வியாழன், 7 ஜனவரி, 2016

ஆவியில்  நடத்தப்படுதல்

🌹ஆவியில்  நடத்தப்படுதல்🌹

புதிய ஏற்பாட்டு காலத்தை பொறுத்தவரை"ஆவியில்  நடத்தப்படுதல்"  என்பது மிகவும்  அவசியமான ஓன்று.  ஏனெனில் புதியஉடன்படிக்கை  கீழிருக்கும் நாம் நியாயபிரமாணத்தை கைகொள்ள கவலைப்படுவது இல்லை. ஆனால்  ஆவியில் நடத்தபடுகிரவர்கள் மட்டுமே நியாயபிரமாணத்துக்கு கீழ்பட்டவர்அல்ல என்று வசனம் சொல்கிறது

கலாத்தியர் 5:18 ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.

எனவே ஆவியில் நடத்தபடாத எவரும் நியாயபிரமாணத்துக்கு கீழ்பட்டவவரே!  மேலும்

ரோமர் 8:1  கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை

ஆவியில் நடப்பவர்களுக்குதான்  ஆக்கினை தீர்ப்பு இல்லை என்றுவசனம் சொல்கிறது. எனவே இந்த ஆவியில் நடத்தபடுதல் என்றால் என்ன  என்பது  பற்றி  பார்ப்போம்.

முதலில் நாம் பரிசுத்தத் ஆவியின் வரத்தை பெற்றிருக்கிறோமா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

💥பரிசுத்தாவியைபெற வேதாகமம் காட்டும் வழிகள்!

வெறும் அந்நியபாஷை பேசுவதை வைத்தோ,  அல்லது ஆராதனை நேரத்தில் ஆடுவதை வைத்தோ ஆவியானவர் வந்திருக்கிறார் என்று உறுதிபடுத்த முடியாது. 
இதுபோன்ற காரியங்களை பிசாசும் சாதாரணமாக செய்துவிட முடியும். ஆவியின் கனிகளை  வெளிப்படுத்தாத  ஆவியானவர் உண்மையான தேவஆவியானவர் அல்ல   பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகளை நமது உள்ளத்தில் கேட்கமுடியும் அவரின் வழி நடத்துதலை நம்மால்  அறியமுடியும். அவர் துக்கப்படுவதை நாம் உணரமுடியும். ஆதி  அப்போஸ்த்தலர்களை எப்படி போதித்து /தடுத்து உணர்த்தி/ கண்டித்து நடத்தினான்ரோ அதுபோல் இன்றும் அவரால் நடத்த முடியும்.    

"ஆவியில் நடத்தப்படுதல்"என்பதை  மூன்று வகையாக பிரிக்கலாம்.

1. முழுவதும் தேவ ஆவியால் ஆட்கொண்டு நடத்தபடுதல் 
2. ஆவியானவரின்  கட்டளைபெற்று  அதன்படி நாம் நடத்தல்

3. ஆவியானவரின் நடத்துதல் மற்றும் சுயமாக நடத்தல் இரண்டும் கலந்த நிலை.

💥1. முழுவதும் ஆவியானவரால் ஆட்கொண்டு நடத்தப்படுதல்.

நமது அறிவு, ஆற்றல், விருப்பம், வெறுப்பு எல்லாவற்றையும் ஒரு ஓரத்தில் விட்டு விட்டு ஆண்டவரின் கரத்தில் நம்மை முழுவதுமாக ஒப்புகொடுத்து அவர் என்ன சொன்னாலும் கேட்டு,  ஏன்?  என்று கேள்வி கேட்காமல் எதையும் செய்ய தயாராக இருந்தால் மட்டுமே  இந்நிலை நமக்கு  கிடைக்கும். இந்த நிலையை தருவது முழுக்க முழுக்க தேவனின் கரத்தில் இருக்கிறது நாமாக என்ன முயன்றாலும் பெறமுடியாது. தகுதி வாய்ந்தவருக்கு தேவன் கொடுக்கும் ஈவுதான் இந்நிலை. அதாவது நமது அறிவுசார்ந்த நிலையை தள்ளி ஆண்டவரின் கரத்தில் நம்மை முழுவதும் விட்டுவிடுவது.  

