வெள்ளி, 30 அக்டோபர், 2015

ரப்சாக்கே யார்? சேனைத்தலைவர்களில் ஒருவன்.

ரப்சாக்கே (பானபாத்திரத்தலைவன்) சேனைத்தலைவர்களில் ஒருவன்.

அசீரிய சேனையில் மேலான உத்தியோகமுள்ளவனுக்கு 'தர்தான்' என்றும், அவனுக்கு அடுத்தவனுக்கு 'ரப்சாக்கே' என்றும் பட்டப்பெயர்கள் வழங்கப்பட்டன. 'ரப்சாரிஸ்' என்பது அரமனைப் பிரதானிகளுக்கு மேலானவனுடைய பட்டப்பெயர்.

சனகெரிப் இவர்கள் மூன்று பேரையும் எசேக்கியா ராஜாவிடம் அனுப்பிப் பட்டணத்தை ஒப்புக்கொடுக்கும்படி கேட்டான். 2இராஜா 18:17-19
"ஆகிலும் அசீரியா ராஜா லாகீசிலிருந்து தர்தானையும் ரப்சாரீசையும் ரப்சாக்கேயையும் பெரிய சேனையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவர்கள் எருசலேமுக்கு வந்து, வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் சாலகத்தண்டையிலே நின்று,"
"ராஜாவை அழைப்பித்தார்கள்; அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் அவர்களிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்."
"ரப்சாக்கே அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவானவர் உரைக்கிறதும், நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதும் என்னவென்றால்: நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன?"

ஏசாயா அதிகாரம் 36, 37

Isaiah          36:1-22  "எசேக்கியா ராஜா அரசாண்ட பதினாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற அரணான சகல பட்டணங்களுக்கும் விரோதமாய் வந்து, அவைகளைப் பிடித்துக்கொண்டான்."
அப்பொழுது அசீரியா ராஜா லாகீசிலிருந்து ரப்சாக்கேயைப் பெரிய சேனையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவன் வந்து வண்ணார்துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் சாலகத்தண்டையிலே நின்றான்.
"அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் அவனிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்."
"ரப்சாக்கே அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவானவர் உரைக்கிறதும், நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதும் என்னவென்றால்: நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன?"
"யுத்தத்துக்கு மந்திராலோசனையும் வல்லமையும் உண்டென்று சொல்லுகிறாயே, அது வாய்ப்பேச்சேயன்றி வேறல்ல; நீ என்னை விரோதிக்கும்படி யார்மேல் நம்பிக்கைவைத்திருக்கிறாய்?"
"இதோ, நெரிந்த நாணல்கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய்; அதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவன் உள்ளங்கையில் பட்டுருவிப்போகும்; எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற யாவருக்கும் அப்படியே இருப்பான்."
"நீ என்னிடத்தில்: நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புகிறோம் என்று சொல்வாயாகில், அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் அல்லவோ எசேக்கியா அகற்றி, யூதாவையும், எருசலேமையும் நோக்கி: இந்தப் பலிபீடத்தின்முன் பணியுங்கள் என்றானே."
நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுப்பேன்; நீ அவைகள்மேல் ஏறத்தக்கவர்களைச் சம்பாதிக்கக்கூடுமானால் அசீரியா ராஜாவாகிய என் ஆண்டவனோடே சபதங்கூறு.
