ஞாயிறு, 29 மே, 2016

பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா


பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா
நானிலத்தில் நீ என்றும் ராஜா
உம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லை
உம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை

அல்லேலூயா

உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையா
உம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா

நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயா
எனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோ
புழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரே
ராஜாக்களோடு அமர்த்தினீரே

உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்
உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன்

ஊழிய எல்லைகள் பெரிதாக்கினீர்
அதில் இராஜாக்கள் உதிக்கவும் உதவிசெய்தீர்
அறியாத ஜாதியை வரவழைத்தீர்
நீர் தந்த வாக்கினை நிறைவேற்றினீர்

வருத்தங்கள் பசிதலம் ஏற்ப்பட்டாலும்
எங்கள் விசுவாச கேடகம் வீழ்ந்திடாதே
நம்பினோர் நட்டாத்தில் கைவிட்டாலும்
என்னை காப்பற்ற நீர் உண்டு பயமில்லையே

வெள்ளி, 27 மே, 2016

இந்த பூமியில் நீ வாழும் வாழ்க்க

Lyrics

Indha Boomyil Nee Vaazhum Vaazhkka
Romba Seekiram Viraindhodum Vaazhkka
Indha Boomyil Nee Vaazhum Vaazhkka
Romba Seekiram Viraindhodum Vaazhkka
Paralogaththil Nee Vaazhum Vaazhkka
Adhu Eppodhum Azhiyadha Vaazhkka
Paralogaththil Nee Vaazhum Vaazhkka
Adhu Eppodhum Azhiyadha Vaazhkka

Endrum Sandhosum

Mudivilla Sandhosam
Endrum Sandhosum
Alavilla Sandhosam
Adhu En Yesu
Vaazhgindra Desam
Angu Sandhosam
Kaatraga Veesum
Adhu En Yesu
Vaazhgindra Desam
Angu Sandhosam
Kaatraga Veesum

Indha Boomyil Nee Vaazhum Vaazhkka

Romba Seekiram Viraindhodum Vaazhkka
Indha Boomyil Nee Vaazhum Vaazhkka
Romba Seekiram Viraindhodum Vaazhkka

Ingae Nee Kaangindra Edhuvumae

Nirandharam Illa
Peridhai Engindra Un Uyirum
Unakku Sondhamilla
Ingae Nee Kaangindra Edhuvumae
Nirandharam Illa
Peridhai Engindra Un Uyirum
Unakku Sondhamilla

Enakku Verodrum Vendam

Panam Irundha Podhum
Endru Nee Ennugiraai
Enakku Verodrum Venaam
Soththu Sogam Podhu
Endru nee Vaazhugiraai
Ulagam Muzhudhum Nee
Aadhayam Seidhu Kondaalum
Un Aathma Azhinju pona
Unakkenna Laabam undaagum
Neeyo Needhiyin Paadhayil
Nadandhupona
Unakku Niththiya Jeevan
Endrum Undu
Neeyo Needhiyin Paadhayil
Nadandhupona
Unakku Niththiya Jeevan
Endrum Undu

Indha Boomyil Nee Vaazhum Vaazhkka

Romba Seekiram Viraindhodum Vaazhkka

Ulagam Pugalum Uchiyila

Nee irundhalum
Sagalam Vanangum
Rajanaga Nee Thigalndhalum
Ada Uyirendra unaivittu pona
Mannodu Mannaguvaai
Ada Uyirendra unaivittu pona
Mannodu Mannaguvaai
Ulagam Maayai Inga
Edhuvumae Unmai Aagadhu
Ulagam Maayai Inga
Edhuvumae Unmai Aagadhu
Neeyo Yesu Krishtuvai
Yetrukkonda
Unakko Niththiya Jeevan
Endrum Undu
Neeyo Yesu Krishtuvai
Yetrukkonda
Unakko Niththiya Jeevan
Endrum Undu

Na na naa na naa

na na naa na na naa....

பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே பின்மாரி ஆவியை ஊற்றுமே

🍃🍃🍃🍃🙏🏻🍃🍃🍃🍃

பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே
பின்மாரி ஆவியை ஊற்றுமே

மேலான வல்லமை
மேலான தரிசனம்
மேலான வரங்களைத் தாருமே

என்னை நிரப்புமே -2 நிரப்பியே அனுப்புமே
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உம் ஆவியை ஊற்றுமே

அனலான ஊழியம் தாருமே
அக்கினி ஜீவாலையாய் மாற்றுமே

நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிட
அற்புதத்தின் அபிஷேகம் தாருமே

