வெள்ளி, 6 டிசம்பர், 2019

நற்கிரியை என்னில் துவங்கியவர்முடிவு பரியந்தம் நடத்திடுவார்-2


நற்கிரியை என்னில் துவங்கியவர்
முடிவு பரியந்தம் நடத்திடுவார்-2
அழைத்த நாள் முதல் இன்று வரை
உம் வாக்கில் ஒன்றும் தவறவில்லை
உடைக்கப்பட்ட நேரத்திலும்
உம் கைப்பிடி இறுக்கம் குறையவில்லை

அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழிய அடித்தளமே-2
என் வெகுமதி நீர்தானே-2

1.உடன் இருந்தோர் பிரிந்து சென்றும்
நீங்க என்னை விலகவில்லை
உடன் இருந்தோர் உடைந்து சென்றும்
நீங்க என்னை விலகவில்லை
முடிந்ததென்று நினைத்தவர் முன்
தளிர்த்த கோலாய் நிறுத்தினீரே
உலர்ந்ததென்று நகைத்தவர் முன்
தளிர்த்த கோலாய் நிறுத்தினீரே

அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழிய அடித்தளமே-2
என் வெகுமதி நீர்தானே-2

2.ஆயிரங்கள் பிரிந்து சென்றும்
நீர் என் சபையை மறக்கவில்லை-2
உடைந்து போன மந்தையிலும்
பெரிதான மந்தையை தந்தவரே-2

அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழிய அடித்தளமே-2
என் வெகுமதி நீர்தானே-4

ஆராரோ ஆராரோ கண்மணியே ஆராரோ Christmas song

ஆராரோ ஆராரோ கண்மணியே ஆராரோ
காக்க வந்த லீலி மலரே மலரே மலரே
ஆராரோ ஆராரோ பூமணியே ஆராரோ
பூமியை மீட்க வந்தாரே

பிறந்தார் இயேசு பிறந்தார்
பாலகனாய் இயேசு பிறந்தார்
Christmas Happy Christmas
New year Happy New year

1.இம்மனுவேலர் இறுதி வரை
நம்மோடிருப்பார்
இன்னல்கள் யாவையும் நீக்கி
நம்மை ஆசீர்வதிப்பார்-2-ஆராரோ

2.நமக்கொரு பாலகன் பாரினிலே
பாசமுடன் வந்தார்
அதிசயமானவர் வல்லமையின் தேவன்
நித்தியபிதா அவரே-2-ஆராரோ

புதன், 4 டிசம்பர், 2019

என் இயேசு பாலன் பிறந்தாரே

என் இயேசு பாலன் பிறந்தாரே 
எழிலோடு கண்கள் திறந்தாரே
பனி தூவும் நள்ளிரவுக் குளிரில் 
மனு தேவன் மண்ணில் மலர்ந்தாரே - 2

இருள் தின்ற இரவில் ஓர் ஒளிமின்னல் 
அருள் சிந்தும் கண்கள் இரு விண் மீன்கள் - 2
உற்றாரும் உறவொன்றும் இல்லாத பெத்தலையில் 
உன்னதரும் துள்ளி அசைந்தாரே - 2

முன்னணையில் வைகோலே பஞ்சனையோ !
குளிர்வாடை பாடியது தாலேலோ ! - 2
மாடடையும் தொழுவத்தில் மண்ணுலகின் மன்னவரே 
சிசுவாக மேய்ப்பன் வந்தாரே - 2

கண் மின்னி பொன் வெள்ளி திசை காட்ட 
மூவரசர் தேடிவந்து பதம் நாட - 2
ஆட்டிடையர் சிறுகூட்டம் ஆவலுடன் துதிபாட 
ஆனந்த அற்புதர் வந்தாரே  - 2

குளிரிரவு காத்திருக்க கிழக்கினிலே நட்சத்திரம்


குளிரிரவு காத்திருக்க கிழக்கினிலே நட்சத்திரம்
மேய்ப்பர்கள் வந்தனரே தூதர்கள் பாடினாரே
பிறந்தாரு பிறந்தாரைய்யா இராஜாதி இராஜன்
மேசியா பிறந்தாரைய்யா நமக்காக-2

1.மாட்டுத்தொழுவத்தில் பரம பிதா
நல்லவர் பூரண அழகுள்ளவர்
விரிந்த வானம் போல் மனமுள்ளவர்
யாராயிருந்தாலும் கைவிடாதாவர்-2

கொண்டாட்டம் கொண்டாட்டமே
நம் வாழ்வினிலே கொண்டாட்டமே-2-குளிரிரவு

2.கவலை நேரத்தில் அருகில் வந்து
தேற்றிய மெய் அன்பின் தேவன்
யார் மறந்தாலும் உன்னை மறப்பதில்லை
என்று சொன்ன உன்னத தேவன்-2

கொண்டாட்டம் கொண்டாட்டமே
நம் வாழ்வினிலே கொண்டாட்டமே-2-குளிரிரவு

குதூகலம் சந்தோஷமேஇயேசு பிறந்தார் கொண்டாட்டமே-2


குதூகலம் சந்தோஷமே
இயேசு பிறந்தார் கொண்டாட்டமே-2

வானம் எனும் வீதியிலே
விண்மீன்கள் பந்தலிட்டு
நள்ளிரவில் வந்துதித்த ஒளியே-2
கிழக்கு திசையினிலே
குரல் எழுப்பி அறிவித்தது
என் இயேசு இரட்சகரின் பிறப்பை-2-(2)

குதூகலம் சந்தோஷமே
இயேசு பிறந்தார் கொண்டாட்டமே-2
-வானம் எனும்

இயேசு இரட்சகர் அவரே விடுக்கிறவர்-2

1.மேய்ப்பர் யாவரும் தொழ வந்தனரே
நல்ல மேய்ப்பரை....
தூதர் யாவரும் துதிக்க வந்தனர்
உன்னத தேவனை....-2
உனக்கும் எனக்கும் நிம்மதி தரும் 
நம்பிக்கையின் தேவன்
குறைகள் இல்லாமல்
அன்பு செலுத்தும் நாதன்-2

குதூகலம் சந்தோஷமே
இயேசு பிறந்தார் கொண்டாட்டமே-2
-வானம் எனும்

Happy Christmas Merry Christmas-4

2.மண்ணான உனக்கு தம் சாயலை தந்து
ஜீவன் தந்தவரு....
ஜீவன் தர உனக்காய் மண்ணுலகம் வந்த
நல்ல நல்ல தேவன்....-2
உன்னை மேன்மேலாய்
உயர்த்திய தேவன்
வானத்தின் பலகனியை
உனக்காய் திறந்தவரு-2

குதூகலம் சந்தோஷமே
இயேசு பிறந்தார் கொண்டாட்டமே-2
-வானம் எனும்

இயேசு இரட்சகர் அவரே விடுக்கிறவர்-2

3.மரியின் மைந்தன் பிதா அன்பு குமாரன்
நம் இயேசு தேவன்.....
ஏழை கோலமாய் மாட்டுத்தொழுவத்தில்
நமக்காய் பிறந்தாரு....-2
நானே வழியும் சத்தியம்
ஜீவன் என்றாரே
அப்பாவை நமக்கு
நித்திய ஜீவன் என்றாரே-2