"கூறாதேபோனால், நீ என் ஆண்டவனுடைய ஊழியக்காரரில் ஒரே ஒரு சிறிய தலைவனுடைய முகத்தை எப்படித் திருப்புவாய்? இரதங்களோடு குதிரைவீரரும் வருவார்கள் என்று எகிப்தையா நம்புகிறாய்?"
இப்பொழுதும் கர்த்தருடைய கட்டளையில்லாமல் இந்தத் தேசத்தை அழிக்க வந்தேனோ? இந்தத் தேசத்துக்கு விரோதமாய்ப் போய் அதை அழித்துப்போடு என்று கர்த்தர் என்னோடே சொன்னாரே என்று சொன்னான்.
"அப்பொழுது எலியாக்கீமும் செப்னாவும் யோவாக்கும், ரப்சாக்கேயைப் பார்த்து: உம்முடைய அடியாரோடே சீரியபாஷையிலே பேசும், அது எங்களுக்குத் தெரியும்; அலங்கத்திலிருக்கிற ஜனத்தின் செவிகள் கேட்க எங்களோடே யூதபாஷையிலே பேசவேண்டாம் என்றார்கள்."
"அதற்கு ரப்சாக்கே: உங்களோடுங்கூடத் தங்கள் மலத்தைத் தின்னவும், தங்கள் நீரைக் குடிக்கவும், அலங்கத்திலே தங்கியிருக்கிற புருஷரண்டைக்கே அல்லாமல், உன் ஆண்டவனண்டைக்கும், உன்னண்டைக்குமா, என் ஆண்டவன் இந்த வார்த்தைகளைப் பேச என்னை அனுப்பினார் என்று சொல்லி;"
"ரப்சாக்கே நின்றுகொண்டு, யூதபாஷையிலே உரத்தசத்தமாய்: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவுடைய வார்த்தைகளைக் கேளுங்கள்."
எசேக்கியா உங்களை வஞ்சியாதபடி பாருங்கள்; அவன் உங்களைத் தப்புவிக்கமாட்டான்.
"கர்த்தர் நம்மை நிச்சயமாய்த் தப்புவிப்பார், இந்த நகரம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, எசேக்கியா உங்களைக் கர்த்தரை நம்பப்பண்ணுவான்; அதற்கு இடங்கொடாதிருங்கள் என்று ராஜா சொல்லுகிறார்."
"எசேக்கியாவின் சொல்லைக் கேளாதிருங்கள். அசீரியா ராஜா சொல்லுகிறதாவது: நீங்கள் என்னோடே இராசியாகி, காணிக்கையோடே என்னிடத்தில் வாருங்கள்."
"நான் வந்து, உங்களைத் தானியமும் திராட்சத்தோட்டமுமுள்ள தேசமும், அப்பமும் திராட்சரசமுமுள்ள தேசமுமாகிய உங்கள் தேசத்துக்கு ஒப்பான தேசத்துக்கு அழைத்துக்கொண்டு போகுமளவும், அவனவன் தன்தன் திராட்சச்செடியின் கனியையும், தன்தன் அத்திமரத்தின் கனியையும் புசித்து, அவனவன் தன் தன் கிணற்றின் தண்ணீரைக் குடியுங்கள்."
கர்த்தர் நம்மைத் தப்புவிப்பார் என்று உங்களைப் போதனைசெய்ய எசேக்கியாவுக்குச் செவிகொடாதிருங்கள்; ஜாதிகளுடைய தேவர்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்ததுண்டோ?
ஆமாத் அர்பாத் பட்டணங்களின் தேவர்கள் எங்கே? செப்பர்வாயீமின் தேவர்கள் எங்கே? அவர்கள் சமாரியாவை என் கைக்குத் தப்புவித்ததுண்டோ?
"கர்த்தர் எருசலேமை என் கைக்குத் தப்புவிப்பார் என்பதற்கு, அந்தத் தேசங்களுடைய எல்லா தேவர்களுக்குள்ளும் தங்கள் தேசத்தை என் கைக்குத் தப்புவித்தவர் யார் என்று ராஜா சொல்லுகிறார் என்றான்."
அவர்களோ அவனுக்கு ஒரு வார்த்தையையும் பிரதியுத்தரமாகச் சொல்லாமல் மவுனமாயிருந்தார்கள்; அவனுக்கு மறுஉத்தரவு சொல்லவேண்டாம் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்.
"அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும், வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து, ரப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்கு அறிவித்தார்கள். "