இந்நிலையில் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. ஆண்டவரே நம்மேல் வந்து தங்கி நம்மை ஆட்கொண்டு நடத்துவார். அவர் நடத்துதலை மீறி நம்மால் ஓன்று செய்ய முடியாது.  நாம் கஷ்டப்பட்டாலும் நஷ்டப்பட்டாலும் அவர் சொல்வதை செய்தே ஆகவேண்டிய ஒரு நிலையில் ஆண்டவரின் கரம் நம்மேல் பலமாக இருக்கும்.

எசேக்கியேல் 3:14  நான் என் ஆவியின் உக்கிரத்தினாலே மனங்கசந்துபோனேன்; ஆனாலும்கர்த்தருடைய கரம் என்மேல் பலமாக இருந்தது.

நாம் நினைத்ததை செய்யமுடியாது அவர் நினைத்ததே நிறைவேறும்.

அப்போஸ்தலர் 16:7 மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம்பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார்.
 

இந்நிலையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும்  தேவனே பொறுப்பு. இந்நிலை பொதுவாக பழையஏற்பாட்டு தீர்க்கத்ரிசிகளாகிய எரேமியா, எசேக்கியேல், ஏசாயா போன்றவர்களின் நிலைக்கு ஒத்தது. புதியஏற்பாட்டுக் காலத்தில் பவுல் மற்றும் பிலிப்பு ஸ்தேவான் போன்றவர்களையும் இதற்க்கு ஒப்பிடலாம். 

 ஏசாயாவுக்கு வஸ்த்திரம் இல்லாமல் நடக்க  சொன்னதுபோல் சில இடங்களில் ஓடுவோம் சில இடங்களில் நடப்போம் சில இடங்களில் படுப்போம் அவர் தூங்கு என்று சொன்னால் தானாக தூங்குவோம். சில இடங்களில் செருப்பை கழற்றி கையில் தூக்கி செல்வோம். (பிறர் பார்த்தால் நம்மை நிச்சயம் பயித்தியம் என்று நினைப்பார்கள் ஆனால் நமக்கு அதைப்பற்றி சிறிதும் கவலை இருக்காது)  

இங்கு ஆண்டவர் அவரது திட்டத்தை நிறைவேற்ற  நம்மை எங்கு கொண்டு செல்ல வேண்டுமோ அங்கு அவரே  கொண்டுசெல்லுவார். அவரது  என்ன திட்டம் நிறைவேறியது என்பதுகூட நமக்கு சரியாக தெரியாது. சில நேரங்களில் அது நமக்கு சொல்லப்படும் சில நேரங்களில் ஒன்றும் சொல்லப்படமாட்டாது.  நமது கீழ்படிதல் மூலம் தேவனின் ஏதோ ஒரு ஆவிக்குரிய திட்டம் அங்கு நிறைவேறும் அவ்வளவுதான்.

இதுவே முழுவதும் ஆவியில்  ஆட்கொண்டு நடத்தப்படுதல். இந்நிலையில் நாம் தேவனின்  கட்டளையை  கைகொண்டு  நடக்க  கவலைப்பட வேண்டிய  அவசியம் இல்லை. அவ்வாறு அராய்ந்து கொண்டிருக்கும் ஒரு  மனபக்குவத்திலும் நாம் இருப்பதில்லை! இது முற்றிலும் தேவ ஆலோசனையின்படி நடத்தப்படுதல். 

சங்கீதம் 73:24 உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னைநடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.

புதிய ஏற்பாட்டு காலத்தில் ஆவியில் நடத்தப்படுதல் என்பது மிக மிக அவசியம் என்று பார்த்தோம். இவ்வாறு ஆவியில் நடத்தப்படுகிறவர்களுக்கு மட்டுமே ஆக்கினை தீர்ப்பு இல்லை என்பதையும்  வசனத்த்தின் அடிப்படையில் பார்த்தோம். மேலும் ஆவியில் நடத்தப்படுதலில் முதல் நிலையில் முற்றிலும் தேவனால் ஆட்கொள்ளப்பட்டு ஒரு எரேமியாபோல ஒரு ஏசாயா/ எசேக்கியேல்போல தேவனின் கரத்தில் நம்மை ஒப்புகொடுத்து அவரால் நடத்தப்படுதல் என்றும் ஆவ்வாறு நடத்தப்படும்போது நாம் தேவனின் கற்பனையை யோசித்து கைகொள்வதற்கு கவலைப்பட தேவையில்லை என்றும் பார்த்தோம். இப்பொழுது ஆவியில் நடத்தப்படுதலின் இரண்டாம் நிலையை பற்றி பார்க்கலாம்.

