வெள்ளி, 25 நவம்பர், 2022

advent Christian church ponmar Christmas song


மாமன்னன் மானிடரை மீட்க – மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்
மாசற்ற மாணிக்கம் மகிமையைத் துறந்து – மண்ணிலே பிறந்தார்
நம் மனதிலே பிறந்தார்

மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் எண்ணத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் உள்ளத்தில்
மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் இல்லத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் வாழ்க்கையில்

சிறுமையானவரே எளிமையானவரே
தனிமையானவரே கைவிடப்பட்டவரே
உங்கள் விடிவெள்ளியான யேசு பெத்தலகேமில் பிறந்திருக்கிறார்

துயரப்படுவரே துன்பப்படுவரே
கவலைப்படுபவரே கண்ணீர் வடிப்பவரே
உங்கள் ரட்சகரான யேசு தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்



கிறிஸ்மஸ் வந்தால் கொண்டாட்டமே

ஆடிபாடி மகிழும் நாட்களே

ஒன்றாக கூடியே கரங்களை தட்டியே

இயேசுவை கொண்டாட வாங்கவே -லா லா


1. வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே

இயேசு இன்று பிறந்ததாலே

நம் வாழ்க்கை மாறுமே புது வழி திறக்குமே

இயேசு இங்கு வந்ததினாலே


2. கொடிய வியாதி பறந்து போகுமே

யெகோவா ரஃபா என்னை தொடுவாரே

விடுவிக்கும் தேவனே மனிதனாக வந்தாரே

என் வாழ்வில் பயமில்லையே


இம்மானுவேல் இம்மானுவேல் என்னோடு இருப்பாரே

1. பெத்லகேமில் பிறந்தவர் அவர்

பாலகனாய் ஜெனித்தவர் அவர்

இம்மானுவேல் என்னோடு இருப்பாரே

உலகத்தின் ராஜா அவர் தூதர் போற்றும் தேவனவர்


2. மகிமை நிறைந்த தேவனவர்

மகத்துவத்தின் கர்த்தரவர்

இம்மானுவேல் என்னோடுயிருப்பாரே

சமாதானபிரபு அவர் தன்னை தரும் தகப்பனவர் இம்மானுவேல் என்னோடுயிருப்பாரே - இம்மானுவேல்


3. மனிதனாக பிறந்த அவர்

பரலோகத்தை திறந்த அவர்

இம்மானுவேல் என்னோடுயிருப்பாரே

மாம்சமாக வந்த அவர் தமக்குள் வாழும் இயேசு அவர்

இம்மானுவேல் என்னோடு இருப்பாரே



சந்தோஷமான ஒரு செய்தி வந்தாச்சு சங்கீதம் பாட ஒரு காலம் வந்தாச்சு மன்னன் இயேசு மண்ணில் வந்தார் விண்ணின் மைந்தன் வந்துதித்தார் நிலவு இரங்கி மண்ணில் வந்து தவழ்வது போல உலகில் வாழும் குழந்தையாக இயேசு வந்தாரே


1. பனிமழை பூமியெங்கும் தூவும் வேளையில் பாமரர் ஆயர் எங்கும் தூங்கும் காலையில் தேவதூதர் வானிரங்கி துதிகள் சாற்றிட ஸ்தோத்திர புகழ்ச்சி பாட வந்துதித்தாரே


கிறிஸ்மஸ் வந்தாலே கொண்டாட்டம் தான்

புதுபாட்டு நாம் பாட கும்மாளம் தான் பாட்டு பாடலாம் ஆட்டம் போடலாம் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடலாம்


1.ஊரெங்கும் கொண்டாட்டம் உலகெங்கும் உற்சாகம்தான் - இந்த வாண வேடிக்கை ரொம்ப ஜோரு ஜோருதான் தூதர் பாடிடும் கிறிஸ்மஸ் பாட்டு சூப்பர்தான் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான் - 2


2.வீதியோரம் கிறிஸ்மஸ் தாத்தா ஜாலியாக வாரார் பாரு கேரல் ரௌண்டில் பாடும் பாட்டை கேளுங்க ஆட்டம் போட்டிடும் நண்பர் கூட்டம் கூட்டமாய் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான் - 2



