வியாழன், 24 செப்டம்பர், 2015

எழுப்புதல் என்றால் என்ன..?

எழுப்புதல் என்றால் என்ன..?


எழுப்புதல் என்பதை புதுப்பித்தல், உணர்வடைதல், மிக அதிகமாக செயல்பாடுகளுடன் இருத்தல், மறுமலர்ச்சி, வெதுவெதுப்பான நிலையில் இருந்து அனலாகும்படி திரும்புதல், உலகத்திலிருந்தும் பாவங்களிலிருந்தும் மனந்திரும்புதல், தேவனிடத்திற்கு திரும்புதல் அல்லது திருப்புதல் மற்றும் தேவனை சந்திக்கும்படி ஆயத்தப்படுதல் அல்லது ஆயத்தப்படுத்துதல் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்..!
•••இஸ்ரவேல் புத்திரரே, ஆபிரகாம் ஈசாக்கு இஸ்ரவேல் என்பவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திரும்புங்கள்... 2 நாளாகமம் 30 :6
அக்கிரமத்தை விட்டுத் திரும்பும்படி அவர்கள் செவியைத் திறந்து கடிந்துகொள்ளுகிறார். யோபு 36 :10
எழுப்புதல் அடைந்த மனிதனின் ஆத்துமா கீழ்கண்ட விதமாக கதறும்:
••• திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும், உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும். சங்கீதம் 6 :4
எழுப்புதல் கூட்டங்களில் கீழ்கண்ட விதமாக பிரசங்கிக்கப்படும்:
••• நீ இரட்சிக்கப்படும்படிக்கு உன் இருதயத்தைப் பொல்லாப்பறக் கழுவு, எந்தமட்டும் அக்கிரம நினைவுகள் உன் உள்ளத்திலே தங்கும். எரேமியா 4 :14
•••ஆகையால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான். அப்போஸ்தலர் 2 :36
••• நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். அப்போஸ்தலர் 2 :38
எழுப்புதல் அடைந்த சமூகமானது கீழ்கண்ட விதமாக கிரியைகள் நடப்பிக்கும்:
••• பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும். சங்கீதம் 22 :27
ஜனங்களின் மத்தியில் எழுப்புதல் உண்டாக வேண்டுமென கர்த்தரும் விரும்புகிறார்:
°°° 7 நான் கர்த்தர் என்று அறியும் இருதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்திற்குத் ‪#‎திரும்புவார்கள்‬ என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 24 :7
∆∆மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது. மத்தேயு 3 :2
∆∆மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள். மத்தேயு 3 :8

திங்கள், 7 செப்டம்பர், 2015

இயேசு கடவுள் என்று பரிசுத்த வேதம் சொல்லுகின்றதா ?

இயேசு கடவுள் என்று பரிசுத்த வேதம் சொல்லுகின்றதா ?

நிச்சயமாக அப்படியே சொல்கின்றது .