(இதை  எழுதுவதற்கு 
முக்கிய  காரணம் என்னவென்றால்  பவுல்  அவர்கள் திருமணம் கூட செய்யாமல் மிக பரிசுத்தமாக வாழ்ந்து தேவனுக்காக எதையும் இழக்க துணிந்து ஆவியானவரால் அநேகதரம் முழுமையாக ஆட்கொண்டு நடத்தப்பட்டவர். எனவே அவர் அவருடய பரிசுத்த நிலைக்கு தகுந்தாற்ப்போல் ஆவியானவரின்  வார்த்தைகளை எழுதியிருக்கிறார். இன்று அநேகர் அவருடைய பரிசுத்தத நிலையில் ஒரு துளி கூட இல்லாமல், ஆவியால் நடத்தபடுதல் என்றால் என்னவென்று தெரியாமலேயே, ஆவியால் நடத்தப்படுகிறோம் என்று சொல்லிக் கொண்டு துணிந்து பாவம் செய்து வாழ்கின்றனர். இந்நிலையில் ஆவியால் நடத்தப்படுதல் என்றால் என்னவென்பதை அறிதல் அவசியம் ஆகிறது)

💥  ஆவியில்   நடத்தப்படுதல்   நிலை - II

இந்நிலையில் தேவன் நம்மை  முற்றிலும்  ஆட்கொண்டு நடத்துவது இல்லை. மாறாக அவர் நம்முள் இருந்து நமக்கு கட்டளையிடுவார்  அதன்படி நடப்பதும் நடக்காததும் நமது விருப்பத்தின் அடிப்படையில் இருக்கும் :

உதாரணமாக ஒரு 

1.ஒரு குறிப்பிட்ட நபருக்கு ஆண்டவரைப்பற்றி சொல்வது பற்றியோ
2.ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு  காணிக்கை கொடுக்க சொல்வதோ 
3.நமது  உணவை உடையை பிறருக்கு  கொடுகசொல்வதோ 4.ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு நம்மை போகவேண்டாம் என்று தடை செய்வதோ 5.ஒரு குறிப்பிட்ட காரியத்தில் உத்தமத்தை கடைபிடிக்க சொல்வதொவாக கூட இருக்கலாம் 

இதுபோல் வேறு  அனேக காரியங்களில் தேவனின் வழிகாட்டி நடத்தும் செய்கையை நாம் அறியமுடியும். இவ்வாறு ஒருவர் ஆவியானவரால் கட்டளையிட்டு நடத்தப்படும் நேரத்தில் அவர் கற்பனையை கைகொள்வது பற்றி கவலை ப்பட தேவையில்லை. ஆவியானவர் சொல்லும் காரியத்தை மட்டும் சரியாக செய்தால் போதும். ஆனால் ஆவியானவரின் வார்த்தைக்கு கீழ்படியா விட்டால் அவருக்கு தண்டனை நிச்சயம் உண்டு.
அப்போஸ்தலர் 11:12 நான் ஒன்றுக்கும் சந்தேகப்படாமல் அவர்களோடேகூடப் போகும்படி ஆவியானவர் எனக்குக் கட்டளையிட்டார். 

இங்கு ஆவியானவர் பேதுருக்கு கட்டளையிடுகிறார் அதை செய்வதோ அல்லது செய்யாததோ அவரின் சொந்த விருப்பம். பலர் இதுபோல் சூழ்நிலையில் ஆவியானவரின் குரலை அமுக்கிவிட்டு தங்கள் சுயசித்தத்தின்படி நடப்பார்கள் அதற்க்கு தகுந்த காரணமும்   சொல்லிகொள்வார்கள்.  இவ்வாறு ஆவியானவரின் குரலை அசட்டை பண்ணும் நீங்கள் நியாயபிரமாணத்தின்படி  நடந்தாகவேண்டும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.     

