வெள்ளி, 30 அக்டோபர், 2015

அந்திக் கிறிஸ்துவும்அவனின் 666 என்றமுத்திரையும்

அந்திக் கிறிஸ்துவும் அவனின் 666 என்ற முத்திரையும்:
==========================


நாம் இந்த உலகத்தின் கடைசி நிமிடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த முழு உலகமும் ஒரே ஒரு சர்வாதிகாரியுடைய ஆட்சிக்குள் போகப்போகிறது முழு உலகத்தையும் கட்டுப்படுத்தி ஒவ்வொரு தனி மனிதனுடைய செயல்பாட்டையும் கண்காணித்து இந்த உலகத்தை ஆளுகை செய்யப்போகிற ஒருவனை பற்றி பைபிள் தெளிவாக கூறுகின்றது அவன் தான் பிசாசு. ஆம் பிரியமானவர்களே இந்த உலகம் பிசாசினுடைய ஆட்சிக்குள் போகப்போகிறது தற்போது உலகத்தில் நடக்கும் கெட்டசெயல்களையும், ஆபாசங்களையும்,
கொடுமைகளையும் பார்க்கும் உங்களுக்கு இதன் அர்த்தம்புரியாததொன்றல்ல. இன்று உலகமும் கூட தீவிரவாதம் அற்ற, ஒரே யோசனையுள்ள, சமத்துவம் நிறைந்த ஒரு
அரசியல் அமைப்பைத்தான் தேடிக்கொண்டிருக்கிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பாக யோவான் என்பவருக்கும், 2600 ஆண்டுகளுக்கு முன்பாக தானியேல் என்பவருக்கும் கர்த்தரால்
கடைசிகாலங்களில் கிறிஸ்து விரோதி எனப்படும் பிசாசாகிய சாத்தானுடைய ஆட்சிவரும் என்று தரிசனங்களால் காட்டப்பட்டது
இன்னும் பல பைபிள் ஆகமங்களில் அதை பற்றி தெளிவாகக்கூறப்பட்டுள்ளது. கடைசிகாலங்களில் சாத்தான் அறிவு

பெருத்தவனாக பலம் நிறைந்தவனாக இந்த உலகத்தை ஆட்சி செய்யும்படி வருவான் அவனுக்கு எல்லா நாடுகளும் உதவி செய்யும்.
இந்த கிறிஸ்து விரோதி முழு உலகத்தையும் கட்டுப்படுத்தி ஒவ்வொரு தனி மனிதனுடைய செயல் பாட்டையும் கண்காணித்து இந்த உலகத்தை ஆளுகை செய்வான், இந்த கிறிஸ்து
விரோதிக்கு ஒரு இலக்கம் இருக்கும், அந்த இலக்கம் 666 அந்த இலக்கத்தை ஒவ்வொறு மனிதனும்தனது வலது கையில் அல்லது
நெற்றியில் தரித்து கொள்ள வேண்டும் அப்படி தரித்து கொல்லாதவர்களுக்கு வாங்கவும்விற்கவும் முடியாது அத்தோடு
இவன் தன்னை தெய்வமாக வழிபடும் படி செய்வான்தன்னை போன்ற ஒருவச்சிலைகளை உண்டு பண்ணி எல்லா நாடுகளிலும்
நகரங்களிலும் கிராமங்களிலும் வீதிகளிலும் அதை வைத்து மனிதர்களை வழிபடசெய்வான் அந்த சிலை பேசக்கூடியதாக இருக்கும் என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது. 
 ( பைபிள் - வெளிப்படுத்தின சுவிசேஷம் 13 ம் அதிகாரம்)

இது சாத்தியமா?

ஒவ்வொரு தனி மனிதனுடைய செயல்பாட்டையும் கண்காணிப்பது எப்படி?


தற்போது நாம் பயன்படுத்தும் செல்போனில் சிம்
எனப்படும் தொலைத்தொடர்பை ஏற்படுத்தும் ஒரு சாதனம்
இருக்கிறது இதில் RFID (Radio Frequency Identification) எனப்படும் ஒரு தொழில்நுட்பம் பயன்படுத்தபடுகிறது அதற்கூடாக நாம் எந்த
ஊரில் எந்த நாட்டில் எந்த இடத்தில் இருக்கிறோம் என செட்டலைட் மூலம் அறிந்து கொள்ளலாம். நாம் எங்கள் செல்போனை செயலிழக்க செய்து வைத்தாலும் கூட செட்டலைட் நாம் இருக்கும்
இடத்தை காட்டி விடும். இப்படிப்பட்ட சிம்களை கொண்டு கடந்த நாட்களில் பலநாடுகளில் மனிதர்களுக்கு MNIC (Multipurpose National Identity
Card) எனும் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது இந்தியாவிலும் கூட இந்த அட்டை வழங்கப்பட்டதை நாம் செய்திதாள்களில் காணலாம், இந்த அட்டை இருந்தால் மட்டும் தான்
ஒரு நபருக்கு பொருள் வாங்கவோ விற்கவோ வங்கிகாரியங்கள் செய்யவோ வைத்தியசாலை செல்லவோ வேறு எந்த காரியம் செய்யவோ முடியும். இந்த அட்டையை வைத்திருக்கும்
நபரை கண்காணிக்கலாம் அவருடைய எல்லாதொடர்புகளும் கைரேகை இரத்த பிரிவு என்பவை கூட இதில் காணப்படும்.