1. பாவத்தை மன்னிக்க தகுதி ஏக இறைவனுக்கே உண்டு ; தனக்கு அந்த அதிகாரம் இருப்பதாக இயேசு சொல்கின்றார்..
மத்தேயு 9:6 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் ..
2. இந்த உலகத்தை நியாம் தீர்க்க ஒன்றான மேய்தேவனுக்கே தகுதி உண்டு ; அந்த தகுதி தனக்கு இருப்பதாக இயேசு சொல்கின்றார் ..
யோவான் 5:22 அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையு.ம் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்...
.
3. இந்த உலகத்தை சிருஷ்டிக்க எல்லாம் வல்ல கடவுளால் மட்டுமே முடியும் ; இந்த உலகத்தை சிருஷ்டித்தவர் இயேசு தான் என்று வேதம் சொல்கின்றது .
.
யோவான் 1:3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை..
.
.
4. மரணத்தை எந்த தீர்க்க தரிசியும் ஜெயித்ததாக சரித்திரமே இல்லை ; மரணத்தை ஜெயிக்க கடவுளால் மட்டுமே முடியும் . இயேசு , மரணத்தை ஜெயித்ததன் மூலம் தான் தான் கடவுள் என்பதை நிருபித்துள்ளார் ..
.
.ரோமர் 1:5. மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்....
.
5.எதையும் செய்ய வல்லவர் மட்டுமே கடவுளாக இருக்க முடியும் ; கீழே பூமியில் அவர் நடமாடிய பொழுது மேலே பிதாவாக இருப்பதும் நானே என்றார் ; இது எந்த மனித மூளைக்கும் எட்டாத கடவுளுடைய தகுதியாகும் .
.
யோவான் 3:13. பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை..
.
6.இந்த மனிதர்கள் இப்படி தான் வாழ வேண்டும் என்று கட்டளைகள் கொடுப்பதற்கும் , அதை மாற்றி அமைப்பதற்கும் கடவுள் ஒருவருக்கே தகுதி உண்டு ; அந்த தகுதி தனக்கு இருப்பதாக மத்தேயு 5 முதல் 7 அதிகாரத்தில் அனேக முறை சொல்லி உள்ளார் ; அவர் பேசும் பொழுது கடவுள் தீர்க்கதரிசியாகிய என் மூலம் சொல்கின்றார் என்று சொல்லாமல் நான் சொல்கின்றேன் என்று சொல்லி கட்டளைகளை கூறுகின்றார் .
.
மத்தேயு 5:27. விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
28. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று..
.மத்தேயு 5 22. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளுகிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்;.
மத்தேயு 5:32. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித் தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்....
.
7.ஒரு சிறு தவறும் செய்யாதவர் தான் கடவுளாக இருக்க முடியும் ; இயேசு , தான் ஒரு சிறு பாவம் கூட செய்யாதவர் என்று சொல்கின்றார் ..
.
யோவான் 8:46 என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை...
.
8.பரலோகத்திற்கு செல்ல எந்த மனிதனும் வழியாக இருக்க முடியாது .
.இயேசு தான் மட்டுமே பரலோகம் செல்ல வழி என்று சொல்கின்றார் ..
.
யோவான் 3 :13. பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை..
.
.இவரை மட்டுமே நான் பணிந்து கொள்கின்றேன் ..
.****************************************************************************.
இயேசு , நான் தான் கடவுள் , என்னை வணங்குங்கள் என்று நேரடியாக சொன்னாரா ?.
.
அவர் இப்படிதான் தன்னை வெளிப்படுத்த வேண்டும் ; அப்படி வெளிபடுத்தினால் தான் நான் அவரை வணங்குவேன் என்று அவருக்கு நிபந்தனை போட நீயும் நானும் யார் ? ; அவர் எப்படி தன்னை வெளிப்படுத்தினாரோ அப்படியே அவரை ஏற்று கொள்ள வேண்டும் அது தான் எல்லாம் வல்ல ஒரே இறைவனுக்கு கொடுக்கும் மரியாதை

தேவனுடைய பெயர்கள்

தேவனுடைய பெயர்கள்

"ஏல்" என்ற பொருளுடன் இணைந்த பெயர்கள்:-

ஏல் என்ற எபிரெய சொல்லிற்கு
"வல்லமையுடையவர்" என்று பொருள். தமிழ்
வேதாகமத்தில் இந்த சொல் "தேவன்" என்று
எழுதப்பட்டுள்ளது. இந்த சொல்லுடன் இணைந்த
தேவனுடைய பெயர்களை காண்போம்.

1. El Elyon - உன்னத தேவன். ஆதி 14:18

2. El Shaddai - சர்வ வல்லமையுள்ள தேவன் (ஆதி
17:1) எல்லாம் செய்யவல்ல தேவன்,
போதுமானவரான தேவன் (Almighty GOD, All sufficient
GOD), வல்லமை அளிக்கிறவர், தமது ஜனத்தின் சகல
தேவைகளை சந்திக்கிறவர், பாதுகாக்கிறவர்
என்ற பல கருத்துகள் அடங்கிய பெயர்.

