ஞாயிறு, 29 நவம்பர், 2015

வெளிப்படுத்தல் அதிகாரம் 4,5,6 சுருக்கம்:

இருந்தவர்!
இருக்கிறவர்!!
வருகிறவர்!!!

வெளிப்படுத்தல் அதிகாரம் 4,5,6 சுருக்கம்:

முத்திரை 1

நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக் குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப்பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்.

முத்திரை 2

அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலைசெய்யதக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப்போடும்படியான அதிகாப்பட்டது; ஒரு பெரிய பட்டயமும் அவனுக்கு கொடுக்கப்பட்டது.

முத்திரை 3

நான் பார்த்தபோது, இதோ, ஒரு கருப்புக் குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான்.
அப்பொழுது ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன்.

முத்திரை 4
ஒரு மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன் அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர் பாதாளம் அவன் பின்னே சென்றது. பட்டயத்தினாலும் பஞ்சத்தினாலும் சாவினாலும் பூமியின் துஷ்ட மிருகங்களாலும் பூமியின் கர்பங்களில் உள்ளவர்களை கொலைசெய்யும்படியான அதிகாரம் அவனுக்கு கொடுக்கப்பட்டது

முத்திரை 5

அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது தேவ வசனத்தின் நிமித்தம் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தம் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களை பலிபீட்த்தின் கீழ் கண்டேன்.
அவர்கள்; பரிசுத்தமும் சத்தியமுள்ல ஆண்டவரே தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவரிடத்தில் எங்கள் இரத்தத்தை எதுவரைக்கும் நியாயத்தீர்ப்பு செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீரென்று மகாசத்தமிட்டு கூப்பிட்டார்கள்.
அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும் அவர்கள் தங்களைப்போல கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன் பனிவிடைக்காரர்களும்  தங்கள் சகோதரமானவர்களின் தொகையை நிறைவாக்குமளவும் இன்னுங்கொஞ்சகாலம் இளைப்பாறவேண்டுமென்று அவர்களுக்கு சொல்லப்பட்டது.

முத்திரை 6

அவர் ஆறாம்முத்திரையை உடைக்க கண்டேன் ; இதோ பூமி மிகவும் அதிர்ந்தது. சூரியன் கருப்பு கம்பளியைப்போல் கருத்தது  சந்திரன் இரத்தம் போல் ஆயிற்று;
அத்திமரமானது பெரும்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின்காய் உதிர்கிறது போல வானத்தின் நச்சத்திரங்களும் பூமியின்மேல் விழுந்தது.
வானமும் சுருட்டப்பட்ட புஸ்தகம் போலாகி விலகிபோயிற்று; மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு அகன்று போயின;
பூமியின் ராஜாக்களும் பெரியோர்களும் ஐசுவரியவான்களும் சோதனைத்தலைவர்களும் பெலவான்களும் அடிமைகள் யாவரும் சுயாதீனர் யாவரும் பர்வதங்களின் குகைகளிலும் கண்மலைகளிலும் ஒளிந்துக்கொண்டு,
பர்வதங்களையும் கண்மலைகளையும் நோக்கி; நீங்கல் எங்கள் மேல் விழுந்து சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள் அவருடைய கோபாக்கினையையும் மகாநாள் வந்துவிட்டது யார் நிலைநிற்க கூடும் என்றார்கள்.

ஜப்பானிய நீர் சிகிச்சை

🚿🚿🚿🚿🚿🚿🚿🚿🚿🚿
ஜப்பானிய நீர் சிகிச்சை

💧தினமும் அதிகாலையில் துயில் எழுந்தவுடன் பல் துலக்குமுன் ஆறு குவளை (1.26 லிட்டர்) நீர் பருகுவதால், உடலின் உட்புற உறுப்புக்கள் தூய்மையாக்கப்பட்டு, கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன. வெப்பம் குறைந்து, குளிர்ச்சி பெற்று, மலச்சிக்கல் மறைகின்றது. (இதை நம் முன்னோர்கள் 'உஷை பானம்'என்றழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது)

💧தண்ணீரைக் குடித்தபிறகு, ஒரு மணி நேரத்திற்கு காபி, டீ போன்ற பானங்களையோ,பிஸ்கட், பழம் போன்ற தின்பண்டங்களையோ சாப்பிடக் கூடாது. இது மிக மிக அவசியமானது, முக்கியமானது. இதைக் கவனத்தில் கொண்டு நடைமுறைப் படுத்த வேண்டும்.

