப் பற்றியும் கி.பி. 70-ல் எருசலேமின் வீழ்ச்சியைப் பற்றியும் யூதா குறிப்பிடாதது அந்தக் காலப்பகுதியை மேலும் ஆதரிக்கிறது.

☀ பாவிகளின்மீது குறிப்பாக நிறைவேறிய கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளை யூதா தன் நிருபத்தில் குறிப்பிடுகிறார்.

☀ எருசலேம் வீழ்ச்சியடையும் என்பதாக இயேசு ஏற்கெனவே முன்னறிவித்திருந்தார். இந்த சமயத்தில் எருசலேம் அவ்வாறு வீழ்ச்சியடைந்திருந்தால், இந்த தீர்க்கத்தரிசனத்தின் நிறைவேற்றத்தை தவறாமல் குறிப்பிடுவதன் மூலம் யூதா தனது வாதத்தை மேலும் உறுதிப்படுத்தியிருப்பார். (யூ. 5-7; லூக். 19:41-44).

☀ கிறிஸ்து இயேசுவின் மரணத்துக்கும் உயிர்த்தெழுதலுக்கும் பின்பு, அந்நிய போதகங்கள் கிறிஸ்தவ சபைக்குள் மெல்ல மெல்ல நுழைந்திருந்தன.

☀ பவுல் அப்போஸ்தலன் 14 ஆண்டுகளுக்கு முன் எச்சரித்தபடியே, விசுவாசத்தை பலவீனப்படுத்தும் நோக்கத்தோடு எதிரி படிப்படியாக ஊடுருவியிருந்தான். (2 தெ. 2:3) இந்த ஆபத்தைக் குறித்து சகோதரர்களை எச்சரிப்பதும், தற்காத்துக் கொள்ள; வெளிப்படையாய் சொல்வதில் உறுதியும் கண்டிப்பும் மிக்க யூதாவின் நிருபத்தில் இதற்கான பதிலிருந்தது.

☀ யூதா தானே 3-ம் 4-ம் வசனங்களில் தன் நிலையைத் தெளிவாக கூறினார்: ‘பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது. ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்களாகிய சிலர் பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது.’

☀ யூதா நிருபம் 25 வசனங்களை மட்டுமே கொண்ட ஒரு சிறிய நிருபமாகும்.

☀ யூதா, பழைய ஏற்பாட்டின் சில பிரத்தியேக உதாரணங்களைப் பயன்படுத்தினார். அவை: தாங்கள் விட்டு வந்ததையே நாடிச் சென்ற இஸ்ரவேலர்கள், பாவம் செய்த தூதர்கள், சோதோம் கொமோராவின் மக்கள். அத்தகைய தீயக் காரியங்களைப் பழக்கமாய்ச் செய்து வருவோர் அதே போன்ற தண்டனையை அனுபவிப்பார்கள் என்பதை காட்ட இவற்றைப் பயன்படுத்தினார்.

☀ மோசமான மனிதரை பகுத்தறிவற்ற மிருகங்களுக்கு ஒப்பிட்டார். மேலும் அவர்கள் காயீனின் பாதையில் சென்றதையும், பிலேயாமின் பாவத்துக்குள் விரைந்தோடியதையும், தங்கள் கலகத்தனமான பேச்சினிமித்தம் கோராவைப்போல் அழிந்ததையும் குறிப்பிட்டார்.

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...