குதூகலம் சந்தோஷமே
இயேசு பிறந்தார் கொண்டாட்டமே-2
-வானம் எனும்

Christmas song 2022. கிறிஸ்மஸ் பாடல் வரிகள்

மரியின் மைந்தனாய் மன்னிலே தோன்றினார் 
மலர்கள் சிரிக்க மனங்கள் களிக்க

பண்பாடும் உள்ளங்களே 
தேவ பாலனை பாடுங்களே பாவங்கள் நீங்கவே

தென்றல் காற்று தாலாட்ட
தேடும் அன்பு சீராட்ட
வானத்தின் தலைவன் வையகம் வந்தார்
காரிருள் நீக்கும் பேரொளியாக உலகினில் வந்த ஒளிசுடரே

பாலன் வாழ்வு நமக்காக 
பாடும் உள்ளம்உமக்காக
சேவையின் வடிவாய் சிலுவையைத் தாங்கி 
நேர்மையைக் காட்டும் நேர் வழியாக
நெஞ்சினில் வாழும் நாயகணே

துதித்து துதித்து பாடுங்கள்
தேவ பாலனை போற்றுங்கள்
துதி முழக்கம் செய்திடுங்கள்
தூய பாலனை வாழ்த்திடுங்கள்
அல்லேலூயா இறைவன் மனிதனானார்
அல்லேலூயா இயேசு பாலன் பிறந்தார்
ல ல ல ல ல லா. .... ஒ ஒ ஒகோ

1.வானம் பூமி படைத்தவரே
மேன்மை துறந்து பாரில் வந்தார்
ஏழைக்கோலமாய் மாட்டுத் தொழுவினில்
தாழ்மை ரூபமானார்
கன்னிமைந்தனாய் கருணை தேவனாய்
கர்த்தர் இயேசு பிறந்தார்

2.பாவம் சாபம் நீக்கிடவே
பாரில் அன்பு நிலைத்திடவே
குருடர் பார்த்திட, ஊமை பேசிட
முடவர் ஓடியாட
இருளில் வாழ்பவர் ஒளியைக் காணவே
இயேசு பாரில் பிறந்தார்


தேவ புத்திரன் வந்தார் பூலோகத்தில்
ராஜ ராஜன் பாலகனாய் -2
ஆடுவோம் பாடுவோம்
பாட்டுக்கள் நாம் பாடுவோம்
தேவராஜன் …
இந்த பூவில்…
கன்னிமாதாவின் கோமகனாய் -2

1.காத்திருந்த அந்த ஜெனம்
கண்டது ஆச்சர்ரிய விந்தை -2
அன்பு கோண்டவராம் என்
இயேசு ராஜன்
பூலோகம் ரட்சிக்க வந்தார் – 2

2. என்னை தேடி என் தெய்வம்
என்னினில்லானந்தம் தந்து -2
தேவாதி தேவன் என்
இயேசு ராஜன்
இருளில் பேரொளியாய் -2


அன்பே மனித உருவமாய்
அவதரித்தார், நம்மில் பிறந்தார்
என்றும் இம்மானுவேலராய்
தோன்றினார், நம்மில் வாழ்கின்றார்

அவர் நாமம் உயர்த்தி பாடிடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா (2)
அவர் மகிமையை எங்கும் பறைசாற்றுவோம்
அல்லேலூயா அல்லேலூயா (2)

Verse 1:
வானத்தில் வெளிச்சம் தோன்றியதும்
அந்த மகிமை இருளை நீக்கியது
நம் வாழ்க்கையின் இருளை நீக்கிடவே
அந்த ஒளியை நமக்காய் தந்தாரே
அவர் அன்பை ருசித்த நாமும்
அந்த ஒளியில் தினமும் வாழ்ந்திடுவோம்

Verse 2
நம்மை ஐஸ்வரியனாய் மாற்றிடவே
அவர் ஏழையின் கோலமாய் பிறந்தாரே
மண்ணில் குப்பையாய் இருந்த மானிடரை அவர்
மனிதனாய் நிற்க செய்தாரே
அவர் கிருபை பெற்ற நாமும்
அவர் ராஜ்யத்தை கட்டிட உதவி செய்வோம்



இனிமை நிறைந்த இரவு 
இருளும் குளிரும் உறவு
இறைவன் இயேசு வரவு
இகத்தில் கொண்ட பரிவு 

ஹாப்பி ஹாப்பி கிறிஸ்மஸ் ஹாப்பி ஹாப்பி -4

1.மன்னவன் விண்ணகம் துரந்தவராய்
இந்த மண்ணில் உதித்தார் பாலகனாய் 2
ஏசாயா வாக்கு நிறைவேறும் இன்று
ஈசாயின் அடி மரம் துளிர்த்ததுவே 2

விண்ணில் தூதர்கள் கானம் பாடிட
மண்ணில் மானிடர் அன்புகொண்டிட
தேவன் வானிலே மகிமையாகிட 
பாலன் பிறந்தார்

3.காவினில் பிறந்த பாவமதை
தன் சாவினில் அறுத்து வாழ்வு தர
மெய்பரும்  ஆனார் ஆயரும் காண
மாவேந்தர் இயேசு பிறந்தாரே


ராஜாதி ராஜன் இவர்தான்
புவி வந்தாலும் மன்னன் இவர்தான் 2
மண்மீது சாபத்தை தீர்த்திடவே
மாசற்ற ஜோதியாய் வந்துதித்த
மன்னாதி மன்னவனை வணங்கிடுவோம்

1.கர்த்தாதி கர்த்தனே இளந்தளீரே 
வந்தனம் வந்தனமே
சர்வேச நாதனே சர்குனனே
சுந்தர நாயகனே
உள்ளம் தேற்றிடும் உண்மை நேசனே
இறைமகன் இயேசுவே
மனுகுலம் போற்றும் மகிமையின் நாதன் 
உம்பாதம் பணிந்திடுவோம்

2.அருள் நேசர் வரவால் அகமகிழ்வோம்
அன்புடன் உள்ளத்திலே
அதிகாலை பொழுதில் தொழுதிடவே ஆலயம் சென்றிடுவோம்
வானில் பறவைகள் காணம் பாடிட வினையின் ராகமே
பனித்துளி மின்னும் மலர்களின் வாசம்
இல்லத்தில் புது மனமே

சின்னஞ்சிறு மலரே சித்திரை பூந்தளிரே 
உன்னை அள்ளி அணைப்பேன் 
எந்தன் நெஞ்சுக்குள் வாராயோ 2

1.வானத்தின் மேகமாய் வறட்சியைப் போக்கி ட
மழையென வாராயோ
பாரினை தாங்கிட தீமைகள் போக்கிட அன்பினை தாராயோ 2
தேவனும் நீயன்றோ  எங்கள் தேவனும் நீயன்றோ
தேசங்கள் மீட்டிட பாலனாய் பிறந்த தேவனும் நீயன்றோ

2.விண்ணுக்கு மைந்தனாய் மண்ணுக்கு வேந்தனாய் வந்தவர் நீயன்றோ
கண்ணுக்கு காவியம் விண்ணுக்கு ஓவியம் என்பவதானன்றோ
பாலகன் நீயன்றோ இயேசு பாலன் நீயன்றோ
பாரினில் வாழ்ந்திடும் பாலகர் வாருங்கள் என்றவர் நீரன்றோ


பெத்தலையிலே சத்திரத்திலே
மன்னன் இயேசு பிறந்தார்2
அல்லேலூயா அல்லேலூயா 2
அல்லேலூயா 3ஆமென்

1.வானாதி வானங்களே போற்றிப்பாடுங்கள்
தூதர் சேனைகளே துதித்து பாடுங்கள் 2
துக்கம் இல்லை இனி துயரம் இல்லை
என்றென்றும் ஆனந்தமே 2