💧காலையில் தண்ணீர் குடிப்பதற்குத் தயாராகும் வகையில், முதல் நாள் இரவுச் சாப்பாட்டை முடித்த பிறகு, படுக்கைக்குச் செல்லுமுன்பு, நரம்புமண்டலத்தைத் தூண்டக்கூடிய பானங்களையோ, பொருட்களையோ (மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள்) சாப்பிடக்கூடாது. இந்த நிபந்தனையும் முக்கியமானது. இரவே பல் துலக்கிக்கொள்வது நல்லது.

💧தண்ணீரில் கிருமிகள் கலந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் இருக்குமானால், அதை முதல் நாள் இரவே கொதிக்க வைத்து, ஆற வைத்து வடிகட்டி, பத்திரப்படுத்திக் கொள்ளலாம்.

👆🏾இம்முறை ஆரம்பத்தில் ஒரு சில நாட்களுக்கு சற்று சிரமமாகத் தோன்றலாம். பின்னர் பழக்கமாகிவிடும்.

💊💉💴மருந்து, மாத்திரை, ஊசி, டாக்டர், பணச் செலவு ஆகிய எதுவுமே இல்லாமல், இம்முறைப்படி நீரைப் பருகுவதால், கீழ்க்கண்ட நோய்கள் குணமாகின்றன:-

🎈தலைவலி
🎈இரத்த அழுத்தம்
🎈 சோகை
🎈 கீல்வாதம்
🎈பொதுவான பக்கவாதம்
🎈ஊளைச்சதை
🎈 மூட்டுவலி
🎈 காதில் இரைச்சல்
🎈 இருதயப் படபடப்பு
🎈 மயக்கம்
🎈இருமல்
🎈 ஆஸ்த்மா
🎈 சளி
🎈 காசநோய்
🎈 மூளைக் காய்ச்சல்
🎈 கல்லீரல் நோய்கள்
🎈 சிறுநீரகக் கோளாறுகள்
🎈 பித்தக் கோளாறுகள்
🎈 வாயுக் கோளாறுகள்
🎈வயிற்றுப் பொருமல்
🎈 இரத்தக் கடுப்பு
🎈 மூலம்
🎈 மலச்சிக்கல்
🎈 உதிரப்போக்கு
🎈 நீரழிவு
🎈 கண் நோய்கள்
🎈 கண் சிவப்பு
🎈 ஒழுங்கில்லாத மாதவிடாய்
🎈 வெள்ளை படுதல்
🎈 கர்ப்பப்பை புற்றுநோய்
🎈 மார்புப் புற்றுநோய்
🎈 தொண்டை சம்பந்தமான நோய்கள்

😳நம்பவே முடியவில்லையே! சந்தேகம் கலந்த ஆச்சரியம் மேலிடுகிறது அல்லவா? இந்த முறை ஜப்பானில் பரவலாகக் கடைபிடிக்கப்படுகிறது.

🔬சோதனைகள் மூலமாகவும், அனுபவபூர்வமாகவும் கீழ்க்கண்ட நோய்கள் குணமாக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

🎐 மலச்சிக்கல் - ஒரே நாளில்
🎐 வயிற்றில் பித்தம் மற்றும் வாயுப் பொருமல் - இரண்டு நாட்கள்
🎐 சர்க்கரை வியாதி - ஏழு நாட்கள்
🎐 இரத்த அழுத்தம் - நான்கு வாரங்கள்
🎐 புற்று நோய் - ஆறு மாதங்கள்
🎐 காசநோய் - மூன்று மாதங்கள்

நன்றி: The Health Service good night
🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅

செப்பனியா - கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது

கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது

   🌹 செப்பனியா 🌹

☀ மூல மொழியாகிய எபிரேயத்தில் “ட்செஃபான்யா (Tsephanyah)” என்று அழைக்கப்படுகிறது.

☀ செப்பனியா என்றால் “கர்த்தர் மறைத்தார்” அல்லது “பொக்கிஷமாக வைத்தார்” என்று அர்த்தம்.

☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 36-வது புத்தகமாக வருகிறது.