Isaiah          37:1-38  "ராஜாவாகிய எசேக்கியா அதைக்கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டு உடுத்திக்கொண்டு, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து,"
"அரமனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், சம்பிரதியாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பரையும், ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்திற்கு இரட்டு உடுத்தவர்களாக அனுப்பினான்."
"இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும், கண்டிதமும், தூஷணமும் அநுபவிக்கிற நாள்; பிள்ளைப்பேறு நோக்கியிருக்கிறது; பெறவோ பெலன் இல்லை."
"ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி, அசீரியா ராஜாவாகிய தன் ஆண்டவனால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளை உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிற வார்த்தைகளினிமித்தம் தண்டனை செய்வார்; ஆகையால், இன்னும் மீதியாயிருக்கிறவர்களுக்காக விண்ணப்பஞ்செய்வீராக என்று எசேக்கியா சொல்லச்சொன்னார் என்றார்கள்."
இவ்விதமாய் எசேக்கியா ராஜாவின் ஊழியக்காரர் ஏசாயாவினிடத்தில் வந்து சொன்னார்கள்.
அப்பொழுது ஏசாயா அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும்.
"இதோ, அவன் ஒரு செய்தியைக் கேட்டு, தன் தேசத்துக்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்பதை உங்கள் ஆண்டவனிடத்தில் சொல்லுங்கள் என்றான்."
"அசீரியா ராஜா லாகீசை விட்டுப்புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பிப்போய், அவன் லிப்னாவின்மேல் யுத்தம்பண்ணுகிறதைக் கண்டான்."
"அப்பொழுது, எத்தியோப்பியாவின் ராஜாவாகிய திராக்கா உம்மோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அதைக் கேட்டபோது அவன் எசேக்கியாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:"
"நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை எத்தவொட்டாதே."
"இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் சங்கரித்த செய்தியை நீ கேள்விப்பட்டிருக்கிறாய்; நீ தப்புவாயோ?"
"என் பிதாக்கள் அழித்துவிட்ட கோசானையும், ஆரானையும், ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் புத்திரரையும் அவர்களுடைய தேவர்கள் தப்புவித்ததுண்டோ?"
"ஆமாத்தின் ராஜாவும், அர்பாத்தின் ராஜாவும், செப்பர்வாயீம் ஏனா ஈவா பட்டணங்களின் ராஜாவும் எங்கே என்று சொல்லுங்கள் என்றார்."
"எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்த நிருபத்தை வாங்கி வாசித்தான்; பின்பு எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய் அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து,"
கர்த்தரை நோக்கி:
"சேனைகளின் கர்த்தாவே, கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்."
"கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக்கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும், சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளையெல்லாம் கேளும்."
"கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அந்த ஜாதிகளையும், அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி,"
"அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலையான மரமும் கல்லுந்தானே; ஆகையால் அவைகளை நிர்த்தூளியாக்கினார்கள்."
"இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்களெல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம் பண்ணினான்."
"அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா, எசேக்கியாவுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிபினிமித்தம் நீ என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணினாயே."
"அவனைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிற வசனமாவது: சீயோன் குமாரத்தியாகிய கன்னியாஸ்திரீ உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம்பண்ணுகிறாள்; எருசலேம் குமாரத்தி உன் பின்னாலே தலையைத் துலுக்குகிறாள்."
யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாய் உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாய் அல்லவோ உன் கண்களை மேட்டிமையாய் ஏறெடுத்தாய்.
"உன் ஊழியக்காரரைக்கொண்டு நீ ஆண்டவரை நிந்தித்து: என் இரதங்களின் திரளினாலே நான் மலைகளின் கொடுமுடிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்; அதின் உயரமான கேதுருமரங்களையும், உச்சிதமான தேவதாரு விருட்சங்களையும் நான் வெட்டி, உயர்ந்த அதின் கடைசி எல்லைமட்டும், அதின் செழுமையான வனமட்டும் வருவேன் என்றும்,"
நான் கிணறு வெட்டித் தண்ணீர் குடித்தேன்; என் உள்ளங்காலினால் அரணிப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறளவும்பண்ணினேன் என்றும் சொன்னாய்.
"நான் வெகுகாலத்துக்குமுன் அதை நியமித்து, பூர்வநாட்கள்முதல் அதைத் திட்டம்பண்ணினேன் என்பதை நீ கேட்டதில்லையோ? இப்பொழுது நீ அரணான பட்டணங்களைப் பாழான மண்மேடுகளாக்கும்படி நானே அதைச் சம்பவிக்கப்பண்ணினேன்."
"அதினாலே அவைகளின் குடிகள் கையிளைத்தவர்களாகி, கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் பூண்டுக்கும், பச்சிலைக்கும், வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும், ஓங்கி வளருமுன் தீய்ந்துபோகும் பயிருக்கும் சமானமானார்கள்."
"உன் இருப்பையும், உன் போக்கையும், உன் வரவையும், நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளிக்கிறதையும் அறிவேன்."
"நீ எனக்கு விரோதமாய்த் கொந்தளித்து, வீரியம்பேசினது என் செவிகளில் ஏறினபடியினாலே, நான் என் துறட்டை உன் மூக்கிலும் என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்த வழியே உன்னைத் திரும்பப்பண்ணுவேன்."
"உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால்: இந்த வருஷத்திலே தப்பிப் பயிராகிறதையும், இரண்டாம் வருஷத்திலே தானாய் விளைகிறதையும் சாப்பிடுவீர்கள்; மூன்றாம் வருஷத்திலோ விதைத்து அறுத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைப் புசிப்பீர்கள்."
யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள்.
"மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலுமிருந்து புறப்படுவார்கள்; சேனைகளுடைய கர்த்தரின் வைராக்கியம் இதைச் செய்யும்."
ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்துக்குள் பிரவேசிப்பதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்கு முன்பாகக் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராகக் கொத்தளம் போடுவதுமில்லை.
"அவன் இந்த நகரத்துக்குள் பிரவேசியாமல், தான் வந்தவழியே திரும்பிப்போவான்."
"என்னிமித்தமும் என் தாசனாகிய தாவீதினிமித்தமும், நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான்."
"அப்பொழுது கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம் பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்களெல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள்."
"அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிராயணப்பட்டுத் திரும்பிப்போய், நினிவேயில் இருந்துவிட்டான்."
"அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவன் குமாரராகிய அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டு, அரராத் தேசத்துக்குத் தப்பி ஓடிப்போனார்கள்; அவன் குமாரனாகிய எசரத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து அரசாண்டான். "