2.வானத்திலே நட்சத்திரம் வழி காட்டுதே
ஞானி மூவர் தேடி வந்து வனங்கினரே 2
வெள்ளைப்போலம் தூபவர்கம் பொன்னைக் கொடுத்தார்களே

3. தூதர்கள் சேனையெல்லாம் துதி பாடுதே
மேய்பர்கள் செய்தி கேட்டு தேடினரே 2
இயேசுவைக் கண்டு தொழுகின்றாரே
ஆனந்த சந்தோஷமே 2

கர்த்தர் பிறந்தார் பாடுங்கள்
கதிரவன் உதித்தார் போற்றுங்கள் 
அல்லேலுயா ஆர்ப்பரிப்போம் 
ஆனந்த நாளை கொண்டாடுவோம் 
பாவவினை உலகினில் நீங்கிடவே 
அதிசய பாலன் இயேசு பிறந்தாரே

1.ஆதாம் ஏவாள் செய்த பாவம் 
அதனாலே வந்த சாபம்
யாவும் நீக்கி வந்ததாலே
யாக்கோபின் ஓர் வெள்ளி உதித்தது வே

2.தீர்க்கன் சொன்ன வார்த்தை எல்லாம் 
இவ்வளவாய் நிறைவேற 
தேவமைந்தன் இயேசு ராஜன் 
தாழ்மையாய்  உலகில் பிறந்தாரே

சின்ன ஊர்தான் அது பெத்தலகேமில் தான் 
மன்னன் இயேசு பாலனாக பிறந்துவிட்டாரு 

1.மாடி இல்ல மெத்தை இல்ல புல்லணை இல்ல 
மன்னன் இயேசு பிறந்துவிட்டார் மாட்டுத்தொழுவில
சொந்தம் என்று சொல்லிக்கொள்ள ஆட்களும் இல்லை 
சொந்தத்தில் வந்துவிட்டார் கவலையே இல்லை

2.சேதி சொல்ல யாரும் இல்ல தேவதூதர் தான் 
வழிகாட்ட யாரும் இல்ல நட்சத்திரம்தான் 
துதிபாடி தூதர் கூட்டம் சூழ்ந்து நிற்கையில
மன்னன் இயேசு பிறந்துவிட்டார் மனு உருவினிலே


கிறிஸ்மஸ் பிறந்ததே 
உள்ளம் மகிழுதே ஆடுவோம் நாங்கள் பாடுவோம் 
இறைமகன் இயேசு இன்று பிறந்தார்

1.இருளில் வாழும் மாந்தர் 
பாவம் போக்கிட ஒளியாய் வந்தார் 
அளவில்லாத மீட்பை நமக்கு அளித்திட தானே பிறந்தார் 
ஆவின் குடியில் மாட்டுத்தொழுவில் 
ஏழை கோலமாய் அவர் வந்தார் 
கந்தைத் துணியில் முன்னணியில் 
கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார்
ஹேப்பி  கிறிஸ்மஸ் மேரி கிறிஸ்மஸ்

குளிர் வாடை வீசும் நேரம் 
நடுவானில் தூதர் கூட்டம் 
மண்ணிலே மேசியா 
பிறந்த செய்தி கூறினார் 

விண்ணில் மகிமை 
மண்ணில் சமாதானம் 
மானுடர் மேல் பிரியமே 

1.மந்தை மேய்ப்பரே புது காணம் பாடுங்கள் 
விந்தை காணவே விரைந்தேகி செல்லுங்கள் 
மேசியா இயேசு பிறந்தார் 
மேன்மைகள் யாவும் துறந்தார் 
மாட்டுத்தொழுவில் தவழ்கிறார்
_--------------------
பணிவிழும் இரவினில் இயேசு  
மண்ணில் மனிதனாய் இறைமகன் இயேசு 
வானத்தில் விண் தூதர் பாட 
அந்த காணத்தில் விண்மீன்கள் ஆட 

1.கனிவாக மண்ணோடு பாட 
எங்கும் குளிர் வாடை இதமாக வீச
சுகமாக ராகங்கள் சேர 
ஓடி வா தென்றலே 
மலரே மலரே மலர்ந்திடு 
மகிழும் மனமே தந்திடு

2.ஒளி வீசும் அழகான தோற்றம் 
அவர் கேட்கின்றார் உந்தன் மனமாற்றம் 
எண்ணத்தில் வேண்டாம் தடுமாற்றம் 
ஓடி வா நெஞ்சமே 
பரிசுத்தர் பாதத்தில் வந்திடு 
பணிவுடன் உள்ளத்தை தந்திடு

---------------
இசை மழையில் தேன்கவி பொழிந்தே
கர்த்தர் ஜெனித்தார் அன்பாய் பாடுங்கள்
 
1.வான்மலர்தான் இப்புவியிலே 
மலர்ந்திடதே நம் வாழ்வில் இன்று 
நமக்காய் பிறந்தார் பாசம் கொண்டு 
வாழ்வின் மீட்பின் பாதையிலே

2.மாசற்றவர் நம் வாழ்வினிலே
மகிமை என்றே கண்டோமே இன்று 
விடிவெள்ளியாகவே தேவபாலன் 
தாழ்மை தாங்கி அவதரித்தார்

----------+++++
சத்திரத்தை தேடி வாருங்க 
சந்தோஷமாய் ஆர்ப்பரித்து ஒன்று கூடுங்க 
சாலேமின் ராஜனையே பார்க்க வாருங்கள
மேலாக ராஜன் இவர் மேன்மை விட்டு வந்தாரே 
பூலோக மாந்தரின் பாவம் நீக்க வந்தாரே 
மகிமையின் ராஜனிவர் மகத்துவ தேவனிவர் 
மண்ணின் மீட்பரிவர் மனுவுருவானார்

1. காட்டுக்குள்ளே பாட்டு கேக்குது 
கேட்டு கேட்டு ஆயர் கூட்டம் பாட்டு பாடுது 
ஆடுகளும் துள்ளி துள்ளி தலையை ஆட்டுது 
வாருங்கள் மேய்ப்பரே நாம் பெத்தலகேம் செல்வோம் 
வானம் விட்டு பூமி வந்த மேசியாவை காணுவோம் 
பெத்தலையின் சத்திரத்திலே 
மாடடையும் குளிரினிலே 
மரியன்னை மடிதனிலே 
மன்னனை கண்டார்

2. உன்னை மீட்க இயேசு வந்தாரே 
பாரிலே என்னை மீட்க இயேசு வந்தாரே 
பாரிலே நம்மை மீட்க இயேசு வந்தாரே 
மாசில்லா பாலனை போற்றி போற்றி பாடுவோம் 
மாறிடா அன்பினை உலகமெங்கும் சொல்லுவோம் 
இவரே இரட்சகராம் இவரே வல்லவராம் 
இவரே பரிசுத்தராம் என்றே பாடுவோம்

-------++++++++
 ஆராரோ ஆரிரரோ ஆராரோ 
ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ

ராசாதி ராசா எங்க மகராசா 
இந்த ஏழைகளை ஆளவந்த இயேசு ராசா
மனசெல்லாம் சந்தோஷம் பொங்குதுங்க
சின்னஞ்சிறுசெல்லாம் சங்கீதம் பாடு துங்க

1. பூ போல முகமுங்க அத 
பார்த்தாலே அழகுங்க 
சகிக்காத இடமுங்க அங்க 
பொறந்தாரு மகனுங்க 
கதிதானோ ஏனுங்க 
கதை எல்லாம் கேளுங்க

வானிலிருந்து நம் தேவன் 
இயேசு பாலகனாய் பிறந்தார் 
பாவ மனிதர் நலம் வாழ 
இங்கு மானிடனாய் பிறந்தார் 
ஆரிரரோ ஆராரோ