☀ செப்பனியா, யூத அரசனாகிய எசேக்கியாவின் சந்ததியில் வந்த அரச வம்சத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். என்றாலும் அந்தத் தேசத்தில் நிலவிய நிலைமைகளை அவர் கடுமையாய் விமர்சித்தார். (செப். 1:1, 4,)

☀ யூதாவில் திரும்பிய திக்கெல்லாம் மக்கள் பாகாலை வழிபடுகிறார்கள். தம் தீர்க்கதரிசி செப்பனியா மூலமாக கர்த்தர் இவ்வாறு கூறுகிறார்: ‘நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லாக் குடிகளின்மேலும் என் கையை நீட்டுவேன்.’ “கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது” என செப்பனியா எச்சரிக்கிறார். (செப்பனியா 1:4, 7, 14) கடவுளின் சொல்படி நடப்பவர்கள் மட்டுமே அந்நாளில் ‘மறைக்கப்படுவார்கள்.’ (செப்பனியா 2:3)

☀ யூதா அரசன் யோசியாவுடைய ஆட்சியின் ஆரம்ப காலத்தில் (கி.மு. 659-629) பாகால் வழிப்பாடு தலைவிரித்தாடியது.

☀ இந்த அசுத்தமான வழிப்பாட்டை “அந்நிய தெய்வங்களின் பூசாரிகள்” தலைமைதாங்கி நடத்தினர்.

☀ அப்போது தீர்க்கதரிசி செப்பனியா அறிவித்த இந்தச் செய்தி எருசலேமின் ஜனங்களைத் திடுக்கிட செய்திருக்கும்.

☀ அழிவு பற்றிய ஓர் அறிவிப்புடன் இந்தப் புத்தகம் தொடங்குகிறது. “தேசத்தில் உண்டானதை எல்லாம் முற்றிலும் வாரிக்கொள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” (செப். 1:2)

☀ செப்பனியாவின் முயற்சியால் நல்ல பலன்கள் கிடைத்தன.

☀ எட்டு வயதில் சிங்காசனத்தில் அமர்ந்த அரசன் யோசியா, தன் ஆட்சியின் 12-வது ஆண்டில் ‘யூதாவையும் எருசலேமையும் சுத்திகரிக்க’ தொடங்கினார். பொய் வழிபாட்டை அடியோடு அழித்து, ‘கர்த்தரின் ஆலயத்தைப் பழுதுபார்த்து,’ பஸ்கா ஆசரிப்பை திரும்ப தொடங்கி வைத்தார். (2 நா. அதி. 34, 35)

☀ எனினும், அரசன் யோசியாவின் சீர்திருத்தங்கள் தற்காலிகமாகவே இருந்தன. ஏனெனில் அவருக்கு பிறகு அவருடைய மூன்று குமாரரும் பேரன்களில் ஒருவனும் ஒருவர்பின் ஒருவராக ஆட்சி செய்தனர். இவர்கள் எல்லாருமே கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தனர்.

☀ “செப்பனியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்” யோசியாவின் 12-ம் ஆண்டாகிய கி.மு. 648-க்கு முன்பே ஏற்பட்டது என்றே தோன்றுகிறது.

☀ அவர் யூதாவிலிருந்து பேசுவதாக முதலாம் வசனம் குறிப்பிடுகிறது.

☀ அதுமட்டுமல்ல, எருசலேமின் சுற்று வட்டாரங்களையும் பழக்கவழக்கங்களையும் பற்றி விவரமாக அறிந்திருந்ததும் அவர் யூதாவில்தான் இருந்தார் என தெரிவிக்கின்றன.

☀ இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ள செய்தி திகிலூட்டுவதாகவும் அதேசமயம் ஆறுதலளிப்பதாகவும் உள்ளது.

☀ இதன் பெரும்பகுதி, வெகு சீக்கிரத்தில் வரவிருக்கிற அச்சமேற்படுத்தும் நாளாகிய கர்த்தருடைய நாளிலேயே கவனத்தை ஊன்றவைக்கிறது.

☀ ஆனால் அதேசமயம், “கர்த்தருடைய நாமத்தின்மேல் நம்பிக்கையாயிரு”க்கும் மனத்தாழ்மையுள்ள ஒரு ஜனத்தை கர்த்தர் திரும்ப நிலைநாட்டுவார் என்றும் அது முன்னறிவிக்கிறது.

☀ இந்தத் தீர்க்கதரிசன புத்தகத்தின் நம்பகத் தன்மையை சந்தேகிக்கவே முடியாது.