கிழக்கு திசையிலே அந்த சிவந்த வானத்திலே

மாலை பொழுதிலே அந்த மயங்கும் வேளையிலே   - ஓய்

அழகான வெள்ளி ஒன்று செல்லுதே

அது மன்னன் இயேசு பிறந்தசெய்தியை சொல்லுதே


1. விந்தை காணவே வந்த ஞானியார் 

கந்தை துணியிலே மன்னனைக் கண்டார் சிந்தை களிகூறவே உள்ளமெல்லாம் மகிழவே 

காணிக்கைகள் தந்து அவர் பாதம் பணிந்தார் 


2.சாந்த ரூபனே சாக ஜீவனே

சாரோன் ரோஜாவே லீலிபுஷ்பமே 

மின்னுகிற நட்சத்திரமாய் ஒளிதரும் ஜோதியாய் 

உண்மை சொல்ல உலக வாணில் பயணம் போகுதே


ஸ்திரியின் வித்தாய் வந்தவர்

தாவீதின் வேரானவர்
தீர்க்கன் சொன்ன மேசியா
வாக்குத்ததமானவர் - 2

பாடுவோம் கொண்டாடுவோம்
இயேசு பிறந்தாரே - 4

1.நம்மை மீட்க மண்ணிலே
தேடி வந்த இரட்சகர்
என்றும் நம்மில் வாழவே
இம்மானுவேலானாரே - 2

2.சாபங்கள் யாவும் போக்கவே
வியாதிகள் எல்லாம் நீக்கவே
என்றும் மகிழ்ந்து வாழவே
இரட்சகராக பிறந்தாரே - 2

3.கரங்களை தட்டி பாடுவோம்
கவலையை மறந்து துதிப்போம்
என்றும் நம்மோடிருப்பவர்
சகலத்தையும் புதிதாக்குவார் -2


அந்த மாலை காற்றினில் கீதம் 
அது தூதர்கள் பாடிடும் கீதம் 
அதைக் கேட்டு மகிழ்ந்திட நாமும் 
அந்த முன்னனை நோக்கி செல்வோம் 

1.பொன்மாளிகை உமக்கங்கு இல்லை
பசும்புல்லணைதான் பஞ்சு மெத்தை
அன்பு பாலனின் புன்னகை கண்டு 
மண மாளிகை யார் தரவில்லை

வெள்ளி ஒன்று 
புது வெள்ளி ஒன்று வானத்திலே தோன்றியதே 
அது நல்ல செய்தி ஒன்று கூறிடுதே 
யூதருக்கு ராஜா பிறந்தார் என்று 
யூகித்தார் சாஸ்திரிகள் உண்மை அதே 

1.தங்க கட்டி கொண்டு வரலாமா 
தங்க பாலனுக்கு பரிசாகத் தரலாமா 
வாரும் வாரும் அதை தாரும்  தாரும் 
மிக நல்ல பரிசு அதுவே 
மங்கா புகழ் மன்னவனையே 
சங்கீதம் பாடி தொழுதிடுவோம் 

2.தூபவர்க்கம் கொண்டு வரலாமா 
தூய பாலனுக்கு பரிசாக தரலாமா 
வாரும் வாரும் அதை தாரும்  தாரும்
மிக நல்ல பரிசு அதுவே 
மங்காப் புகழ் மன்னவனையே 
சங்கீதம் பாடி தொழுதிடுவோம்


பெத்தலையிலே சத்திரத்திலே
மன்னன் இயேசு பிறந்தார்2
அல்லேலூயா அல்லேலூயா 2
அல்லேலூயா 3ஆமென்

1.வானாதி வானங்களே போற்றிப்பாடுங்கள்
தூதர் சேனைகளே துதித்து பாடுங்கள் 2
துக்கம் இல்லை இனி துயரம் இல்லை
என்றென்றும் ஆனந்தமே 2

2.வானத்திலே நட்சத்திரம் வழி காட்டுதே
ஞானி மூவர் தேடி வந்து வனங்கினரே 2
வெள்ளைப்போலம் தூபவர்கம் பொன்னைக் கொடுத்தார்களே

3. தூதர்கள் சேனையெல்லாம் துதி பாடுதே
மேய்பர்கள் செய்தி கேட்டு தேடினரே 2
இயேசுவைக் கண்டு தொழுகின்றாரே
ஆனந்த சந்தோஷமே 2


மாமன்னன் மானிடரை மீட்க – மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்
மாசற்ற மாணிக்கம் மகிமையைத் துறந்து – மண்ணிலே பிறந்தார்
நம் மனதிலே பிறந்தார்


மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் எண்ணத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் உள்ளத்தில்
மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் இல்லத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் வாழ்க்கையில்

சிறுமையானவரே எளிமையானவரே
தனிமையானவரே கைவிடப்பட்டவரே
உங்கள் விடிவெள்ளியான யேசு பெத்தலகேமில் பிறந்திருக்கிறார்



பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...