1.வாழும் மனிதர் பாவங்களை 
தோளில் சுமக்க பிறந்தாரே 
தேவ உலக வாழ்வு தனில் 
நாமும் பிறக்க பிறந்தாரே 
உலகில் பிறந்தார் நீதியின் ராஜா 
தீர்ப்பும் தருவார் சாரோனின் ரோஜா

விண்ணில் தூதன் தோன்றி டவே 
மண்ணில் மாற்றி சிறந்திடவே 
மன்னன் தேவன் உதயமானார் 
தேவபாலன் மகிமை ஆனார்

1.மாமரி மடி மீதிலே 
மாடடையும் குடில் நாடியே -மன்னன் 

2.வான்வெளி வழிகாட்டவே 
ஞானியர் மூவர் நாடவே -மன்னன்

அசைந்தாடும் தென்றல் 
இசையோடு சேர்ந்து 
திசையெங்கும் ஒலிக்கின்றது 
மழலை தவழும் 
அழகில் நீ மனமும் 
மகிழ்ந்துன்னை தாலாட்டுது -பாலா

1.மரியன்னை மடியில் 
மந்தையின் தொழுவில் 
பிறந்தரே இயேசு தேவா 
உம் குடில் நாடி 
ஓடோடி வந்தேன் 
பாலா நீ துயில் கொள்ளுவாய் 

2.பனி தூவும் ராவில் 
பாழும் இவ்வுலகில் 
பயம் நீக்க வந்தாயன்றோ 
பூ மெத்தை இல்லை 
புல் மெத்தை தானே 
பாலா நீ துயில் கொள்ளுவாய்
----------------

வெள்ளி ஒன்று 
புது வெள்ளி ஒன்று வானத்திலே தோன்றியதே 
அது நல்ல செய்தி ஒன்று கூறிடுதே 
யூதருக்கு ராஜா பிறந்தார் என்று 
யூகித்தார் சாஸ்திரிகள் உண்மை அதே 

1.தங்க கட்டி கொண்டு வரலாமா 
தங்க பாலனுக்கு பரிசாகத் தரலாமா 
வாரும் வாரும் அதை தாரும்  தாரும் 
மிக நல்ல பரிசு அதுவே 
மங்கா புகழ் மன்னவனையே 
சங்கீதம் பாடி தொழுதிடுவோம் 

2.தூபவர்க்கம் கொண்டு வரலாமா 
தூய பாலனுக்கு பரிசாக தரலாமா 
வாரும் வாரும் அதை தாரும்  தாரும்
மிக நல்ல பரிசு அதுவே 
மங்காப் புகழ் மன்னவனையே 
சங்கீதம் பாடி தொழுதிடுவோம்



அந்த மாலை காற்றினில் கீதம் 
அது தூதர்கள் பாடிடும் கீதம் 
அதைக் கேட்டு மகிழ்ந்திட நாமும் 
அந்த முன்னனை நோக்கி செல்வோம் 

1.பொன்மாளிகை உமக்கங்கு இல்லை
பசும்புல்லணைதான் பஞ்சு மெத்தை
அன்பு பாலனின் புன்னகை கண்டு 
மண மாளிகை யார் தரவில்லை



ஜெனித்தார் ஜெனித்தார்
எங்கள் ஜெகதல இரட்சகனே
உதித்தார் உதித்தார்
எங்கள் உயர் மனுவேலனே

1.கந்தைகள் அணிந்தவரே
பாவ கந்தைகள் அகற்றிடவே
சொந்த குமாரனாய் சொந்தம் பாராட்டியே
விந்தையாக ஜெனித்தார்

2.உன்னதம் துறந்தவரே
எம்மை உன்னதராக்கிடவே
கண்மணி பாலனாய் கனி வினையகற்ற
கன்னியின் மடியிலுதித்தார்

3.வானம் திறந்திடவே
வான சேனைகள் துதித்திடவே
ஞானியர் தேடிட இடையர் வாழ்ந்திட
இனிய தேவன் பிறந்தார்

தலைமுறை தலைமுறையாய்
அவர் இரக்கங்கள் முடிவதில்லை
இரட்சண்ய வார்த்தையே இரட்சகர்
இயேசுவே இகத்தின் மீது ஜெனித்தார்

மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! (2)
ஜெய மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானாரே ஜெய! ஜெய!
மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய!

1. ஆசீர்வாதமே! கன தேசார் நீதமே (2)
ஒளிர் காசினி மீததி நேசப்பிரகாச விண் வாச கிருபாசன

2. சத்திய வாசகர் சதா நித்திய தேசிகர் (2)
வளர் பெத்லகேம் ஊர்தனிலே கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில்

3. அந்தரம் பூமியும் அதி சுந்தர நேமியும் (2)
தினம் ஐந்தொரு நாளினிலே திரு முந்தின மூன்றிலொன்றாகிய

ஸ்திரியின் வித்தாய் வந்தவர்
தாவீதின் வேரானவர்
தீர்க்கன் சொன்ன மேசியா
வாக்குத்ததமானவர் - 2

பாடுவோம் கொண்டாடுவோம்
இயேசு பிறந்தாரே - 4

1.நம்மை மீட்க மண்ணிலே
தேடி வந்த இரட்சகர்
என்றும் நம்மில் வாழவே
இம்மானுவேலானாரே - 2

2.சாபங்கள் யாவும் போக்கவே
வியாதிகள் எல்லாம் நீக்கவே
என்றும் மகிழ்ந்து வாழவே
இரட்சகராக பிறந்தாரே - 2

3.கரங்களை தட்டி பாடுவோம்
கவலையை மறந்து துதிப்போம்
என்றும் நம்மோடிருப்பவர்
சகலத்தையும் புதிதாக்குவார் -2

பெத்லகேம் உரினிலே ,மாட்டு தொழுவதிலே
நம் இயேசு பிறந்தரே, பிறந்தரே பிறந்தரே

நம் இயேசு பிறந்தரே, நம் வாழ்வை மாற்றிடவே
பிறந்தரே பிறந்தரே, புது வாழ்வு தந்திடவே

ஜீவன் தந்திடவே,நம்மை மீட்டிடவே
நாம் இயேசு பிறந்தாரே, பிறந்தாரே பிறந்தாரே
நாம் இயேசு பிறந்தாரே ,நம் வாழ்வை மாற்றிடவே
பிறந்தாரே பிறந்தாரே ,புது வாழ்வு தந்திடவே

தூதர் பாடிடவே ,மேய்ப்பர் போற்றிடவே
நம் இயேசு பிறந்தாரே ,பிறந்தாரே பிறந்தாரே
நம் இயேசு பிறந்தாரே ,உலகத்தை வென்றிடவே
பிறந்தாரே பிறந்தாரே ,நம்மை பரலோகம் சேர்த்திடவே

வானம் போற்றிடவே ,பூமி மகிழ்திடவே
நாம் இயேசு பிறந்தாரே ,பிறந்தாரே பிறந்தாரே
நாம் இயேசு பிறந்தாரே ,உலகத்தை வென்றிடவே
பிறந்தாரே பிறந்தாரே ,நம்மை பரலோகம் சேர்த்திடவே


மாமன்னன் மானிடரை மீட்க – மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்
மாசற்ற மாணிக்கம் மகிமையைத் துறந்து – மண்ணிலே பிறந்தார்
நம் மனதிலே பிறந்தார்

மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் எண்ணத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் உள்ளத்தில்
மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் இல்லத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் வாழ்க்கையில்