அக்கினி நாவுகள் தாருமே எனக்கு
அதிகார நாவுகள் தாருமே

Penthacosthae anubavam thaarumae
Pinmaari aaviyai ootrumae

Melaana vallamai
Melaana tharisanam
Melaana varangalai thaarumae

Yennai nirappumae -2 Nirappiyae anuppumae
Yen paathiram nirambi valinthida
Um aaviyai ootrumae

Analaana ooliyam thaarumae
Akkini juvaalaiyaai maatrumae

Nilalpattu marithorkal yelumbida
Arputhathin abishekam thaarumae

Akkini naavugal thaarumae yenakku
Athigara naavugal thaarumae

🍃🍃🍃🍃💐🍃🍃🍃🍃

*பழங்காலத்து திரிகைக் கல்*

*பழங்காலத்து திரிகைக் கல்*

மக்கள் மாவு அரைக்கும் கற்களை பயன்படுத்தி தானியங்களை அரைத்தார்கள். அரைக்கப்பட்ட மாவிலிருந்து ரொட்டிகளை செய்தார்கள். மாவு அரைப்பது, பெண்களின் அல்லது வேலைக்காரர்களின் தினசரி வேலையாக இருந்தது. பழங்காலத்தில் மாவு அரைக்கும் சத்தம் அன்றாடம் கேட்கும் சத்தமாக இருந்தது. (யாத்திராகமம் 11:5; எரேமியா 25:10).

மாவு எப்படி அரைக்கப்பட்டது என்பதை பூர்வ எகிப்திலிருந்து எடுக்கப்பட்ட வரைபடங்களும், சிலைகளும் காட்டுகின்றன. சற்றே குழியான அடிக்கல்லின் மேல் அரைக்கப்பட வேண்டிய தானியத்தை வைப்பார்கள். மாவு அரைப்பவர், இந்த அடிக்கல்லின் முன் மண்டியிட்டு, மேல் கல்லை இரண்டு கைகளிலும் பிடித்து முன்னும் பின்னுமாக அரைப்பார். பொதுவாக, மேல் கல் இரண்டு அல்லது நான்கு கிலோ எடை (4-9 பவுண்டு) இருக்கும் என்று ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. இதை ஆயுதமாக பயன்படுத்தினால் அது உயிரையே பறித்துவிடலாம். (நியாயாதிபதிகள் 9:50-54).

உணவுக்காகத் தானியங்களை அரைப்பது, அன்று வாழ்ந்த மக்களுக்கு அத்தியாவசியமாக இருந்தது. அதனால்தான், மாவு அரைப்பதற்காக உபயோகிக்கிற கல்லை அடகாக வாங்கக் கூடாது என்று பைபிளில் ஒரு சட்டம் இருந்தது. “திரிகையின் அடிக்கல்லையாவது அதின் மேற்கல்லையாவது ஒருவரும் அடகாக வாங்கக்கூடாது; அது ஜீவனை அடகு வாங்குவதுபோலாகும்” என்று உபாகமம் 24:6 சொல்கிறது

போனில் Screen Lock செய்து வைத்து இருப்பவர்களுக்கு ஓர் தகவல்:

போனில் Screen Lock செய்து வைத்து இருப்பவர்களுக்கு ஓர் தகவல்:

📱நாம் விபத்தில் சிக்கி இருந்தாலோ அல்லது விபத்தில் சிக்கிய மற்றவரின் பெற்றோர் உறவினர் அல்லது நண்பர்களுக்கு அதே போனில் இருந்தே தகவல் அளிக்கலாம்.

📱அதற்கு உங்கள் போனில் செய்ய வேண்டியது இதுதான் போனில் உள்ள Contact- ல் Group என்ற Option இருக்கும்.

📱அதை open செய்து அதில் ICE Emergency Contact ல் உங்கள் பெற்றோர் சகோதரர் உறவினர்கள் உள்ளிட்ட நெருக்கமானவர்கள் எண்களை Save செய்து வைத்து கொள்ளுங்கள்.

📱உங்கள் போன் Lock ல் இருக்கும் போது Lock ன் கீழே Emergency Calls ஐ Click செய்தால் நீங்கள் Save செய்து வைத்து இருக்கும் எண்கள் வரும்.

📱அந்த எண்ணிற்கு அந்த போனில் இருந்தே Call செய்ய முடியும்.

📱இதை தெரிந்து வைப்பதோடு இதை உங்கள் போனில் செய்து கொள்ளுங்கள்.

📱அவசர காலங்களில் பேருதவியாக இருக்கும்.

📱இது முற்றிலும் உண்மையான பதிவு.

📱உங்களுக்கு பயன்படவில்லை என்றாலும் எவருக்கேனும் பயன்படும்.