அந்திக் கிறிஸ்துவும்அவனின் 666 என்றமுத்திரையும்

அந்திக் கிறிஸ்துவும் அவனின் 666 என்ற முத்திரையும்:
==========================


நாம் இந்த உலகத்தின் கடைசி நிமிடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த முழு உலகமும் ஒரே ஒரு சர்வாதிகாரியுடைய ஆட்சிக்குள் போகப்போகிறது முழு உலகத்தையும் கட்டுப்படுத்தி ஒவ்வொரு தனி மனிதனுடைய செயல்பாட்டையும் கண்காணித்து இந்த உலகத்தை ஆளுகை செய்யப்போகிற ஒருவனை பற்றி பைபிள் தெளிவாக கூறுகின்றது அவன் தான் பிசாசு. ஆம் பிரியமானவர்களே இந்த உலகம் பிசாசினுடைய ஆட்சிக்குள் போகப்போகிறது தற்போது உலகத்தில் நடக்கும் கெட்டசெயல்களையும், ஆபாசங்களையும்,
கொடுமைகளையும் பார்க்கும் உங்களுக்கு இதன் அர்த்தம்புரியாததொன்றல்ல. இன்று உலகமும் கூட தீவிரவாதம் அற்ற, ஒரே யோசனையுள்ள, சமத்துவம் நிறைந்த ஒரு
அரசியல் அமைப்பைத்தான் தேடிக்கொண்டிருக்கிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பாக யோவான் என்பவருக்கும், 2600 ஆண்டுகளுக்கு முன்பாக தானியேல் என்பவருக்கும் கர்த்தரால்
கடைசிகாலங்களில் கிறிஸ்து விரோதி எனப்படும் பிசாசாகிய சாத்தானுடைய ஆட்சிவரும் என்று தரிசனங்களால் காட்டப்பட்டது
இன்னும் பல பைபிள் ஆகமங்களில் அதை பற்றி தெளிவாகக்கூறப்பட்டுள்ளது. கடைசிகாலங்களில் சாத்தான் அறிவு

பெருத்தவனாக பலம் நிறைந்தவனாக இந்த உலகத்தை ஆட்சி செய்யும்படி வருவான் அவனுக்கு எல்லா நாடுகளும் உதவி செய்யும்.
இந்த கிறிஸ்து விரோதி முழு உலகத்தையும் கட்டுப்படுத்தி ஒவ்வொரு தனி மனிதனுடைய செயல் பாட்டையும் கண்காணித்து இந்த உலகத்தை ஆளுகை செய்வான், இந்த கிறிஸ்து
விரோதிக்கு ஒரு இலக்கம் இருக்கும், அந்த இலக்கம் 666 அந்த இலக்கத்தை ஒவ்வொறு மனிதனும்தனது வலது கையில் அல்லது
நெற்றியில் தரித்து கொள்ள வேண்டும் அப்படி தரித்து கொல்லாதவர்களுக்கு வாங்கவும்விற்கவும் முடியாது அத்தோடு
இவன் தன்னை தெய்வமாக வழிபடும் படி செய்வான்தன்னை போன்ற ஒருவச்சிலைகளை உண்டு பண்ணி எல்லா நாடுகளிலும்
நகரங்களிலும் கிராமங்களிலும் வீதிகளிலும் அதை வைத்து மனிதர்களை வழிபடசெய்வான் அந்த சிலை பேசக்கூடியதாக இருக்கும் என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது. 
 ( பைபிள் - வெளிப்படுத்தின சுவிசேஷம் 13 ம் அதிகாரம்)

இது சாத்தியமா?

ஒவ்வொரு தனி மனிதனுடைய செயல்பாட்டையும் கண்காணிப்பது எப்படி?