சிறுமையானவரே எளிமையானவரே
தனிமையானவரே கைவிடப்பட்டவரே
உங்கள் விடிவெள்ளியான யேசு பெத்தலகேமில் பிறந்திருக்கிறார்

துயரப்படுவரே துன்பப்படுவரே
கவலைப்படுபவரே கண்ணீர் வடிப்பவரே
உங்கள் ரட்சகரான யேசு தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்



கிறிஸ்மஸ் வந்தால் கொண்டாட்டமே

ஆடிபாடி மகிழும் நாட்களே

ஒன்றாக கூடியே கரங்களை தட்டியே

இயேசுவை கொண்டாட வாங்கவே -லா லா


1. வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே

இயேசு இன்று பிறந்ததாலே

நம் வாழ்க்கை மாறுமே புது வழி திறக்குமே

இயேசு இங்கு வந்ததினாலே


2. கொடிய வியாதி பறந்து போகுமே

யெகோவா ரஃபா என்னை தொடுவாரே

விடுவிக்கும் தேவனே மனிதனாக வந்தாரே

என் வாழ்வில் பயமில்லையே


இம்மானுவேல் இம்மானுவேல் என்னோடு இருப்பாரே

1. பெத்லகேமில் பிறந்தவர் அவர்

பாலகனாய் ஜெனித்தவர் அவர்

இம்மானுவேல் என்னோடு இருப்பாரே

உலகத்தின் ராஜா அவர் தூதர் போற்றும் தேவனவர்


2. மகிமை நிறைந்த தேவனவர்

மகத்துவத்தின் கர்த்தரவர்

இம்மானுவேல் என்னோடுயிருப்பாரே

சமாதானபிரபு அவர் தன்னை தரும் தகப்பனவர் இம்மானுவேல் என்னோடுயிருப்பாரே - இம்மானுவேல்


3. மனிதனாக பிறந்த அவர்

பரலோகத்தை திறந்த அவர்

இம்மானுவேல் என்னோடுயிருப்பாரே

மாம்சமாக வந்த அவர் தமக்குள் வாழும் இயேசு அவர்

இம்மானுவேல் என்னோடு இருப்பாரே



சந்தோஷமான ஒரு செய்தி வந்தாச்சு சங்கீதம் பாட ஒரு காலம் வந்தாச்சு மன்னன் இயேசு மண்ணில் வந்தார் விண்ணின் மைந்தன் வந்துதித்தார் நிலவு இரங்கி மண்ணில் வந்து தவழ்வது போல உலகில் வாழும் குழந்தையாக இயேசு வந்தாரே


1. பனிமழை பூமியெங்கும் தூவும் வேளையில் பாமரர் ஆயர் எங்கும் தூங்கும் காலையில் தேவதூதர் வானிரங்கி துதிகள் சாற்றிட ஸ்தோத்திர புகழ்ச்சி பாட வந்துதித்தாரே


கிறிஸ்மஸ் வந்தாலே கொண்டாட்டம் தான்

புதுபாட்டு நாம் பாட கும்மாளம் தான் பாட்டு பாடலாம் ஆட்டம் போடலாம் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடலாம்


1.ஊரெங்கும் கொண்டாட்டம் உலகெங்கும் உற்சாகம்தான் - இந்த வாண வேடிக்கை ரொம்ப ஜோரு ஜோருதான் தூதர் பாடிடும் கிறிஸ்மஸ் பாட்டு சூப்பர்தான் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான் - 2


2.வீதியோரம் கிறிஸ்மஸ் தாத்தா ஜாலியாக வாரார் பாரு கேரல் ரௌண்டில் பாடும் பாட்டை கேளுங்க ஆட்டம் போட்டிடும் நண்பர் கூட்டம் கூட்டமாய் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான் - 2



கிழக்கு திசையிலே அந்த சிவந்த வானத்திலே

மாலை பொழுதிலே அந்த மயங்கும் வேளையிலே   - ஓய்

அழகான வெள்ளி ஒன்று செல்லுதே

அது மன்னன் இயேசு பிறந்தசெய்தியை சொல்லுதே


1. விந்தை காணவே வந்த ஞானியார் 

கந்தை துணியிலே மன்னனைக் கண்டார் சிந்தை களிகூறவே உள்ளமெல்லாம் மகிழவே 

காணிக்கைகள் தந்து அவர் பாதம் பணிந்தார் 


2.சாந்த ரூபனே சாக ஜீவனே

சாரோன் ரோஜாவே லீலிபுஷ்பமே 

மின்னுகிற நட்சத்திரமாய் ஒளிதரும் ஜோதியாய் 

உண்மை சொல்ல உலக வாணில் பயணம் போகுதே

உம்மை போல ரட்சகர் ஒருவரும் இல்லைஉம்மை போல வல்லவர் ஒருவரும் இல்லை

உம்மை போல ரட்சகர் ஒருவரும் இல்லை
உம்மை போல வல்லவர் ஒருவரும் இல்லை
உம்மை போல பரிசுத்தர் ஒருவரும் இல்லை
உம்மை போல கன்மலை ஒருவரும் இல்லை

என் இதயம் மகிழ்கின்றது
என் கொம்பு உயர்ந்துள்ளது
பகைவர்கள் மேல் என் வாய் திறந்து
இரட்சிப்பினால் களி கூறுகின்றது

மலட்டு வாழ்க்கையெல்லாம் 
மாற்றிவிட்டீரே
பலுகிப் பெருகும் படி தூக்கி விட்டீரே
என்னை நினைத்தீர் நீர் மறவாமலே
கனி கொடுப்பேன் நான் உமக்காகவே

புழுதியில் இருந்த என்னை தூக்கிவிட்டீரே
குப்பையில் இருந்த என்னை உயர்த்திவிட்டீரே
அமர்த்தினீரே என்னை பிரபுக்களோடு
(உம்மை) உயர்த்திடுவேன் முழு இருதத்தோடு

யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரேஎன் தேவையெல்லாம் சந்திப்பீர் – 2

யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே
என் தேவையெல்லாம் சந்திப்பீர் – 2

என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே
என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே-2 – யேகோவாயீரே

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே – 2

நம்புவேன் என் இயேசு ஒருவரை
நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை-2

என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்
வாழ்க்கை முடிந்தது மாறுவாழ்வு இல்லை என்றாலும்-2
நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை-2

நம்புவேன் என் இயேசு ஒருவரை
நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை-2

அவர் நாமமே மதுரமதே
அவர் நாமத்தில் சுகமுண்டே-2

இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம்
இயேசு நாமம் இயேசு நாமம் வாழ்கவே-2-அவர் நாமமே

உலகமெல்லாம் மறக்குதையா!
உணர்வு எல்லாம் இனிக்குதையா-2
உம் நாமம் துதிக்கையிலே என் இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே-என் இராஜா-2

என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்-2

ஆடுவேன் பாடுவேன் பேதையை போல

ஆடுவேன் பாடுவேன் பேதையை போல
இயேசுவை நான் என்றும் பறைசாற்றிடுவேன்

மாறிடுவேன் எல்லோரையும் மாற்றி விடுவேன்
பரலோகம் கூட்டி செத்துருவேன் 
சுவிசேஷதால் இந்த உலகத்தை மாற்றி விடுவேன்



நாளுக்கு நாள் அவர் அன்பில் வளர்ந்து விடுவேன்
அவர் நாமம் என்றும் உயர்த்திடுவேன்
அவர் வார்த்தையினால் இந்த உலகத்தை ஜெயித்திடுவேன்