அப்போஸ்தலர் 8:29 ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்;

இங்கு மந்திரிக்கு சுவிசேஷம் சொல்ல  பிலிப்புவுக்கு ஆவியானவரின் கட்டளை கிடைக்கிறது அதை நிறைவேற்றுவதும் நிறைவேற்றாமல் எதாவது சாக்கு சொல்லி சொல்லி தப்பித்து சொல்வதும் பிலிப்புவின் கையில் இருக்கிறது. ஆனால் அவரோ ஓடிப்போய் அவருக்கு சுவிசேஷம் சொல்ல முற்பட்டார்.

சுருக்கமாக சொன்னால்  ஆவியானவர் நம்முள் இருந்து நடத்தி தேவையான நேரங்களில்  கட்டளையிட, நாம் நமது சுய சித்தத்தால் அதன்படி நடப்பதுவே இந்த இரண்டாம் நிலை. இந்நிலையிலும்  நாம்நியாயபிரமாணத்துக்கு கீழ்பட்டவர் அல்ல ஆனால் ஆவியானவரின் வார்த்தையை மீறும்போது நிச்சயம் தண்டனை அனுபவிக்க நேரிடும்.

  *தொடர்ந்து.....வரும் பதிவில்,......*

*ஆவியில்  நடத்தப்படுதல்  மூன்றாம் நிலை!*

புதன், 6 ஜனவரி, 2016

பழைய உடன்படிக்கை   Vs புதிய உடன்படிக்கை

💥பழைய உடன்படிக்கை  
Vs புதிய உடன்படிக்கை 💥

பழைய உடன்படிக்கை என்பது  மத்தியஸ்தர்கள் மூலம் தேவனால் எழுதி கொடுக்கப்பட்ட வார்த்தைகளை  (கட்டளைகளை நியாயங்களை) நம்முடைய மனித அறிவால் அமர்ந்து  ஆராய்ந்து அதன்படி  நம்மை நாமே  நடத்துவது  அல்லது அதன்படி நடக்க நாம்  பிரயாசம் எடுப்பது  ஆகும்.   

ஆனால் புதியஉடன்படிக்கை என்றால் முற்றிலும் தேவனால் நடத்தப்படும் ஒரு நிலை. இங்கு மனித முயற்ச்சிக்கு இடமே இல்லை. நம்முள் இருக்கும் ஆவியானவர் நம்மை நடத்துவார். அவ்வாறு நடத்தபடுபவர்களுக்குதான் ஆக்கினைதீர்ப்பு இல்லை. மற்றவர்கள் எல்லோருமே பழைய நிலையிலேதான் இருக்கின்றனர் என்பதை அறிய வேண்டும்.

ரோமர் 8:1ஆனபடியால், கிறிஸ்துஇயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி  நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.

இவ்வாறு தேவஆவியில் நடத்தபடுபவர்களுக்கு நியாயபிரமாணத்தின நீதி தானாக நிறைவேறும். ஏனெனில் இங்கு நடத்திசெல்பவர் நியாய பிரமாணத்தை கொடுத்த தேவனே!    

ரோமர் 8:4 மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.

புதிய ஏற்பாட்டு காலத்தில்  ஆவியானவர்  பல பரிசுத்தவாங்களுடன் பேசி கரம்பிடித்து வழி நடத்தினார் என்பதை அனேக வசனங்கள் மூலம் உறுதிபடுத்த முடியும்.  

அப்போஸ்தலர் 13:2   பரிசுத்த ஆவியானவர் திருவுளம்பற்றினார்.

அப்போஸ்தலர் 20:23 பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன்

அப்போஸ்தலர் 21:11  பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார் .
ரோமர் 8:16  ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்.
அப்போஸ்தலர் 8:29 ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்;

இவ்வாறு தேவனின் ஆவியானவரால்  போதித்து/ கண்டித்து/ பேசி/  தடுத்து வழி நடத்துதலே ஆவியால் நடத்தபபடுதல் ஆகும். இவ்வாறு ஆவியை பெற்று நடக்காதவர்கள் ஆவியில் நடத்தப்படவில்லை என்பதை அறிய வேண்டும்.  