📱📱அதிகமாக பகிரவும்📱📱

ரகசிய வருகை - பகீரங்க வருகை விளக்கம்

ரகசிய வருகை என்று  வேதத்தில் இல்லாவிடினும்

★திருடனைப்போல வருகிற
    வசனங்கள் மற்றும்

★மறுபடியும் வருகிறேன் 

★கடைசி நாளில் அவனை
    எழுப்புவேன்

★கர்த்தருக்கு   
   எதிர்கொண்டுபோக

★அவரிடத்தில்
    சேர்க்கப்படுவோம் 

★இமைப்பொழுதிலே,
    நாமெல்லாரும்
   மறுரூபமாக்கப்படுவோம் 

★அவர் வெளிப்படும்போது

★மகிமையின் பிரசன்னமாகுதல்

★ஒருவன் ஏற்றுக்
    கொள்ளப்படுவான்,
     மற்றவன்
     கைவிடப்படுவான்

★ விழித்து
     எழுந்திருப்பார்கள்.

இப்படி இவை எல்லாம்
இயேசு கிறிஸ்துவின்
ரகசிய வருகையே குறிக்கிறது. ரகசிய வருகையில் நாம் அவரை காண முடியாது.

அதேபோல "இயேசு கிறிஸ்து  பூமியின் மேல் நிற்பார்" என்பதும் ரகசிய வருகையே.

யோபு 19:25 
என் மீட்பர் உயிரோடிருக்கிறார்
என்றும், அவர்
கடைசிநாளில்
"பூமியின்மேல் நிற்பார்' என்றும் நான் அறிந்திருக்கிறேன்.

பகீரங்க வருகையில் வருவதை - வருகிறதை காண்பீர்கள் - வருகிறார்  என்றே உள்ளது.  வந்துக்கொண்டேதான் இருப்பார். நிற்க மாட்டார்.
ஆகையால் நிற்பார் என்பது ரகசிய வருகை. (இதில் சிலர் கருத்து மாறுபடலாம்.)

★பகீரங்க வருகை :

★மத்தேயு 19:28; 23:39 ;
    24:3—25:46 ; 
★மாற்கு 13:24-37;  17:22-37 ;
   18:8 ; 21:25-28 ;
★அப்போஸ்தலர்  1:10-11;
    15:16-18 ;
★ ரோமர் 11:25-27; 
★1 கொரி 11:26; 
★2 தெச1:7-10; 2:8 ; 
★2 பேதுரு 3:3-4; 
★யூதா 1:14-15; 
★வெ. வி 1:7-8; 2:25-28 ; 16:15.   19:11-21 ; 22:20 ).

பகீரங்க வருகையின் முக்கிய வசனங்கள் :

மாற்கு 13
26  அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.

மத்தேயு 24
30  அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.

லூக்கா 21
27  அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.

வெளி. விசேஷம் 1: 7
இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும் ஆமென
யூதா 1: 15

தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.

★ரகசிய வருகையின் வசனங்கள் :

யோவான் 14: 3
நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன்.
★ஸ்தலம் என்ற வார்த்தை எபிரேய மொழியில் அதன் அளவுகளையும் சொல்லுகிறது.

யோவான் 6:44
என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.

1 தெசலோனிக்கேயர் 4: 17
பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.

2 தெசலோனிக்கேயர் 2: 1
அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால்,

1 கொரிந்தியர் 15: 51
இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.

1 யோவான் 2: 28
இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படி அவரில் நிலைத்திருங்கள்.

1 யோவான் 3: 2
பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாய் இருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.

தீத்து 2: 13
நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.

ரோமர் 8: 18-19
ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.

மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது.

பிலிப்பியர் 3: 20- 21
நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.

லூக்கா 17
34  அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்.

35  திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள்.

36  வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

தானியேல் 12
1  உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான். யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்.
2  பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.

லூக்கா 12
39  திருடன் இன்ன நேரத்தில் வருவானென்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள்.
40  அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார்.

இயேசு கிறிஸ்துவின் ரகசிய வருகையை யாரும் தெரிந்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் அவர் யாரும் அறியாத நிமிடத்திலே வரப்போகிறார். அதேபோல் ரகசிய வருகை எப்போது?  உபத்திரவ காலத்திற்க்கு முன்பா இல்லை பின்பா இல்லை மத்தியிலியா என்ற கருத்துகள் நிலவி வருகிறது. அது வேதத்தில் சொல்லப்படவில்லை.
ஆகவே எதற்க்கும் ஆயத்தம் முக்கியம். ஆயத்தமாய் இருப்போம்.

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...