இந்த அட்டையில் 3 காரியங்கள் காணப்படுகிறது

1) அதன் நாமம்
2) 16 இலக்க எண்
3) அதன் முத்திரை தற்போது விஞ்ஞானிகள் இந்த
அட்டையை ஒருவர் தொலைத்து விட்டாலோ அல்லது பாவிக்காமல் இருந்தாலோ அவரை கண்காணிக்க முடியாது என்று ஆலோசனை
செய்து மனிதனுடைய சரீரத்திலேயே இதை பொருத்தும்படி வகைதேடி தற்போது மிக சிறிய அளவிலான பையோ சிப் ( BIOCHIP) எனும் ஒரு சிப்பை கண்டுபிடித்துள்ளனர். வெரிசிப் (VERICHIP) எனப்படும் இந்த சிப் ஆனது ஒரு நெல்லின் அளவுக்கு சமனானதாக இருக்கிறது.

இந்த சிப்பை மனித உடலில் எந்த பகுதியில் பொருத்தினால் அது இயங்கும் என்பதை விஞ்ஞானிகள் ஆராட்சி செய்தபோது ஒரு
மனிதனுடைய வலது கையில் அல்லது நேற்றியில் மட்டும் தான் இந்த சிப்பை பொறுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். காரணம் வலது கையில்லும் அல்லது நேற்றியிலும் மட்டும் தான் இந்த சிப்பை இயக்ககூடிய மின்சாரம்
இருப்பதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதைத்தான் 2000 வருடங்களுக்கு முன்பே ஆண்டவர் யோவானுக்கு வெளிப்படுத்தி
கொடுத்தார். தற்போது இந்த சிப்பானது அமேரிக்காவில் அனேக கம்பனிகளில் மனிதர்களுக்கு பொருத்தப்பட்டு வருகின்றது FDA என்ற நிறுவனம் அங்கு வேலை செய்யும் ஒவ்வொருவருக்கும் இந்த சிப்பை பொருத்தி இருக்கிறது. காரணம் அதிகபடியான ஊழியர்கள்
அந்த நிறுவனத்தில் வேலை செய்வதால் அவர்கள் போக்கையும் வரத்தையும் அவதானிக்கும்படி இந்த சிப்பானது பொருத்தப்பட்டுள்ளது.
இன்று நாம் எந்த ஒரு பொருளை பார்த்தாலும் அதில் பார்கோட் எனப்படும் கோடுகள் நிறைந்த பகுதி ஒன்று காணப்படும் அந்த கோடுகளில் அந்த பொருளை குரித்த விலை உட்பட சகல விபரங்களும் அடங்கி இருக்கும் தற்போது பொருட்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த காரியத்தை தான் வருகிற நாட்களில்
மனிதர்களுக்கும் கொடுக்க போகின்றனர். பார்கோட் எனப்படும் கோடுகள் நிறைந்த பகுதியில் 3 கோடுகளில் மட்டும் எண்கள் ஏதும்
காணப்படாது ஆனால் அந்த எண்களை நாம் அதற்குரிய பதிவேட்டில் பார்ப்போமானால் அதன் இலக்கம் 666 என்று காணப்படும். ஆகையால் 2000 வருடங்களுக்கு முன்பாக பைபிளில் கூறப்பட்டுள்ள காரியம் தற்போது நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கிறது. அத்தோடு ஒவ்வொரு தனி மனிதனுடைய செயல்பாட்டையும் கண்காணிப்பது சாத்தியமே.

அடுத்தபடியாக கிறிஸ்து விரோதியான சாத்தான் இந்த உலகத்தை ஆட்சி செய்யும் போது தன்னை தெய்வமாக வழிபடும்படி செய்து தன்னைபோன்ற உருவச்சிலைகளை உண்டு பண்ணி எல்லா நாடுகளிலும் நகரங்களிலும் கிராமங்களிலும் வீதிகளிலும் அதை வைத்து மனிதர்களை வழிபடசெய்வான் அந்த சிலை பேசக்கூடியதாக இருக்கும் என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது. இப்படி நடக்குமா? 
இதன் அர்த்தம் என்ன? 
ஒரு சிலை எப்படி மனிதனை போல் பேசும்? 
வீதிகளில் எப்படி நடமாடும்?
இன்று மேலை நாடுகளில் விஞ்ஞானிகள் மனிதனை போன்ற இயந்திர மனிதனை  உருவாக்கியுள்ளனர். இந்த இயந்திர மனிதனை கொண்டு மேல்நாட்டு வாசிகள் பல காரியங்களை செய்வதாக நாம் அறிகிறோம். பெரும்பாலான தொழிற்சாலைகளிலும் கடைகளிலும் மனிதர்களுக்கு பதிலாக இந்த இயந்திர மனிதனே பயன்படுத்தபடுகிறான்.