இப்பொழுது பழைய புதிய உடன்படிக்கைக்கு இடையே  உள்ள வேறுபாட்டை ஒரு சிறு  உதாரணம்  மூலம்  பார்க்கலாம். 

நான் என் மகனிடம் சென்னை எழும்பூருக்கு  எவ்வாறு போகவேண்டும் என்று ஒரு காகிதத்தில் எழுதிகொடுத்து "எழுதியிருக்கிறபடி பார்த்து நடந்து  சரியாக போய் சேர்" என்று சொல்வது பழைய ஏற்பாடு.

ஆனால் புதிய ஏற்ப்பாடு என்பது "நானே என் மகனை கரம்பிடித்து போதித்து என்னுடனே  அழைத்து சென்று எழும்பூரில் கொண்டுபோய்  விடுவது." 

இந்நிலையில் நான் முன்பு எழுதிகொடுத்த வழி முறைகள் அவனுக்கு நிச்சயம் தேவையில்லைதான். அவனும்  நான் எழுதிகொடுத்த பழைய வழிகளை கையில் வைத்துகொண்டு, அப்பா அங்கு போககூடாது, இங்கு போககூடாது என்று என்னிடம்\ சொல்லமுடியாது. நான் அவசரத்தினிமித்தம் வேறுவழியாக கூட அவனை அழைத்து செல்லலாம் ஆனால் நிச்சயம் அவனை எழும்பூர் கொண்டு சேர்த்து விடுவேன். எனவே நான் அவனை அழைத்துசொல்லும் அந்நேரத்தின் நான் என்ன சொல்கிறேன் என்று கேட்டு நடந்தால் மட்டும் போதுமானது

அதேபோல்  அனைத்தும்  அறிந்த நம் தேவன், ஆவியாய்  நம்முள் வந்துதங்கி, நமக்கு  போதித்து  நம்மை  கரம்பிடித்து அழைத்து செல்லும் நிலைதான் புதிய ஏற்பாட்டு நிலை. அவ்வாறு அவர் ஆவியில் நம்மை வழிநடத்தி செல்லும்போது நாம் எதற்கும் பயப்படாமல், ஒரு சில  பாரம்பரிய கட்டளைகளை மீறினாலும் அவர் இழுத்து செல்லும் வழியில் அவருக்கு கீழ்படிந்து சென்றால்  மட்டுமே போதுமானது.   

💥வசனப்படி கீழ்கண்ட விளக்கத்தை தரமுடியும்: :

எரேமியா 7:23  நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லா வழியிலும், நீங்கள்உங்களுக்கு நன்மை உண்டாகும்படிக்குநடவுங்கள்

நீங்கள் நடவுங்கள் என்று நமக்கு கட்டளையிடுவது பழைய ஏற்பாட்டு பிரமாணம்.

யோவான் 16:13 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார் 

உங்களை நடத்துவார்  என்று நமக்கு வாக்குகொடுப்பது புதியஏற்ப்பாடுபிரமாணம்  

எனவே நாம் இந்த புதியஏற்பாட்டு காலத்தில் முக்கியமாக அறிந்துகொள்ள வேண்டியது நம்முள் சத்திய ஆவியானவர் தங்கி இருக்கிறாரா? என்பதைத்தான். அதை எவ்வாறு அறிந்துகொள்வது? ஆதி அப்போஸ் த்தலர்களை வழி நடத்தியது போல் அனுதினம்  நமக்கு போதித்து/ கடிந்துகொண்டு/ தடுத்து/ ஆட்கொண்டு வழி நடத்துகிறாரா என்பதான் அடிப்படையிலேயே!

"அப்பாவின் வார்த்தைக்கும்" "அடுத்த வீட்டுகாரனின் வார்த்தைக்கும்" உள்ள வேறுபாடு எப்படி நமக்கு நன்றாக  தெரியுமோ, அதுபோல் ஆவியானவரின் குரலை அடிக்கடி  கேட்டு பழகபழக ஆண்டவரின் வார்த்தையை நாம்மால் சுலபமாக அறிய முடியும்.