தற்போது நாம் பயன்படுத்தும் செல்போனில் சிம்
எனப்படும் தொலைத்தொடர்பை ஏற்படுத்தும் ஒரு சாதனம்
இருக்கிறது இதில் RFID (Radio Frequency Identification) எனப்படும் ஒரு தொழில்நுட்பம் பயன்படுத்தபடுகிறது அதற்கூடாக நாம் எந்த
ஊரில் எந்த நாட்டில் எந்த இடத்தில் இருக்கிறோம் என செட்டலைட் மூலம் அறிந்து கொள்ளலாம். நாம் எங்கள் செல்போனை செயலிழக்க செய்து வைத்தாலும் கூட செட்டலைட் நாம் இருக்கும்
இடத்தை காட்டி விடும். இப்படிப்பட்ட சிம்களை கொண்டு கடந்த நாட்களில் பலநாடுகளில் மனிதர்களுக்கு MNIC (Multipurpose National Identity
Card) எனும் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது இந்தியாவிலும் கூட இந்த அட்டை வழங்கப்பட்டதை நாம் செய்திதாள்களில் காணலாம், இந்த அட்டை இருந்தால் மட்டும் தான்
ஒரு நபருக்கு பொருள் வாங்கவோ விற்கவோ வங்கிகாரியங்கள் செய்யவோ வைத்தியசாலை செல்லவோ வேறு எந்த காரியம் செய்யவோ முடியும். இந்த அட்டையை வைத்திருக்கும்
நபரை கண்காணிக்கலாம் அவருடைய எல்லாதொடர்புகளும் கைரேகை இரத்த பிரிவு என்பவை கூட இதில் காணப்படும்.


இந்த அட்டையில் 3 காரியங்கள் காணப்படுகிறது

1) அதன் நாமம்
2) 16 இலக்க எண்
3) அதன் முத்திரை தற்போது விஞ்ஞானிகள் இந்த
அட்டையை ஒருவர் தொலைத்து விட்டாலோ அல்லது பாவிக்காமல் இருந்தாலோ அவரை கண்காணிக்க முடியாது என்று ஆலோசனை
செய்து மனிதனுடைய சரீரத்திலேயே இதை பொருத்தும்படி வகைதேடி தற்போது மிக சிறிய அளவிலான பையோ சிப் ( BIOCHIP) எனும் ஒரு சிப்பை கண்டுபிடித்துள்ளனர். வெரிசிப் (VERICHIP) எனப்படும் இந்த சிப் ஆனது ஒரு நெல்லின் அளவுக்கு சமனானதாக இருக்கிறது.

இந்த சிப்பை மனித உடலில் எந்த பகுதியில் பொருத்தினால் அது இயங்கும் என்பதை விஞ்ஞானிகள் ஆராட்சி செய்தபோது ஒரு
மனிதனுடைய வலது கையில் அல்லது நேற்றியில் மட்டும் தான் இந்த சிப்பை பொறுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். காரணம் வலது கையில்லும் அல்லது நேற்றியிலும் மட்டும் தான் இந்த சிப்பை இயக்ககூடிய மின்சாரம்
இருப்பதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதைத்தான் 2000 வருடங்களுக்கு முன்பே ஆண்டவர் யோவானுக்கு வெளிப்படுத்தி
கொடுத்தார். தற்போது இந்த சிப்பானது அமேரிக்காவில் அனேக கம்பனிகளில் மனிதர்களுக்கு பொருத்தப்பட்டு வருகின்றது FDA என்ற நிறுவனம் அங்கு வேலை செய்யும் ஒவ்வொருவருக்கும் இந்த சிப்பை பொருத்தி இருக்கிறது. காரணம் அதிகபடியான ஊழியர்கள்
அந்த நிறுவனத்தில் வேலை செய்வதால் அவர்கள் போக்கையும் வரத்தையும் அவதானிக்கும்படி இந்த சிப்பானது பொருத்தப்பட்டுள்ளது.
இன்று நாம் எந்த ஒரு பொருளை பார்த்தாலும் அதில் பார்கோட் எனப்படும் கோடுகள் நிறைந்த பகுதி ஒன்று காணப்படும் அந்த கோடுகளில் அந்த பொருளை குரித்த விலை உட்பட சகல விபரங்களும் அடங்கி இருக்கும் தற்போது பொருட்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த காரியத்தை தான் வருகிற நாட்களில்
மனிதர்களுக்கும் கொடுக்க போகின்றனர். பார்கோட் எனப்படும் கோடுகள் நிறைந்த பகுதியில் 3 கோடுகளில் மட்டும் எண்கள் ஏதும்
காணப்படாது ஆனால் அந்த எண்களை நாம் அதற்குரிய பதிவேட்டில் பார்ப்போமானால் அதன் இலக்கம் 666 என்று காணப்படும். ஆகையால் 2000 வருடங்களுக்கு முன்பாக பைபிளில் கூறப்பட்டுள்ள காரியம் தற்போது நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கிறது. அத்தோடு ஒவ்வொரு தனி மனிதனுடைய செயல்பாட்டையும் கண்காணிப்பது சாத்தியமே.