அதுமட்டுமல்லாமல் வைத்தியசாலையில் ஒரு வைத்தியரை போல சத்திர சிகிச்சை செய்யக்கூடிய அளவிற்கு இந்த இயந்திரமனிதர்களை விஞ்ஞானிகள் உருவாக்கயுள்ளனர். தற்போது ஒரு மனித உருவின் படியும் அதற்கு ஒப்பாகவும் மனிதனுக்கு ஒத்த தசைகளை கொண்டவனாகவும் தோளை கொண்டவனாகவும் இந்த இயந்திரமனிதன் உருவாக்கப்படுகிறான். அதுமட்டுமல்லாமல் ஆயிரகணக்கான இயந்திரமனிதர்கள் உருவாக்க படுகின்றனர்.

எப்படிப்பட்ட உருவத்தில் தேவையோ அப்படிப்பட்ட உருவத்தில் தேவையான அளவு இயந்திறமனிதர்களை உருவாக்கலாம். இந்த இயந்திரமனிதன் மனிதனை போல பேசவும் பத்திரங்களை வாசிக்கவும் மற்ற எல்லா காரியங்களையும் செய்யக்கூடிய வண்ணம் தயாரிக்கபடுகிறான். பைபிளில் சொல்லப்பட்டுள்ள சிலை இது தான் இதைத்தான் யோவான் தரிசனத்தில் பேசும் சிலையாக காண்கிறார். இப்போது செய்யவேண்டியது என்ன?

எனக்கு அன்பான சகோதரனே சகோதரியே நாம் உலகத்தின் முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் பிசாசான சாத்தான் உலகை ஆளும்படி வரப்போகிறான் 7 ஆண்டுகள் மட்டுமே அவன் ஆட்சி இருக்கும் பின்பு அவனை கர்த்தர் நரகத்திலே தள்ளிபோடுவார். 

இந்த பிசாசானவன் உண்மையான தெய்வமான இயேசு கிறிஸ்துவை ஜனங்கள் அறியக்கூடாதபடிக்கு பலவிதமான பொய்யானகாரியங்களால் மனிதர்களை வஞ்சித்து வருகிறான் அந்த பிசாசின் பிடியிலிருந்து நம்மை மீட்கும் படியாகத்தான் 2000 வருடங்களுக்கு முன்பாக எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனிதரூபம் எடுத்து பூமிக்கு இறங்கி வந்து நமக்காக கல்வாரி சிலுவையில் பலியானார். முழு உலகத்தையும் உண்டாக்கின அவர் தன்னுடைய ரூபத்திலேயே உலகிற்கு வந்திருப்பாராயின் மனிதர்களுக்கு அவரை கண்டு உயிருடன் இருந்திருக்க முடிந்திருக்காது. ஆதியிலே அவர் உலகத்தை உண்டாக்கி அதை மனிதனுக்கு கொடுத்தார் மனிதன் பாவத்தால் அதை பிசாசிற்கு விற்று போட்டான். உலகம் தோற்றமுதல் மனிதனை மோசம் போக்கும் பிசாசானவனை அழித்துபோடும்படிக்கு தான் கர்த்தராகிய இயேசு நரகத்தை உண்டாக்கினார்.
இயேசு கிறிஸ்துவை பின்பற்றாத எல்லா மனிதரையும் இந்த பிசாசானவன் தனக்கு சொந்தமான நரகத்திற்கு கொண்டு செல்கிறான்.
எந்த மனிதனும் இயேசு கிறிஸ்துவை பின்பற்றாவிட்டால் பரலோகத்திற்கு போகமுடியாது. இதுதான் சத்தியம்.
மறுப்பிறப்பு என்று ஒன்று கிடையாது ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது (எபி
9:27)

ஆனபடியால், நீர் எங்கே சென்று கொண்டிருக்கிறீர்? 

உமது ஜீவிய பயணம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது? 

இன்று உமது உயிர் உம்மைவிட்டு எடுக்கப்பட்டால் உன் ஆத்துமா எங்கேபோகும்?

ஆதலால் இன்றே உமது ஜீவியத்தை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அற்பனிப்பீரானால் அவர் உன்னை ஆசீர்வதிப்பார் நீரும் சத்தியத்தை விளங்கி கொள்ளுவீர். இதோ பிசாசினுடைய இராட்சியம் இந்த பூமிக்குவரும் முன் கர்த்தராகிய இயேசு தன் ஜனங்களுக்காக மத்திய ஆகாயம் வரை வந்து அவர்களை தம்மோடுகூட எடுத்துசெல்லபோகிறார். அப்போது ஒவ்வொருவரும் அநேகரை கானாமல் திகைப்பார்கள் டிவியிலும் பத்திரிக்கைகளிலும் செய்திகள் வெளிவரும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையிலே நீர் கைவிடப்பட்டு பிசாசின் இராட்சியத்தில் சிக்கிகொள்ளாதபடிக்கு இப்போதே மனந்திரும்பி கிறிஸ்துவிடம் வந்து சேருவீராக. ஆவலாய் உம்மை தம் கரங்கள் நீட்டி இயேசு அழைகிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமேன்...

1 கருத்து:

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...