வெள்ளி, 27 மே, 2016

*பழங்காலத்து திரிகைக் கல்*

*பழங்காலத்து திரிகைக் கல்*

மக்கள் மாவு அரைக்கும் கற்களை பயன்படுத்தி தானியங்களை அரைத்தார்கள். அரைக்கப்பட்ட மாவிலிருந்து ரொட்டிகளை செய்தார்கள். மாவு அரைப்பது, பெண்களின் அல்லது வேலைக்காரர்களின் தினசரி வேலையாக இருந்தது. பழங்காலத்தில் மாவு அரைக்கும் சத்தம் அன்றாடம் கேட்கும் சத்தமாக இருந்தது. (யாத்திராகமம் 11:5; எரேமியா 25:10).

மாவு எப்படி அரைக்கப்பட்டது என்பதை பூர்வ எகிப்திலிருந்து எடுக்கப்பட்ட வரைபடங்களும், சிலைகளும் காட்டுகின்றன. சற்றே குழியான அடிக்கல்லின் மேல் அரைக்கப்பட வேண்டிய தானியத்தை வைப்பார்கள். மாவு அரைப்பவர், இந்த அடிக்கல்லின் முன் மண்டியிட்டு, மேல் கல்லை இரண்டு கைகளிலும் பிடித்து முன்னும் பின்னுமாக அரைப்பார். பொதுவாக, மேல் கல் இரண்டு அல்லது நான்கு கிலோ எடை (4-9 பவுண்டு) இருக்கும் என்று ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. இதை ஆயுதமாக பயன்படுத்தினால் அது உயிரையே பறித்துவிடலாம். (நியாயாதிபதிகள் 9:50-54).

உணவுக்காகத் தானியங்களை அரைப்பது, அன்று வாழ்ந்த மக்களுக்கு அத்தியாவசியமாக இருந்தது. அதனால்தான், மாவு அரைப்பதற்காக உபயோகிக்கிற கல்லை அடகாக வாங்கக் கூடாது என்று பைபிளில் ஒரு சட்டம் இருந்தது. “திரிகையின் அடிக்கல்லையாவது அதின் மேற்கல்லையாவது ஒருவரும் அடகாக வாங்கக்கூடாது; அது ஜீவனை அடகு வாங்குவதுபோலாகும்” என்று உபாகமம் 24:6 சொல்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...