ஞாயிறு, 29 நவம்பர், 2015

வெளிப்படுத்தல் அதிகாரம் 4,5,6 சுருக்கம்:

இருந்தவர்!
இருக்கிறவர்!!
வருகிறவர்!!!

வெளிப்படுத்தல் அதிகாரம் 4,5,6 சுருக்கம்:

முத்திரை 1

நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக் குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப்பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்.

முத்திரை 2

அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலைசெய்யதக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப்போடும்படியான அதிகாப்பட்டது; ஒரு பெரிய பட்டயமும் அவனுக்கு கொடுக்கப்பட்டது.

முத்திரை 3

நான் பார்த்தபோது, இதோ, ஒரு கருப்புக் குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான்.
அப்பொழுது ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன்.

முத்திரை 4
ஒரு மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன் அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர் பாதாளம் அவன் பின்னே சென்றது. பட்டயத்தினாலும் பஞ்சத்தினாலும் சாவினாலும் பூமியின் துஷ்ட மிருகங்களாலும் பூமியின் கர்பங்களில் உள்ளவர்களை கொலைசெய்யும்படியான அதிகாரம் அவனுக்கு கொடுக்கப்பட்டது

முத்திரை 5

அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது தேவ வசனத்தின் நிமித்தம் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தம் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களை பலிபீட்த்தின் கீழ் கண்டேன்.
அவர்கள்; பரிசுத்தமும் சத்தியமுள்ல ஆண்டவரே தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவரிடத்தில் எங்கள் இரத்தத்தை எதுவரைக்கும் நியாயத்தீர்ப்பு செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீரென்று மகாசத்தமிட்டு கூப்பிட்டார்கள்.
அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும் அவர்கள் தங்களைப்போல கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன் பனிவிடைக்காரர்களும்  தங்கள் சகோதரமானவர்களின் தொகையை நிறைவாக்குமளவும் இன்னுங்கொஞ்சகாலம் இளைப்பாறவேண்டுமென்று அவர்களுக்கு சொல்லப்பட்டது.

முத்திரை 6

அவர் ஆறாம்முத்திரையை உடைக்க கண்டேன் ; இதோ பூமி மிகவும் அதிர்ந்தது. சூரியன் கருப்பு கம்பளியைப்போல் கருத்தது  சந்திரன் இரத்தம் போல் ஆயிற்று;
அத்திமரமானது பெரும்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின்காய் உதிர்கிறது போல வானத்தின் நச்சத்திரங்களும் பூமியின்மேல் விழுந்தது.
வானமும் சுருட்டப்பட்ட புஸ்தகம் போலாகி விலகிபோயிற்று; மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு அகன்று போயின;
பூமியின் ராஜாக்களும் பெரியோர்களும் ஐசுவரியவான்களும் சோதனைத்தலைவர்களும் பெலவான்களும் அடிமைகள் யாவரும் சுயாதீனர் யாவரும் பர்வதங்களின் குகைகளிலும் கண்மலைகளிலும் ஒளிந்துக்கொண்டு,
பர்வதங்களையும் கண்மலைகளையும் நோக்கி; நீங்கல் எங்கள் மேல் விழுந்து சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள் அவருடைய கோபாக்கினையையும் மகாநாள் வந்துவிட்டது யார் நிலைநிற்க கூடும் என்றார்கள்.

2 கருத்துகள்:

  1. இனி வரும் பலன்

    கிறிஸ்துவுக்குள் ஜீவிக்கும் ஒரு மெய் கிறிஸ்தவனின் முழு நம்பிக்கையும், ஆத்தும தவிப்பும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையை தவிர வேறென்னவாக இருக்க முடியும்! கடைசி தேவ எக்காளம், சரீர மீட்பு, எடுத்துக்கொள்ளப்படுதல் போன்ற வார்த்தைகள் நம்மை அதிக பரவசமூட்டுகிறதல்லவா! தங்கள் ஜீவியத்தின் எல்லா அம்சங்களிலும் சோதிக்கப்பட்டு அதில் ஜெயங்கொண்டவர்களோ உயர உயரச் சென்று எல்லா வானங்களுக்கும் மேலாக தேவ சிங்காசனத்தை அடைவார்கள். மற்றவர்களோ கைவிடப்பட்டு உபத்திரவத்தின் கண்ணியிலே சிக்கிக்கொள்ளுவார்கள். கர்த்தராகிய இயேசு எல்லா கிறிஸ்தவர்களையும் சேர்த்துக்கொள்ளும்படியாக வராமல் கறை, திரை, பிழை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் முற்றிலும் பரிசுத்தமாக்கப்பட்ட மகிமையுள்ள சபைக்காகவே வருகிறார். எனினும் இந்நாட்களில் இரகசிய வருகையையும் அதை தொடர்ந்து சம்பவிப்பவைகளையும் குறித்து அநேக பிரசித்தி பெற்ற வேத பண்டிதர்களின் பல்வேறு மாறுபட்ட வியாக்கியானங்கள் நமது மோட்ச பிரயாணத்திற்கு மிகுந்த இடறலை உண்டாக்கியிருப்பது வருந்தத்தக்கதாயிருக்கிறது. சத்தியத்தின்மேலுள்ள ஆழமான அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் இவைகளை விவரிக்கும்படி மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் பெரும் குழப்பத்திலே முடிவடைந்திருக்கின்றன. இவ்விதமான மாறுபட்ட வியாக்கியானங்கள் தேவ ஜனங்கள் பலருக்கும் மிகவும் பரிதாபகரமான நஷ்டத்தை உண்டாக்கியிருப்பது மிகுந்த துக்ககரமானதாயிருக்கிறது. தேவனுடைய வார்த்தைகள் ஒருபோதும் மாறிப்போவதில்லை!

    இருப்பினும் கிருபையின் காலம் முழுவதும் பலியினாலே அவரோடுகூட உடன்படிக்கை பண்ணிய அவருடைய பரிசுத்தவான்கள் மூலம் அவருடைய சரீரமாகிய சபைக்கு இவைகளின் உண்மைப்பொருளை தேவன் விளங்கப்பண்ணியிருக்கிறார். அதனடிப்படையில் கடைசி நாட்களில் சம்பவிக்கப்போகிறவைகளின் வரிசைக்கிரமத்தை யாவரும் எளிதில் விளங்கிக்கொள்ளும்படியாக, கால வரிசைக்கிரம வரைபடமாக விவரிக்க அதிக பிரயாசம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது (சங்கீதம் 68:11). இது முற்றிலும் தேவ கிருபையே.

    வெளிப்படுத்தின விசேஷத்தை அடிப்படையாக கொண்ட இவ்வரைபடமானது ஜெயங்கொண்ட சபையின் எடுத்துக்கொள்ளப்படுதல், அதை தொடர்ந்ததான ஏழு வருட உபத்திரவம் (இரு வேறு நோக்கிலான தரிசனம்), ஆயிர வருச அரசாட்சி, வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு, நித்திய வாசஸ்தலங்கள் மற்றும் உயிர்த்தெழுதலின் ஏழு வரிசைகளையும் கர்த்தராகிய இயேசுவின் இரண்டாம் வருகையின் மூன்று கட்டங்களையும் விவரிக்கிறது.

    இவ்வரைபடம் விவரிக்கும் வரிசைக்கிரமத்தின் உண்மைப்பொருளை நாம் ஆவிக்குரிய விவேகத்துடன் விளங்கிகொள்ளுவோமாயின் அது இனிச் சம்பவிக்கபோகிற ஏழு வருட உபத்திரவத்திற்கு தப்பி அதற்கு முன்பாக மத்திய ஆகாயத்தில் வெளிப்படும் "ஆனந்த பாக்கியத்தை" நோக்கி நம்மை உந்தி தள்ளுவதாயிருக்கும். மேலும் நாம் நேசித்து சேவிக்கும் கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்படி, திட அஸ்திபாரமாகிய பிரதான மூலைக்கல்லின் மீது போடப்பட்டிருக்கும் அப்போஸ்தலர்கள் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தை அடையாளங் கண்டுகொள்ளுவதற்கும் அதில் இசைவிணைப்பாக ஊன்றக் கட்டப்படுவதின் அவசியத்தை நோக்கியும் நம்மை துரிதப்படுத்துவதாயிருக்கும்!

    இவ்வரைபடத்தை பின்வரும் இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்து பயனடையுங்கள். நீங்கள் பயனடைந்திருப்பீர்களாயின் மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவன்தாமே நம்முடைய மனக்கண்களை பிரகாசிப்பாராக!

    https://goo.gl/5HDYKQ

    என் நேசரே! தீவிரியும்,.. (உன் 8:14).

    பதிலளிநீக்கு

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...