பாடுவேன் ஆடுவேன்மகிழ் கொண்டாடுவேன்

பாடுவேன் ஆடுவேன்
மகிழ் கொண்டாடுவேன்
நன்மைகள் செய்தாரே
எந்நாளும் துதிப்பேன்

அச்சமில்லை பயமும் இல்லையே
நேசருக்காய் ஆடிப்பாடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா

இயேசுவின் நாமத்தில்
சாத்தானை ஜெயிப்பேன்
கிறிஸ்துவின் இரத்தத்தால்
நுகங்கள் முறிப்பேன்

இச்சையை ஜெயிப்பேன்
எட்டி எட்டி உதைப்பேன்
கர்த்தரின் பெலத்தால்
மோட்சம் சேர்வேன்

Nachoonga Gaoonga paglon ke samaan Hindi song tamil & English version. நாச்சுங்க காவுங்க பகலோன் கேசமான்

நாச்சுங்க காவுங்க பகலோன் கேசமான்
ஹோஸ்மே நா ராஹோங்கா  மேரா ராஜா ஹேய் மஹான்

நாசுங்கா கோகே அப்னா ஸ்வாபிமான்
அரே லோக்கு கேசே மூர்குதபர்
காவுங்கா மேரா ராஜா ஹேய் மஹான்

ந ந ந ந ந நா ஹே

நாசுங்கா கோகே அப்னா ஸ்வாபிமான்
அரே லோக்கு கேசே மூர்குதபர்
காவுங்கா மேரா ராஜா ஹேய் மஹான்

நாசுங்கா பகலோன் கேசமான்
காவுங்கா மேரா ராஜா ஹே மஹான்


English 

Nachoonga Gaoonga paglon ke samaan
Hosh mein na rahoonga mera Raaja hai mahaan

Nachoonga, khoke apna swaabhimaan
log kahe ise moorkhta
Gaoonga, mera Raaja hai mahaan

na na na na na na, hey

Nachoonga, khoke apna swaabhimaan
log kahe ise moorkhta
Gaoonga, mera Raaja hai mahaan

Nachoonga, paglon ke samaan
Gaoonga, mera Raaja hai Mahaan

*பாடலின் வல்லமை*


பாடலின் வல்லமை
1) சிறைச்சாலை கதவு திறந்தது - அப் 16:25
2) எரிகோ கோட்டை விழுந்தது - யோசு 6:20
3) அசுத்த ஆவி ஓடியது - 1 சாமுவேல் 16:23
4) சத்துரு வெட்டுண்டு விழுவார்கள் - 2 நாளா 20:22

கிறிஸ்மஸ் ஸ்டார் கிறிஸ்மஸ் ஸ்டார்வீட்டில் மாட்டியாச்சே


கிறிஸ்மஸ் ஸ்டார் கிறிஸ்மஸ் ஸ்டார்
வீட்டில் மாட்டியாச்சே
கிறிஸ்மஸ் ட்ரீயும் கிறிஸ்மஸ் ட்ரீயும்
நன்றாய் நட்டாச்சே-2

ஸ்டார் தான் வழியில் நடத்துமோ
ட்ரீ தான் வழியை காட்டுமோ-2

ஜிங் ஜிங் ஜிங் ஜிங் கிட்டார் இசையில் நிறையுதே
டம் டும் டம் டும் ட்ரம்ஸ் ஒலியும் கலக்குதே-2

பாலனை தேடிய ஞானியருக்கு
ஸ்டார் தான் வழியை காட்டியதே
வழியை காட்டியதே-2
இருளில் வாழும் மாந்தர்க்கு
நீயே வழியை காட்டுவாயே-2

ஜிங் ஜிங் ஜிங் ஜிங் கிட்டார் இசையில் நிறையுதே
டம் டும் டம் டும் ட்ரம்ஸ் ஒலியும் கலக்குதே-2

பாதையை காட்டிய இயேசுவுக்கு
காலம் எல்லாம் நன்றியே
நன்றி நன்றியே-2
உலகில் வாழும் யாவருக்கும்
நாமே வழியை காட்டுவோமே-2

ஜிங் ஜிங் ஜிங் ஜிங் கிட்டார் இசையில் நிறையுதே
டம் டும் டம் டும் ட்ரம்ஸ் ஒலியும் கலக்குதே-2-கிறிஸ்மஸ்

Singaara paalanae aa..ra..ro..Sivandha pattu roja aa..ra..ro..

Singaara paalanae aa..ra..ro..
Sivandha pattu roja aa..ra..ro..
Devakumaranae aa..ra..ro..
Manitha kumaaranae aa..ra..ro..

Thanga thottil illai 
Angu thaadhiyar kooda illai
Panjanai methaiyum angavarkillai
Panipadaa malare aa..ra..ro..

Singaara paalanae aa..ra..ro..
Sivandha pattu roja aa..ra..ro..
Devakumaranae aa..ra..ro..
Manidha kumaaranae aa..ra..ro

Maattu thozhuvathilae 
Angu maapani saaralilae 
Menmaiyai verutthu
Thazhmaiyai tharittha
Chinnanchiru paalanae aa..ra..ro.. 

Singaara paalanae aa..ra..ro..
Sivandha pattu roja aa..ra..ro..
Devakumaranae aa..ra..ro..
Manidha kumaaranae aa..ra..ro..

Nenjiley Poo Poothadhey. Mannavan Nammiley Vandhadhaal.

Nenjiley Poo Poothadhey. 
Mannavan Nammiley Vandhadhaal.
Paarinil Ellorukum. Meetpar Pirandha Kondaatam.

Geedhamaaga Vaazhthuvom.
 Mei Dheva Paalanai.
Nammiley Jeevanai 
Thandha Engal Nalla Paalanai. -Nenjiley..

Sirandhavar Vallavar Pirandhadhaal.
Vallamai Maatchimai Vandhadhe.
Adhisayam Pooviley Nadathida.
Dhevaadhi Dhevan 
Immannil Vandhaarey. -Nenjiley...

Thadaigalai Agatriye Nadathida.
Paadhaiyai Sevaiyaai Aakida.
Naalellaam Karathinaal Thaangida.
Vetri Vendhan Immannil Vandhaarey.
-Nenjiley

என் வாழ்விலே… ஒளியேற்றவே பிறந்தார்… மரித்தார்… உயிர்த்தார்… Christmas song


என் வாழ்விலே… ஒளியேற்றவே 
பிறந்தார்… மரித்தார்… உயிர்த்தார்… 
 
     பரிகாரி..இயேசுவே...(JESUS THE HEALER)-(எந்தன்/உந்தன்)2
பாவங்கள் போக்கிட சாபங்கள் நீக்கிட  
குருதி சொறிந்தாரே
மண்ணக மாந்தரை விண்ணகம் சேர்த்திட
தன் ஜீவன் துறந்தாரே

1. நதி நீரும் கடல் நீரும் கறை நீக்குமோ - நீ
பலி செலுத்தும் விலங்கெல்லாம் வினை தீர்க்குமோ
நடந்தாலும் உருண்டாலும் அது தீருமோ - அட
நீ சிந்தும் இரத்தம் உன்னை குணமாக்குமோ
கல்வாரி இயேசு இரத்தம் - உன் 
பாவக்கறை நீக்கும் - என்
இயேசு குருதி மட்டும் - உன்
சாப வினை தீர்க்கும்         

2. மாராவின் தண்ணீரை மாற்றினவர் - உன்
தீராத கண்ணீரை தேற்றிடுவார்
ஆராய்ந்து முடியாத செயலாற்றுவார் - உன்
போராடும் வாழ்க்கைக்கு ஜெயமீகுவார் - உன்
தேவன் சத்தம்கேளு - அவர்
வார்த்தைக் கைக்கொண்டிரு - சம்
பூரண கர்த்தர் அவர் - உன்
சகலமும் நிறைவாக்குவார்