இவ்வாறு நடத்தப்படும் நிலையில் நாம் தேவனின் எந்தவார்த்தையையும் கைக் கொண்டு நடக்க  தேவையில்லையா?  என்ற கேள்வி எழலாம். அதற்க்கு 'நாம் ஆவியானவரால் எவ்விதத்தில் நடத்தப்படுகிறோம்' என்பதன் அடிப்படையிலேயே பதில் தரமுடியும்.  அதைப்பற்றி வரும் பதிவுகளில் பார்க்கலாம்.  
-----------------------------------------
அடுத்த பதிவில்.....

*ஆவியில் நடத்தப்படுதலின் மூன்று நிலைகள்! *

5 வேதாகமத்தில் காணப்படும் முக்கிய உடன்படிக்கைகள்

🌹வேதாகமத்தில் காணப்படும் முக்கிய உடன்படிக்கைகள்🌹

💥கர்த்தர் தாவீதுடன் ஏற்படித்திய உடன்படிக்கை(2 Sam. 7:5–19)💥

1.      நான் உனக்குப்பின்பு உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன்.2.      அவன் என் நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.3.      நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனுஷருடைய மிலாற்றினாலும் மனுபுத்திரருடைய அடிகளினாலும் தண்டிப்பேன்.4.      உனக்கு முன்பாக நான் தள்ளிவிட்ட சவுலிடத்திலிருந்து என் கிருபையை விலக்கினதுபோல அவனைவிட்டு விலக்கமாட்டேன்.5.      உன் வீடும், உன் ராஜ்யமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும்; உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும்  என்று சொல்லச்சொன்னார்.

இந்த இராஜ்ஜியம் மட்டுமல்ல , எப்பொழுதும் உனது சிங்காசனத்தில் வீற்றிருக்கும் சந்த்தியை உனக்கு உண்டாக்குவேன். இது ஒரு நிபந்தனையற்ற உடன்படிக்கையாகும். தாவீதுடைய கீழ்ப்படிதலினாலோ அல்லது அவருடைய நீதியினாலோ ஏற்படுவதல்ல. இது ஆதாமுடன்செய்து கொண்ட உடன்இடிக்கையின் ஒரு பகுதியாகும்.அதாவது “ஸ்திரீயின் வித்து உன் தலையை நசுக்கும்” என்ற வாக்குறுதியின் பொருட்டு .மேசியா வெளிப்படுவதற்கான ஒரு வழியாகும்.கிறிஸ்து தாவீதின் வம்சத்தில் பிறந்தார்.( மத் 1: 1-16)

💥புதிய உடன்படிக்கை (எரே. 31:31–34; எபி. 8:7–12; லூக் 22:20)💥

இஸ்ரவேல் மக்களோடும், யூதா மக்களோடும் புதிய உடண்படிக்கையானது தெளிவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
(Jer 31:31 ) இது எதிர்காலத்திற்குரிய உடன்படிக்கையாகும். இது மோசே யுடன்  செய்த உடன்படிக்கையைப்போல நிபந்தனையுள்ள உடன்படிக்கையல்ல.

இங்கு நானே உங்களைச் சுத்தமாக்குவேன் என்றும் உங்கள் உள்ளத்தில் என் பரிசுத்த ஆவியை வைப்பேன் என்றும் என் கட்டளைகளில் உங்களை நடக்கப் பண்ணுவேன் என்றும் தெளிவாக்க் கூறுகி ன்றார். ( எசேக் 36:-25-27)

நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிரு ப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.( எரே. 31: 33)

நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.( எரே: 31: 34)

இது என்றென்றைக்கும் நீடத்திருக்கும்(எரே.31:35-37)

புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வார்கள்.

சபையானது புதிய ஏற்பாட்டின் உடன்படிக்கையுடன் தொடர்புபட்டது என்பதை கர்த்தருடைய இராப்போஜனத்தில் யேசு போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத் தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்.

இங்கு இந்தப் பாத்திரம் என்பது புதிய உடன்படிக்கை பிரதிபலிப்பதாகவும், அவருடைய இரத்தத்தினால் உறுதி செய்யப்படுவதாகவும் காணப்படுகிறது

💥சிந்தனைக்கு💥

எபிரெயர் 10
---------------------
26  சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல்,
27  நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.
28  மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டுமூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே
29  தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பானென்பதை யோசித்துப்பாருங்கள்.