அடுத்தபடியாக கிறிஸ்து விரோதியான சாத்தான் இந்த உலகத்தை ஆட்சி செய்யும் போது தன்னை தெய்வமாக வழிபடும்படி செய்து தன்னைபோன்ற உருவச்சிலைகளை உண்டு பண்ணி எல்லா நாடுகளிலும் நகரங்களிலும் கிராமங்களிலும் வீதிகளிலும் அதை வைத்து மனிதர்களை வழிபடசெய்வான் அந்த சிலை பேசக்கூடியதாக இருக்கும் என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது. இப்படி நடக்குமா? 
இதன் அர்த்தம் என்ன? 
ஒரு சிலை எப்படி மனிதனை போல் பேசும்? 
வீதிகளில் எப்படி நடமாடும்?
இன்று மேலை நாடுகளில் விஞ்ஞானிகள் மனிதனை போன்ற இயந்திர மனிதனை  உருவாக்கியுள்ளனர். இந்த இயந்திர மனிதனை கொண்டு மேல்நாட்டு வாசிகள் பல காரியங்களை செய்வதாக நாம் அறிகிறோம். பெரும்பாலான தொழிற்சாலைகளிலும் கடைகளிலும் மனிதர்களுக்கு பதிலாக இந்த இயந்திர மனிதனே பயன்படுத்தபடுகிறான்.

அதுமட்டுமல்லாமல் வைத்தியசாலையில் ஒரு வைத்தியரை போல சத்திர சிகிச்சை செய்யக்கூடிய அளவிற்கு இந்த இயந்திரமனிதர்களை விஞ்ஞானிகள் உருவாக்கயுள்ளனர். தற்போது ஒரு மனித உருவின் படியும் அதற்கு ஒப்பாகவும் மனிதனுக்கு ஒத்த தசைகளை கொண்டவனாகவும் தோளை கொண்டவனாகவும் இந்த இயந்திரமனிதன் உருவாக்கப்படுகிறான். அதுமட்டுமல்லாமல் ஆயிரகணக்கான இயந்திரமனிதர்கள் உருவாக்க படுகின்றனர்.

எப்படிப்பட்ட உருவத்தில் தேவையோ அப்படிப்பட்ட உருவத்தில் தேவையான அளவு இயந்திறமனிதர்களை உருவாக்கலாம். இந்த இயந்திரமனிதன் மனிதனை போல பேசவும் பத்திரங்களை வாசிக்கவும் மற்ற எல்லா காரியங்களையும் செய்யக்கூடிய வண்ணம் தயாரிக்கபடுகிறான். பைபிளில் சொல்லப்பட்டுள்ள சிலை இது தான் இதைத்தான் யோவான் தரிசனத்தில் பேசும் சிலையாக காண்கிறார். இப்போது செய்யவேண்டியது என்ன?

எனக்கு அன்பான சகோதரனே சகோதரியே நாம் உலகத்தின் முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் பிசாசான சாத்தான் உலகை ஆளும்படி வரப்போகிறான் 7 ஆண்டுகள் மட்டுமே அவன் ஆட்சி இருக்கும் பின்பு அவனை கர்த்தர் நரகத்திலே தள்ளிபோடுவார். 

இந்த பிசாசானவன் உண்மையான தெய்வமான இயேசு கிறிஸ்துவை ஜனங்கள் அறியக்கூடாதபடிக்கு பலவிதமான பொய்யானகாரியங்களால் மனிதர்களை வஞ்சித்து வருகிறான் அந்த பிசாசின் பிடியிலிருந்து நம்மை மீட்கும் படியாகத்தான் 2000 வருடங்களுக்கு முன்பாக எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனிதரூபம் எடுத்து பூமிக்கு இறங்கி வந்து நமக்காக கல்வாரி சிலுவையில் பலியானார். முழு உலகத்தையும் உண்டாக்கின அவர் தன்னுடைய ரூபத்திலேயே உலகிற்கு வந்திருப்பாராயின் மனிதர்களுக்கு அவரை கண்டு உயிருடன் இருந்திருக்க முடிந்திருக்காது. ஆதியிலே அவர் உலகத்தை உண்டாக்கி அதை மனிதனுக்கு கொடுத்தார் மனிதன் பாவத்தால் அதை பிசாசிற்கு விற்று போட்டான். உலகம் தோற்றமுதல் மனிதனை மோசம் போக்கும் பிசாசானவனை அழித்துபோடும்படிக்கு தான் கர்த்தராகிய இயேசு நரகத்தை உண்டாக்கினார்.
இயேசு கிறிஸ்துவை பின்பற்றாத எல்லா மனிதரையும் இந்த பிசாசானவன் தனக்கு சொந்தமான நரகத்திற்கு கொண்டு செல்கிறான்.
எந்த மனிதனும் இயேசு கிறிஸ்துவை பின்பற்றாவிட்டால் பரலோகத்திற்கு போகமுடியாது. இதுதான் சத்தியம்.
மறுப்பிறப்பு என்று ஒன்று கிடையாது ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது (எபி
9:27)

ஆனபடியால், நீர் எங்கே சென்று கொண்டிருக்கிறீர்? 