என் இயேசு மிகவும் பெரியவர்என் இயேசு மகத்துவமானவர்

En Yesu migavum Periyavar
En Yesu Magathuvamaanavar
En Yesu Sarvavallavar
En Yesu Sarvam Aalpavar

Kaigalai uyarthi
irudhayam uyarthi
Udhadugal uyarthi
Um naamam potruvaen

Kaigalai uyarthi
iruthayam uyarthi
Udhadugal uyarthi
Um naamam solluvaen

Maaradha dhevan enai maravaadha dheivam neerae
Melana dhevan en menmaiyaga  irupavarae
Maaraavin neerai andru madhuramaaga maatriya dheivam
En vazhvin maaravai madhuramaga maatriyavar

Ha.. hallelujah – (3)
Hoo…
Ha.. hallelujah – (3)
Ho..sanna

Devaathi devan ennai thetri aatrum Thaetraravalan
Thooyathi thooyar ena Thoothar potrum thooyavar
Vaanaathi vaanavar ini-varapogum mannavar neerae
Raajathi Raajanae en karthathi kartharae

Ha.. hallelujah – (3)
Hoo…
Ha.. hallelujah – (3)
Ho..sanna
என்  இயேசு  மிகவும்  பெரியவர்
என்  இயேசு  மகத்துவமானவர்
என்  இயேசு   சர்வவல்லவர் 
என்  இயேசு   சர்வம்  ஆள்பவர் 

கைகளை  உயர்த்தி 
இருதயம்  உயர்த்தி 
உதடுகள்  உயர்த்தி 
உம் நாமம்  போற்றுவேன்

கைகளை  உயர்த்தி 
இருதயம்  உயர்த்தி 
உதடுகள்  உயர்த்தி 
உம் நாமம்  சொல்லுவேன்

மாறாத  தேவன்  என்னை  மறவாத  தெய்வம்  நீரே 
மேலான  தேவன்  என்  மேன்மையாக   இருப்பவரே 
மாராவின்  நீரை  அன்று  மதுரமாக  மாற்றிய  தெய்வம் 
என்  வாழ்வின்  மாராவை  மதுரமாக  மாற்றியவர்

ஆ..அல்லேலுயா – (3)
ஓஒ…
ஆ..அல்லேலுயா – (3)
ஓசன்னா...



தேவாதி  தேவன்  என்னை  தேற்றி  ஆற்றும்  தேற்றரவாளன் 
தூயாதி தூயர் என  தூதர்  போற்றும்  தூயவர் 
வானாதி வானவர்  இனி-வரப்போகும்  மன்னவர்  நீரே 
ராஜாதி  ராஜனே  என்  கர்த்தாதி கர்த்தரே
ஆ..அல்லேலுயா – (3)
ஓஒ…
ஆ..அல்லேலுயா – (3)
ஓசன்னா...

உள்ளம் நொறுங்கிய எந்தன் கண்ணீர் கண்ட என் தேவன் (2)

உள்ளம் நொறுங்கிய எந்தன்
 கண்ணீர் கண்ட என் தேவன் (2)
 தேற்றினார் வார்த்தையால் தேற்றினார்
 தூக்கினார் கரம்பற்றி தூக்கினார் (2)
  நன்றி நன்றி சொல்வேன் தேவா
  நன்றி நன்றி சொல்வேன் தேவா
  உந்தன் அன்னைச் சொல்லிப் பாட
  எந்தன் நாவு ஒன்று போதா (2)

2. தாயைப் போல் மனம் உருகி
 எந்தன் இருதயம் வருடி (2)
 ஆற்றினார் காயங்கள் ஆற்றினார்
 மாற்றினார் வாழ்வையே மாற்றினார் (2)

3. சிறுமை அடைந்தவன் என்னில்
 மேன்மை அளித்த என் இயேசு (2)
 வாழ்கின்றார் அவர் இன்றும் வாழ்கின்றார்
 உயர்த்துவார் உன்னையும் உயர்த்துவார் (2)
 
4. சாத்தான் விரித்த வன் வலையில்
 சேற்றில் விழுந்த அந்நிலையில் (2)
 நொறுங்குண்டேன் உள்ளத்தில் நறுங்குண்டேன்
 மருந்துண்டேன் இயேசுவின் விருந்துண்டேன் (2)

இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே Christmas song


இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே
இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே
இதை நம்பினால் விசுவாசித்தால் நீதிமான் பிழைப்பானே
இதை நம்பினால் விசுவாசித்தால் நீதிமான் பிழைப்பானே
ஹலேலூயா ஹலேலூயா
தூக்கி எடுத்தீரே
ஹலேலூயா ஹலேலூயா
தூக்கி எடுத்தீரே
இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே
இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே

பழையவை ஒழிந்திட புதியவை நடந்திட
கிருபை தாருமே
பழையவை ஒழிந்திட புதியவை நடந்திட
கிருபை தாருமே
எந்தன் கண்ணீருக்கு
பதிலாக களிப்பை பெற்றிட கிருபை தாருமே
புது கிருபை தாருமே
ஹலேலூயா ஹலேலூயா
தூக்கி எடுத்தீரே
ஹலேலூயா ஹலேலூயா
தூக்கி எடுத்தீரே
இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே
இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே

குருடர்கள் பார்திட செவிடர்கள் கேட்டிட
அற்புதம் செய்வீரே
குருடர்கள் பார்திட செவிடர்கள் கேட்டிட
அற்புதம் செய்வீரே
எல்லா பெலவீனன் பெலன் பெற்று
சுகவீனன் சுகம் பெற அற்புதம் செய்வாரே
புது அற்புதம் செய்வாரே
ஹலேலூயா ஹலேலூயா
தூக்கி எடுத்தீரே
ஹலேலூயா ஹலேலூயா
தூக்கி எடுத்தீரே
இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே
இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே

தேசத்தை இரட்சிக்க ஜாதிகள் நம்பிட
ஊழியம் தந்தீரே
தேசத்தை இரட்சிக்க ஜாதிகள் நம்பிட
ஊழியம் தந்தீரே
எல்லா சபைகள் நிரம்பட்டும்
எழுப்புதல்கள் எழும்பட்டும் இந்த நாளிலே
இந்த புதிய நாளிலே
ஹலேலூயா ஹலேலூயா
தூக்கி எடுத்தீரே
ஹலேலூயா ஹலேலூயா
தூக்கி எடுத்தீரே

மண்ணில் வந்த வின்னொலியே Christmas song


மண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே
மண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே 
மழலையாய் பனியில் குளிரிலே  பிறந்தவரே - சிறு 
மழலையாய் பனியில் குளிரிலே பிறந்தவரே-
உம்மை வாழ்த்தி வணங்கி புகழ்வோமே 
மண்ணில் வந்த வின்னொலியே.....
               1
கந்தை துணியில்  விந்தை யாக வந்த தேவ பாலகனே 
கந்தை துணியில்  விந்தை யாக வந்த தேவ பாலகனே
விடிகாலை அழகே வழிகாட்டும் மறையே விண்மீன் ஒளியாக  வந்தவரே
விடிகாலை அழகே வழிகாட்டும் மறையே விண்மீன் ஒளியாக  வந்தவரே
உம்மை வாழ்த்தி வணங்கி புகழ்வோமே 
மண்ணில் வந்த வின்னொலியே.....