கைவிடப்படும் விசுவாசியின் நிலை

🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃 கைவிடப்படும் விசுவாசியின் நிலை
🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃

👉 இயேசுவின் இரகசிய வருகையில் கைவிடப்படும் விசுவாசி, அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியில் எவ்வாறு இருப்பார்கள். அவர்களுடைய நிலை என்ன? இந்த பகுதி ஒரு சிறு நிகழ்வை மட்டும் தான் கூறுகிறது ஆனால் இதை விட இன்னும் அநேக கொடுமைகளை சந்திக்க நேரிடும்.

👉 “அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது” (வெளி 13:16-17) என்ற வசனங்களை வைத்து பார்த்தால் அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியில் ஒவ்வொரு மனிதரும் கண்காணிக்கப்படுவார்கள் என்று அறியமுடிகின்றது.

🐲 இதற்க்காக அந்திக்கிறிஸ்து பயன்படுத்தப்போகின்ற ஆயுதம் தான் ஹைப்ரிட் மனிதர்கள். மனிதனும் இயந்திரமும் கலந்த கலவையைத்தான் ஹைப்ரிட் மனிதர்கள் என்று அழைகின்றார்கள்.

🐲 சின்னதாக ஒரு பயோ சிப்பை உடலுக்குள் பொருத்திக்கொண்டாலும் அவர்களுக்குப் பெயர் ஹைப்ரிட் (Hybrid) மனிதர்கள் அல்லது சைபோர்க் (Cyborg) மனிதர்கள்.

🐲 டிஸ்கவரி போன்ற சேனல்களில் ஒரு மிருகத்தை பிடித்து பரிசோதித்த பின்பு அதின் உடம்பில் ரேடியோ சிப் “Radio-frequency identification (RFID)” ஒன்று பொருத்தப்படுவதை பார்த்திருப்பீர்கள். பின்னர் அவர்கள் அந்த மிருகம் செல்கின்ற இடத்தையெல்லாம் ஒரு இடத்தில் இருந்தவாறு கண்காணிப்பார்கள்.

🐲 அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியில் இந்த முறையானது மனிதர்களுக்கும் அமல்படுத்தப்படும். ஆனால் சாதாரண RFID யாக அல்ல. விஞ்ஞான ரீதியில் மேம்படுத்தப்பட்ட RFID யாக அது இருக்கும்.

🐲 “கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது” என்று வார்ததையிலிருந்து முழு உலகத்தின் வர்த்தகமும் அந்திக்கிறிஸ்துவின் கீழ் வரப்போவது உறுதியாகின்றது.

🐲 1960-களில் சைபோர்க் எனும் வார்த்தை முதன்முதலில் உலகிற்க்கு அறிமுகமானது! சரியாக 1966-ல் ஆண்டன் லாவே என்பவனால் சாத்தான் சபை துவங்கப்பட்டது. ஆகவே சைபர்நெடிக்ஸ் (Cybernetics) துறைக்கும் வெளிப்படபோகின்ற அந்திக்கிறிஸ்துவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை அறிய முடிகின்றதல்லவா.

🐲 பணமில்லா புதிய உலகத்தில் உள்ள பயோசிப் பொருத்திக்கொண்ட ஹைப்ரிட் மனிதர்களை ஆளும் அதிபராக அந்திக்கிறிஸ்து இருப்பான்.

🐲 மாத சம்பளம் பயோசிப்பிற்கு அனுப்படும். பணம், துட்டு, நாணயம், பைசான்னு ஒன்னும் இருக்காது. பயோசிப் பற்றி சாதாரணமா நினைச்சிடாதீங்க.. இது இல்லாட்டின்னா எதுவுமே வாங்கவும் முடியாது. சொத்த வித்தாவது ஏழு வருஷம் பொழச்சிக்கிடலாம்னா அதுவும் முடியாது.

🐲 பயோசிப் இல்லாம உங்க சொத்தையே உங்களால விற்க முடியாது, வேற எதையும் வாங்கவும் முடியாது.

🐲 இயேசுவின் இரகசிய வருகையில் கைவிடப்படும் விசுவாசி, தேவனாலும் மனிதர்களாலும் கைவிடப்பட்டவர்களாக இருப்பார்கள்.

🐲 இந்த விசுவாசிகள் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டால், ஆத்துமாவை நஷ்டப்படுத்திய பாவத்திற்காக நிச்சயமாக பரலோகத்திற்கு செல்ல முடியாது.