உமது ஜீவிய பயணம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது? 

இன்று உமது உயிர் உம்மைவிட்டு எடுக்கப்பட்டால் உன் ஆத்துமா எங்கேபோகும்?

ஆதலால் இன்றே உமது ஜீவியத்தை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அற்பனிப்பீரானால் அவர் உன்னை ஆசீர்வதிப்பார் நீரும் சத்தியத்தை விளங்கி கொள்ளுவீர். இதோ பிசாசினுடைய இராட்சியம் இந்த பூமிக்குவரும் முன் கர்த்தராகிய இயேசு தன் ஜனங்களுக்காக மத்திய ஆகாயம் வரை வந்து அவர்களை தம்மோடுகூட எடுத்துசெல்லபோகிறார். அப்போது ஒவ்வொருவரும் அநேகரை கானாமல் திகைப்பார்கள் டிவியிலும் பத்திரிக்கைகளிலும் செய்திகள் வெளிவரும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையிலே நீர் கைவிடப்பட்டு பிசாசின் இராட்சியத்தில் சிக்கிகொள்ளாதபடிக்கு இப்போதே மனந்திரும்பி கிறிஸ்துவிடம் வந்து சேருவீராக. ஆவலாய் உம்மை தம் கரங்கள் நீட்டி இயேசு அழைகிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமேன்...

வியாழன், 29 அக்டோபர், 2015

வேதாகமத்தில் அதிக முறை பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மனிதர்கள்.

வேதாகமத்தில் அதிக தடவைகள்
பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மனிதர்கள்.
=================================
தாவீது என்ற பெயர் 1118 தடவைகள்
மோசே என்ற பெயர் 740 தடவைகள்
ஆரோன் என்ற பெயர் 339 தடவைகள்
சவுல் என்ற பெயர் 338 தடவைகள்
ஆபிரகாம் என்ற பெயர் 306 தடவைகள்
சாலொமோன் என்ற பெயர் 295 தடவைகள்
யாக்கோபு என்ற பெயர் 270 தடவைகள்
யோசேப்பு என்ற பெயர் 208 தடவைகள்
யோசுவா என்ற பெயர் 197 தடவைகள்
பவுல் என்ற பெயர் 185 தடவைகள்
பேதுரு என்ற பெயர் 166 தடவைகள்
யோபு என்ற பெயர் 137 தடவைகள்
எரேமியா என்ற பெயர் 136 தடவைகள்
சாமுவேல் என்ற பெயர் 135 தடவைகள்
ஈசாக்கு என்ற பெயர் 127 தடவைகள்
★ நம்முடைய கர்த்தராகிய இயேசு என்னும்
நாமமோ 973 தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

✍ குறிப்பு: இது மூல ஆதாரத்தில்
இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு
ள்ளது.

வேதாகமத்தில் (BIBLE) உள்ள சில கடின சொற்களுக்கான விளக்கம்..

தமிழ் பைபிளில் உள்ள சில கடின சொற்களுக்கான விளக்கம்..

அகத்தியம் (எஸ் 4:8) - கட்டாயம், அவசியம்.

அகரதமான (ஏசா 14:15) - ஆழமான.

அசங்கியம் (எஸ்றா 9:11) - அருவருப்பு, தூய்மையின்மை.

அசம்பி (1 சாமு 21:5) - பயணிகள் தோட்பை (அகராதி குறிப்பு).

அஸ்திராயுதம் (எரே 50:25,51:20) - அதிகபட்ச கோபத்தில் பிரயோகிக்கும் ஒரு கொடுமையான ஆயுதம்.

அஞ்சிக்கை (ஓசி 3:5) - அச்சம், பயம்.

அசூசம் (புலம்பல்) - தீட்டு.

அசுப்பு (யோபு 9:23, எரோ 4:20) - சடுதியாக, திடீரென வருதல்.

அபரஞ்சி பூஷணம் (நீதி 25:12) - புடமிடப்பட்ட பொன்.

அழுங்கு (லேவி 11:30) - எறும்பு தின்னும் ஒருவித விலங்கு.

அழிம்பு (எரே 6:7) - கொள்ளையும், சூறையாடுதலும்.

ஆரோகணம் (சங் 120-134) - இசையில் மேலேறும் ஓர்சுருதி.

இதமியம் (நியா 18:20) - மகிழ்ச்சியோடு உடன்படுதல்.

ஈசல் போடுதல் - விசிலடித்தல் (விசிலடித்து நையாண்டி செய்தல்).

இளக்கரிப்பு (ஏசா 42:4) - சோர்ந்து போதல்.

உக்கல் (ஆப 3:16) - உறுத்துப் போதல்.