3. El Olam - சதாகாலமுமுள்ள தேவன் (Everlasting
GOD) ஆதி 21:33)

4. El Gadol - மகா தேவன் (சங் 95:3)

5. El Chai - ஜீவனுள்ள தேவன் யோவா 3:10

6. El Qanna, El Qanno - எரிச்சலுள்ள தேவன் மாத்
20:5;34:14

7. El Aman இரக்கமுள்ள தேவன் உபா 4:31

8. El Rachum -
உண்மையுள்ள தேவன் உபா 7:9

9. El Roi -0- எள்னை காண்கின்ற தேவன் ஆதி 16:13

10. El Gibbor - வல்லமையுள்ள தேவன் ஏசா 9:6

யேகோவா என்ற பெயருடன் இணைந்தவை:-

யேகோவா என்றால் மாறாதவர்,
நிலைத்திருக்கிறவர் என்றும், தாமாக
உயிருடனிருந்து (Self existing one) தம்மை
வெளிப்படுத்துகிறவர் என்றும் பொருள்.
எபிரெய மொழியில் உயிரெழுத்துக்கள்
கிடையாது. YHWH என்ற இப்பெயர் மிகவும்
புனிதமானது என்று கருதிய யூதர்கள் அதை
கூறாமல் விட்டுவிட்டனர். எனவே அதன் சரியான
உச்சரிப்பு இப்பொழுது தெரியாது.
யேகோவா என்றும் யாவே என்றும் உச்சரிக்கப்பட்ட
து. இப்பெயர் "இருக்கிறவராகவே
இருக்கிறேன்" (Yeheye Asher Yeheye) என்ற பெயருடன்
தொடர்புடையது. தமிழ் வேதாகமத்தில் இச்சொல்
"கர்த்தர்" என்று பல இடங்களில் எழுதப்பட்டுள்ளது.

1. யேகோவா ஏலோஹீம் (YHWH ELOHIM) -
தேவனாகிய கர்த்தர்.
*. யேகோவா ஏலோஹே தா - உன் தேவனாகிய
கர்த்தர்.

1. யேகோவா ஏலோஹீனு - நம்முடைய
தேவனாகிய கர்த்தர்.

* யேகோவா ஏலோஹே - என் தேவனாகிய கர்த்தர்.
- ஆதி 2:4; யாத் 20:5; சங் 99:5; சகரி 14:5

2. அதோனை (ADONAI YHWH) - கர்த்தராகிய ஆண்டவர்
ஆதி 15:2,8

3. யேகோவா ஏலியோன் (YHWH ELYON) -
உன்னதமான கர்த்தர் சங் 7:17

4. யேகோவா ஹோசீனு (YHWH HOSEENU) - நம்மை
உண்டாக்கின கர்த்தர் சங் 95:6

5. யேகோவா சாபோத் (YHWH SABOATH) -
சேனைகளின் கர்த்தர் 1சாமு 1:3

6. யேகோவா நிசி (YHWH NISSI) - நமது
கொடியாகிய கர்த்தர் யாத் 17:15

7. யேகோவா யீரே (YHWH YEREH) -
பார்த்துக்கொள்கிற கர்த்தர், தேவைகளை
நிறைவாக்குகிற கர்த்தர் ஆதி 22:8-14

8. யேகோவா சிட்கீனு (YHWH TSIDKEENU) - நமது
நீதியாக இருக்கிற கர்த்தர் எரே 23:6

9. யேகோவா மெக்கடிஷ்கெம் (YHWH
MEKKADISHKEM) - தூய்மையாக்குகிற கர்த்தர்,
பரிசுத்தமாக்குகிற கர்த்தர் யாத் 31:13

10. யேகோவா ராய், யேகோவா ராஹீ (YHWH ROHI)
- மேய்பராகிய கர்த்தர் சங் 23:1

11. யேகோவா ரஃப்பெக்கா, யேகோவா ரஃப்பா
(YHWH RAPHEKA) - பரிகாரியாகிய கர்த்தர்,
சுகமாக்குகிற கர்த்தர் யாத் 15:26

12. யேகோவா ஷாலோம் (YHWH SHALOM) - (நமது)
சமாதானமாகிய கர்த்தர் நியா 6:24

13. யேகோவா ஷம்மா (YHWH SHAMMAH) -
நம்மோடிருக்கிற கர்த்தர் (The LORD is present) எசே
48:35

14. யேகோவா ஷமர் (YHWH SHAMAR) - (உன்னை)
காப்பாற்றுகிற கர்த்தர் சங் 121:5

15. யேகோவா யாஷா (YHWH YASHA) -
இரட்சகராகிய கர்த்தர் ஏசா 60:16

இதை போன்ற இன்னும் பல பெயர்கள் உண்டு.

கட்டு கதைகளுக்கு விலகி தினமும் வேதத்தை தியானியுங்கள்.

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...