*தொடர்ந்து வரும் பதிவுகளில்,...

💥பழைய உடன்படிக்கை  Vs புதிய உடன்படிக்கை 

மற்றும்....

💥புதிய உடன்படிக்கையின் மேன்மை

பற்றி விரிவாக பார்ப்போம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

செவ்வாய், 5 ஜனவரி, 2016

4 வேதாகமத்தில் காணப்படும் முக்கிய உடன்படிக்கைகள்

🌹வேதாகமத்தில் காணப்படும் முக்கிய உடன்படிக்கைகள்🌹

💥மோசேயுடன் செய்த உடன்படிக்கை. (Ex. 19:5; 20:1–31:18).

இந்த உடன்படிக்கை மிகவும் விசாலமானது. இதற்குள் 10 கற்பனைகளும் அடங்குகின்றன.கடவுளுக்குச் செய்யவேண்டிய கடமைகளும், அயலவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் விளக்கிக் கூறப்படுகின்றன. (Ex. 20:1–26); சமூகவாழ்க்கைக்கான அனேக சட்டதிட்டங்கள்கொடுக்கப்பட்டுள்ள்ன. (Ex. 21:1–24:11); சமயவாழ்விற்கான விபரமான சட்டங்கள் இதில் அடங்குகின்றன. (Ex. 24:12–31:18).இவைகள் அனைத்தும் இஸ்ரவேல் தேசத்தாருக்குக் கொடுக்கப்பட்டதேயன்றி புறஜாதிகளுக்குக் கொடுக்கப்படவில்லை. இது ஒரு நிபந் தனையுடனான உடன்படிக்கையாகும், மனிதர்களின் கீழ்படில் அவசியமானதாகும், அதனால் இது மாமிசத்தில் பலவீனமானது (றொ. 8: 3)புதிய ஏற்பாட்டில் ( ஓய்வுநாளைத்தவிர )ஒன்பது கட்டளைகளும் திருப்பிக்கூறப்பட்டுள்ளன.

💥கடவுளுக்குச் செய்யவேண்டிய கடமைகளும்அயலவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும்
1.“ என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். ” (Ex. 20:3). 6. “கொலை செய்யாதிருப்பாயாக. ” (Ex. 20:13).
2. “சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; ” (Ex. 20:4). 7. “You shall not commit adultery” (Ex. 20:14).விபசாரம் செய்யாதிருப்பாயாக.
3. “தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக;. ” (Ex. 20:7). 8. “You shall not steal” (Ex. 20:15). களவு செய்யாதிருப்பாயாக.
4 “ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;” (Ex. 20:8). 9. “You shall not bear false witness against your neighbor” (Ex. 20:16).பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக
5“உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன்தகப்பனையும் உன் தாயையும்கனம்பண்ணுவாயாக.” . (Ex. 20:12). 10.“பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக”; (Ex. 20:17).

                                      
💥பாலஸ்தின உடன்படிக்கை .(Deut. 30:1–9)

இஸ்ரவேலர்கள் கர்த்தரை மறந்து அந்நியதெய்வங்களை நமஸ்கரித்து வந்தபடியால் அவர்கள்மீது தேவகோபம் ஏற்பட்டது. அதன்காரணமாக வேறுதேசங்களுக்குள் சிதறடித்தார்.

அப்பொழுது, அவர்கள் தங்கள் இருதயத்திலே சிந்தனைசெய்து, தங்கள்  தேவனாகிய கர்த்தரிடத்துக்கே திரும்பி, முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும்  கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுத்தால் உன் தேவனும் கர்த்தருமாகிய நான் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன்னைச் சிதற அடித்த எல்லா ஜனங்களிடத்திலும் இருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்ளுவேன்  உங்கள்  இருதயத்தையும் உங்கள் சந்ததியாரின் இருதயத்தையும் விருத்தசேதனம்பண்ணுங்கள்.அப்பொழுது உங்களுக்கு நன்மை உண்டாகும்படி உங்கள்  தேவனாகிய கர்த்தர்கிய நான் உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும், உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவனின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரணமுண்டாகச் செய்வேன்

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...