🐲 சரி, அந்திக்கிறிஸ்துவாவது விசுவாசிகளை சீக்கிரம் கொள்ளுவான் என்று நினைகின்றீர்களா? அவனுடைய சேவகர்கள் இயன்றளவு விசுவாசிகளை உயிருடன் வைத்து கொடுமைப்படுத்துவதில் தானே குறியாக இருப்பார்கள்.

🐲 இதுதான் இரகசிய வருகையில் கைவிடப்படுகின்ற விசுவாசி, பொருளாதார ரீதியில் அனுபவிக்கப்போகின்ற பாடுகளின் ஒரு சிறுபகுதி.

👉 இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு பரிசுத்தமாக வாழ்வது தான் இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி, நாம் தப்புவோம், பிறரையும் தப்புவிப்போம்.
🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃

நன்றி சகோதரி யோகா

சனி, 28 நவம்பர், 2015

ஆபகூக் - நீதிமான் பிழைப்பான்

நீதிமான் பிழைப்பான்

         🌹ஆபகூக் 🌹

💥மூல மொழியாகிய எபிரேயத்தில் “காவக்கூக் (Chavaqquq)” என்று அழைக்கப்படுகிறது.

💥ஆபகூக் என்றால் “மல்யுத்த வீரன்” அல்லது “அனைப்பவன்” என்று அர்த்தம்.

💥நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 35-வது புத்தகமாக வருகிறது.

💥ஆபகூக்கைப் பற்றி பின்னனியோ குணாதிசயங்களோ அவ்வளவோ தெரியவில்லை. ஆபகூக் அசீரியாவைக் குறித்து ஏதும் குறிப்பிடவில்லை. ஆனால், கல்தேயர்களைப் பற்றியும் அவர்களுடைய பெருகுகிற இராணுவ பெலன்களைக் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

💥ஆகவே, அவர் நேபுகாத்நேச்சார் (1:6, 2:3) யூதேயாவை, தாக்கும் நாட்களுக்கு முன்பாக அவர் தீர்க்கதரிசனம் உரைத்தார் என்று தெரிகிறது.

💥அக்காலக் கட்டத்தில் யோயாக்கீம் யூதேயாவை அரசாண்ட காலக்கட்டம் என்று உணரலாம்.

💥ஆபகூக், ஆலயத்தில் இருந்த லேவிய இசைப்பாடகரில் ஒருவரா என்பதை உறுதியாக கூறமுடியாது. ஆனால், “இராகத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்” என இந்தப் புத்தகத்தின்முடிவில் காணப்படும் குறிப்பிலிருந்து ஒருவேளை அவர் பாடகராக இருந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

💥ஆபகூக்கும் எரேமியாவும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களாகின்றனர்.

💥மொத்தம் 3 அதிகாரங்களும், 56 வசனங்களையும் கொண்டுள்ளது.

💥2-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 1-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது.

💥ஆபகூக் புத்தகத்தின் முதல் இரண்டு அதிகாரங்களில் தீர்க்கதரிசிக்கும் கர்த்தருக்கும் இடையில் நடைபெறும் உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

💥மூன்றாவது அதிகாரம் “அர்மகெதோன்” போரின் நாளில் கர்த்தரின் மகத்துவத்தைப் பற்றி கூறுகிறது. அதன் விலாவாரியான எழுத்துநடையின் வல்லமையிலும் உணர்ச்சித் துடிப்பிலும் இதற்கு நிகரே இல்லை.

💥மேலும் இது, “எபிரேய செய்யுட்களிலேயே மிகவும் நேர்த்தியான, சிறப்பான ஒன்று” என அழைக்கப்படுகிறது.

💥இரக்கம் காட்டும்படியான ஜெபத்தை ‘விண்ணப்பப் பாடலாக’ அதாவது புலம்பலாக ஆபகூக்பாடுகிறார். உதாரணமாக, கடந்த காலத்தில் சிவந்த சமுத்திரத்திலும் வனாந்தரத்திலும் எரிகோவிலும் கர்த்தர் செய்த வல்லமை மிக்க செயல்களை அதில் அவர் குறிப்பிடுகிறார்.

💥அர்மகெதோனில் கர்த்தர் கோபத்தோடே வரும்போது துஷ்டர் அழிக்கப்படுவார்கள் என்பதையும் தீர்க்கதரிசி முன்னறிவிக்கிறார்.