உசாவு துணை (யோபு 26:3) - உற்ற துணைவன்.

உம்பிளிக்கை (எஸ்றா 9:12) - மானியமாக கொடுக்கப்பட்ட பொருள்.
ஆனால் இவ்விடத்தின அர்த்தம் (நித்திய சுதந்திரம்).

உறுமால் (அப் 19:12) - கைக்குட்டை துணி.

ஒற்தலாம் (மத் 23:23,லூக் 11:42) - ஒரு தானிய வகை. (புதினா).

கடாட்சம் (உன் 8:10) - அருட்பார்வை, கருணை பெறுதல்.

ஏகோபித்து (நியா 20:1) - ஒருமித்து. கட்டியக்காரன் (தானி 3:4) - அரசு கட்டளையை ஊரில் பறைசாட்டுவோன்.

கலாதி (எஸ்றா 4:15) - கலகம், சண்டை, புரட்சி.

கலிக்கம் (வெளி 3:18) - கண்ணிலிடும் மருந்து.

கிரியிருப்பவர்கள் (2 இராஜா 14:14) - பிணைக் கைதிகள்.

கறளை (எரே 48:6) - பிரயோஜனமில்லாத.

காங்கை (ஏசா 25:5) - வெப்பம்.

காய்மகாரம் (1சாமு 18:9) - பொறாமை.

கிரியாப்பிரமாணம் (ரோம 3:27) - செயல்களில் முக்தியடைய முயற்சித்தல்..

கிரித்தியங்கள் (நியா 2:19) - தீய பழக்கங்கள், காலங்காலமாக விடாமல் வைத்திருக்கும் தீய கிரியைகள்.

குருக்கு (ஆதி 3:18) - நெருங்சில் செடி (அதிக முட்களை கொண்ட ஓர் தாவரம்).

குங்கிலியம் (யாத் 30:34) - ஒருவகை நறுமணப் பொருள். (வெள்ளை குங்கிலியம், கருங்குங்கிலியம் என இரண்டு வகை இருப்பதாக தெரிகிறது).

குலாரி வண்டில் (ஏசா 66:20) - மிருகங்கள் இழுத்துச்செல்லும் வண்டி. பல்லாக்கு.

கொறுக்கை (ஏசா 19:6) - கோரைப்புல் / நாணல்.

கொடி மாசி (யோபு 38:37) - நிலையற்று அலையும் மேகங்கள்.

கும்பு (எசே 7:14) - ஜனக்கூட்டம்.

கொம்மை (நெகே 3:1,11) - இவ்வார்த்தைக்குபல அர்த்தங்கள் உண்டு. இவ்விடத்தில் பெரிய மதில்களின் மேல் ஏற்படுத்தப்படும் காவல் மாடங்கள் என பொருள்படும்..

கோரி (யோபு 21:32) - கல்லறை, சமாதி.

சாமாசி பண்ணும் தூதன் (யோபு 33:23) - மத்தியஸ்தர், சமரசம் செய்பவர்.

சம்பாரம் (எசே 24:10) - உணவில் சேர்க்கப்படும் நறுமணப் பொருள்..

சலக்கரணை (2 இராஜா 4:13) - கரிசணையோடு. சளுக்கு (எரே 5:28) - நயமாக பேசுதல்.

சன்னது (எஸ்றா 7:11) - ஆவணம், கடிதம், அரசாணை.

சர்ப்பனை (அப் 25:3) - வஞ்சனை, பதுங்கி இருந்து தாக்குவதற்கு சூழ்ச்சி.

சன்னதக்காரன் (உபா 18:11) - பில்லி சூனிய, ஏவல் வேலை செய்கிறவன்.

சுயம்பாகி (ஆதி 40:1) - சமையற்காரன்.

சீதளம் (ஆதி 8:22) - பல அர்த்தங்கள்உண்டு. குளிர்ச்சி என்ற அர்த்தம்.

சிரேஷ்டம் (நாகூம் 3:8) - தலை சிறந்தது..

சொகுசா (எசே 1:4,8:2) - துத்தநாகமும், செம்பும் கலந்த ஓர் உலோகம்..

சுணை (எரே 51:27) - கூர்மையான முட்கள் போன்ற கொடுக்கு..

தகசுத்தோல் (யாத் 25:5,26:14) - கடற்பசுவின் தோல், (நீர் நாய், நீர் பசு).

தஸ்திர அறை (எஸ் 6:1) - பத்திரங்கள், அரசு ஆவணங்கள் வைக்கும் அறை.

தர்ப்பணம் (யாத் 38:8) - கண்ணாடி (வெண்கல கண்ணாடி).

தாக்கீது (தானி 6:7,8,12) - ஆணை.

Thanks to: Pastor Beviston.

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...