மாமன்னன் மானிடரை மீட்க – மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்
மாசற்ற மாணிக்கம் மகிமையைத் துறந்து – மண்ணிலே பிறந்தார்
நம் மனதிலே பிறந்தார்
மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் எண்ணத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் உள்ளத்தில்
மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் இல்லத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் வாழ்க்கையில்
சிறுமையானவரே எளிமையானவரே
தனிமையானவரே கைவிடப்பட்டவரே
உங்கள் விடிவெள்ளியான யேசு பெத்தலகேமில் பிறந்திருக்கிறார்
துயரப்படுவரே துன்பப்படுவரே
கவலைப்படுபவரே கண்ணீர் வடிப்பவரே
உங்கள் ரட்சகரான யேசு தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்
கிறிஸ்மஸ் வந்தால் கொண்டாட்டமே
ஆடிபாடி மகிழும் நாட்களே
ஒன்றாக கூடியே கரங்களை தட்டியே
இயேசுவை கொண்டாட வாங்கவே -லா லா
1. வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே
இயேசு இன்று பிறந்ததாலே
நம் வாழ்க்கை மாறுமே புது வழி திறக்குமே
இயேசு இங்கு வந்ததினாலே
2. கொடிய வியாதி பறந்து போகுமே
யெகோவா ரஃபா என்னை தொடுவாரே
விடுவிக்கும் தேவனே மனிதனாக வந்தாரே
என் வாழ்வில் பயமில்லையே
இம்மானுவேல் இம்மானுவேல் என்னோடு இருப்பாரே
1. பெத்லகேமில் பிறந்தவர் அவர்
பாலகனாய் ஜெனித்தவர் அவர்
இம்மானுவேல் என்னோடு இருப்பாரே
உலகத்தின் ராஜா அவர் தூதர் போற்றும் தேவனவர்
2. மகிமை நிறைந்த தேவனவர்
மகத்துவத்தின் கர்த்தரவர்
இம்மானுவேல் என்னோடுயிருப்பாரே
சமாதானபிரபு அவர் தன்னை தரும் தகப்பனவர் இம்மானுவேல் என்னோடுயிருப்பாரே - இம்மானுவேல்
3. மனிதனாக பிறந்த அவர்
பரலோகத்தை திறந்த அவர்
இம்மானுவேல் என்னோடுயிருப்பாரே
மாம்சமாக வந்த அவர் தமக்குள் வாழும் இயேசு அவர்
இம்மானுவேல் என்னோடு இருப்பாரே
சந்தோஷமான ஒரு செய்தி வந்தாச்சு சங்கீதம் பாட ஒரு காலம் வந்தாச்சு மன்னன் இயேசு மண்ணில் வந்தார் விண்ணின் மைந்தன் வந்துதித்தார் நிலவு இரங்கி மண்ணில் வந்து தவழ்வது போல உலகில் வாழும் குழந்தையாக இயேசு வந்தாரே
1. பனிமழை பூமியெங்கும் தூவும் வேளையில் பாமரர் ஆயர் எங்கும் தூங்கும் காலையில் தேவதூதர் வானிரங்கி துதிகள் சாற்றிட ஸ்தோத்திர புகழ்ச்சி பாட வந்துதித்தாரே
கிறிஸ்மஸ் வந்தாலே கொண்டாட்டம் தான்
புதுபாட்டு நாம் பாட கும்மாளம் தான் பாட்டு பாடலாம் ஆட்டம் போடலாம் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடலாம்
1.ஊரெங்கும் கொண்டாட்டம் உலகெங்கும் உற்சாகம்தான் - இந்த வாண வேடிக்கை ரொம்ப ஜோரு ஜோருதான் தூதர் பாடிடும் கிறிஸ்மஸ் பாட்டு சூப்பர்தான் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான் - 2
2.வீதியோரம் கிறிஸ்மஸ் தாத்தா ஜாலியாக வாரார் பாரு கேரல் ரௌண்டில் பாடும் பாட்டை கேளுங்க ஆட்டம் போட்டிடும் நண்பர் கூட்டம் கூட்டமாய் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான் - 2
கிழக்கு திசையிலே அந்த சிவந்த வானத்திலே
மாலை பொழுதிலே அந்த மயங்கும் வேளையிலே - ஓய்
அழகான வெள்ளி ஒன்று செல்லுதே
அது மன்னன் இயேசு பிறந்தசெய்தியை சொல்லுதே
1. விந்தை காணவே வந்த ஞானியார்
கந்தை துணியிலே மன்னனைக் கண்டார் சிந்தை களிகூறவே உள்ளமெல்லாம் மகிழவே
காணிக்கைகள் தந்து அவர் பாதம் பணிந்தார்
2.சாந்த ரூபனே சாக ஜீவனே
சாரோன் ரோஜாவே லீலிபுஷ்பமே
மின்னுகிற நட்சத்திரமாய் ஒளிதரும் ஜோதியாய்
உண்மை சொல்ல உலக வாணில் பயணம் போகுதே
தாவீதின் வேரானவர்
தீர்க்கன் சொன்ன மேசியா
வாக்குத்ததமானவர் - 2
பாடுவோம் கொண்டாடுவோம்
இயேசு பிறந்தாரே - 4
1.நம்மை மீட்க மண்ணிலே
தேடி வந்த இரட்சகர்
என்றும் நம்மில் வாழவே
இம்மானுவேலானாரே - 2
2.சாபங்கள் யாவும் போக்கவே
வியாதிகள் எல்லாம் நீக்கவே
என்றும் மகிழ்ந்து வாழவே
இரட்சகராக பிறந்தாரே - 2
3.கரங்களை தட்டி பாடுவோம்
கவலையை மறந்து துதிப்போம்
என்றும் நம்மோடிருப்பவர்
சகலத்தையும் புதிதாக்குவார் -2