💥அந்த ஜெபம் பின்வரும் வார்த்தைகளோடு முடிவடைகிறது: “ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான் கால்களைப் போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்.” (ஆபகூக் 3:1,19).

💥“நான் கல்தேயரென்னும் கொடிதும் வேகமுமான ஜாதியாரை எழுப்புவேன்.” ஆனால், “துரோகிகளை” பயன்படுத்தி கர்த்தர் யூதாவுக்குத் தண்டனை வழங்கப் போகிறார் என்பதை அறிந்து ஆபகூக் அதிர்ச்சி அடைகிறார். (ஆபகூக் 1:3,6,13).

💥எருசலேமுக்கு விரோதமாய் கல்தேயர் எழும்புவது யூதர்களுக்கு நம்ப முடியாததாய் இருந்திருக்கலாம்.

💥ஆபகூக் தீர்க்கதரிசனம் உரைக்கத் துவங்கிய சமயத்தில், யூதாவை எகிப்து ஆட்டிப்படைத்து வந்தது. (2 இராஜாக்கள் 23:29,30,34).

💥அப்போது, பாபிலோனியர்களின் ஆதிக்கம் தலைதூக்க ஆரம்பித்திருந்த போதிலும், அவர்களுடைய படைவீரர்கள் பார்வோன் நேகோவை இன்னும் முறியடித்திருக்கவில்லை. (எரேமியா 46:2).

💥அதுமட்டுமல்ல, கர்த்தருடைய ஆலயம் எருசலேமில் இருந்தது; தாவீதின் பரம்பரையில் வந்த ராஜாக்கள் அங்கே தொடர்ந்து ஆட்சி புரிந்து வந்தார்கள்.

💥அப்போதிருந்த யூதர்களால் கடவுளின் ‘கிரியையை’ அதாவது, கல்தேயர்களைக்கொண்டு எருசலேமை அவர் அழிப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாதிருந்தது.

💥ஆபகூக் சொன்ன விஷயங்கள் அவர்களுக்கு நம்ப முடியாததாக இருந்த போதிலும், எருசலேமை பாபிலோனியர் அழிப்பதைப் பற்றிய தரிசனம் கி.மு. 607-ல் ‘நிறைவேறியது.’

💥நீதிமான்கள் தொடர்ந்து வாழ்வார்கள் என்றும் விரோதிகளோ தண்டனையிலிருந்து தப்பிக்கமாட்டார்கள் என்றும் ஆபகூக்கிற்கு உறுதி அளிக்கப்படுகிறது.

💥“அவன்” என இங்குச் சொல்லப்பட்டிருப்பது ஒரு தொகுதியாக பாபிலோனியரைக் குறிக்கிறது.

💥பகைவரான கல்தேயருக்கு வரவிருக்கும் ஐந்து (ஐயோக்கள்) இன்னல்களையும் ஆபகூக் பதிவு செய்கிறார். (ஆபகூக் 2:2-20).

வெள்ளி, 27 நவம்பர், 2015

வெளிப்படுத்தல் அதிகாரம் 1,2,3/சுருக்கம்

இருந்தவர்!
இருக்கிறவர்!!
வருகிறவர்!!!

வெளி:1,2,3 சுருக்கம்:
சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகளைத் தம்முடைய ஊழியகாரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியகாரனாகிய யோவானுக்கு வெளிப்படித்தினதுனமான விசேஷம்.
  இதோ, மேகங்களுடனே வருகிறார். கண்கள் யாவும் அவரைக்காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.
இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஒமேகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.
பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிரோடிருக்கிறவருமாயிருக்கிறேன். மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென். நான் மரணத்திற்க்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோலகளை உடையவராயிருக்கிறேன்.

1. எபேசு:
ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக் கொடுப்பேன்.

2. சிமிர்னா:
ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை.

3. பெர்கமு:
ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக் கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன்.

4. தியத்தீரா:6
ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.
அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொருக்கப்படுவார்கள்.
  விடிவெள்ளி நட்சத்திரத்திரத்தையும் அவனுக்கு கொடுப்பேன்.

5. சர்தை:
ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.

6. பிலதெல்பியா:
  ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன்; அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும் அவன் மேல் எழுதுவேன்.

7. லவோதிக்கேயா:
இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்.
நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.

ஆவியானர்
சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...