               2
கண்ணின் மணியாய் அன்பின் வழியாய் வந்த சின்ன பாலகனே
கண்ணின் மணியாய் அன்பின் வழியாய் வந்த சின்ன பாலகனே 
மானிட பாவத்தை நீக்கிடவே மீட்பராய் வந்து பிறந்தீரே
மானிட பாவத்தை நீக்கிடவே மீட்பராய் வந்து பிறந்தீரே 
உம்மை வாழ்த்தி வணங்கி புகழ்வோமே 
மண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே
மண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே 
மழலையாய் பனியில் குளிரிலே  பிறந்தவரே - சிறு 
மழலையாய் பனியில் குளிரிலே பிறந்தவரே-
உம்மை வாழ்த்தி வணங்கி புகழ்வோமே 
மண்ணில் வந்த வின்னொலியே....

பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்


பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்
அச்சத்தின் உச்சத்தை பார்த்தேன்
ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்
இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்

உடைத்தீர் உருவாக்கினீர்
சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்
புடமிட்டீர் புதிதாக்கினீர்
பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு

எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்
உம் கரம் என்னை நடத்தியதே

சொத்து சுகம் இருந்தாலும்வீடு நிலம் இருந்தாலும் . bro.Ben Samuel

சொத்து சுகம் இருந்தாலும்
வீடு நிலம் இருந்தாலும்
உங்க கிருபை மட்டும் இல்லன்னா Waste
உங்க தயவு மட்டும் இல்லன்னா Waste-2

ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
முழு உள்ளத்தோடு உமக்குத்தானே-2

1.சத்துருக்கு முன்பாக என்னையும் நிறுத்தி
உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா-2
தலையை எண்ணையினால்
அபிஷேகம் செய்கின்றீர்-2
கிருபை தந்தவரே நன்றி ஐயா-என்னை
உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா

2.வெறுமையாக வாழ்கின்ற என்னையும்
தேடி வந்தவரே நன்றி ஐயா-2
கண்ணீர துடச்சிடுங்க
காயங்களை ஆற்றிடுங்க-2
சேர்த்து கொண்டவரே நன்றி ஐயா-என்னை
அணைத்துக் கொண்டவரே நன்றி ஐயா

பூவுலகில் பூ ஒன்று பூத்தது Christmas song

பாம பதப மக மபமக
சநிதப நிதபம
பாம பதப மக மபமக
தசசச

பூவுலகில் பூ ஒன்று பூத்தது
நம் வாழ்வு மலர்ந்திட உதித்தது
இந்த மலரை தேடியே கோடி ஜெனங்கள் வந்தனர்
இதனை பார்த்ததும் சந்தோசம் வந்தன

பதச தநிசா மபதநிசா
கம பத நிசநிசா
பதச தநிசா மபதநிசா
சரிகமபதநிசா
ககரி ககரி கா - பதநிசா
ரிரிச ரிரிச ரி - மபதநி
கரிசநி நிசநித சநிதப
ரிதபம கபமக சகமப

1.உலகின் ஒளி கொடுக்க வந்த மைந்தனே
உலகின் ஒளியான எனது மீட்பரே
சமதான பிரபு இவர்
இவ்வுலகின் இரட்சகர்
இவரை பாடி ஆடி போற்றி நாமும் கொண்டாடுவோம்


2.பாவம் போக்க வந்த பரம மைந்தனே
பாவ உலகில் எனக்காய் வந்தவர் நீரே நிசகம ப
பதினாயிரங்களில் சிறந்தவர் இவர்
இவரை பாடி ஆடி போற்றி நாமும் கொண்டாடுவோம்

3.சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே
மருதொன்றி பூங்கொத்தே லில்லி போல் செண்டே
இவரே போல இங்கு அழகு யாருமில்லையே
இவரை பாடி ஆடி போற்றி நாமும் கொண்டாடுவோம்

நமக்கொரு பாலன் பிறந்தார்- Christmas song

நமக்கொரு பாலன் பிறந்தார்-மீட்பையருள நமக்கொரு பாலன் பிறந்தார்

அனுபல்லவி: 
மானிடம் காத்திட மாந்தருள் வாழ்ந்திட ஊனுடல் தரித்தார் பாரினில் உதித்தார்-நம

சரணம்: 
1.சகலமும் படைத்திட்ட சர்வ வல்லோன் இகமதில் பிறந்தது விந்தையன்றோ ! நீதியும் இரக்கமும் இணைத்தே மகிழ்வார் ஜோதியாய் நின்றே பவஇருள் களைவார் தந்தையாம் தேவனின் பிள்ளை-நம்மில் அவரின்றி வாழ்வே இல்லை-தினம் அனுமதியார் ஒரு தொல்லை-தேவ அன்புக்கு அவரே எல்லை.-நமக்கொரு

2. கர்த்தனைக் கண்டிட வாருங்களேன் கந்தை அணிந்த தேவன் பாருங்களேன் வானவரோடும் மேய்ப்பர்களோடும் கீர்த்தனம் பாடி போற்றிப் பணிவோம். மாற்றிடுவார் பவரோகம்-நம்மை செய்திடுவார் சிங்காரம்-தினம் சுமந்திடுவார் நம்பாரம்-நம் வாழ்வுக்கு அவர் நங்கூரம்.-

நமக்கொரு ஸ்வரங்கள் 
1.ஸா ரீ கா மா பத நி - நமக்கொரு 
2.ரீ மா பா ரீ நீரீ ஸா ... நி ரி ம பத நி - நமக்கொரு 
3.கா க கா கா க கா ...... க ரி ச நி நீரி கா பா மா கா .... காக கா கா க காப...க ரி ச நி நீ ரி கா பமப கா ... நீரிகா பமப மா ...... ரீ ம பா நீ தா பா நீ ரி கா ம ப த பா ....ரீ ம பா ச^ நி த பா - த நி சா^ நமக்கொரு பாலன் பிறந்தார் .......
 4. சாச பாட மாம காகரிகரிச (சாரிகா {காபா சா^ }

காக நீநி பாப மாம ரிகரிநி (நீபாமா {ரீ^ சா^ தா } சாச பாப மாம காக ரிகரிச

காக நீநி பாப காக ரிகரிநி[பாகாமா) {நீ சா^ g } ^ சா ச சா சா சா நி ரி ச நீ தா ...மா ம தா நீரி நிரி க ரி நீ ..... கரிச நீத பமகா ... ரி சா நி தபமகரி ....ச நீ தா பமகரி | க ம பா ......... ச ரி கா .....(3) ச ரி க ம ப த நீ ... ரி க ம ப த நீ ச....க மபத நீச ரீ .... சரி க ம ப த நீ .... ரி க ம பத நி ச... க ம ப த நீச சரிகம பதநி ரிகமப தநிச கமபதநீசரீ......... க ரி சநீத ரி ச நீதப ச நீத பமக....... க ரி ச நீத ரி ச நீதப ச நீதபம க ம ப த நீ ச - நமக்கொரு ..........

|

அந்தி மழை பொழிந்திடும்‌ நேரம் Christmas song

அந்தி மழை பொழிந்திடும்‌ நேரம்
இசை மழை பொழியுதே வானம்
அந்த அழகு வானில் ஒரு பாட்டு
அது தூதர் பாடிடும்‌ பாட்டு
இரட்சகர் இயேசு பிறந்தார் (2)
Christmas (5)
                            (1)
பாவம் போக்க (2) பாவியை மாற்ற(2)
பரிவோடு தேவன் பாரில் வைத்தாரே அன்பு தூய அன்பு
ஏக மைந்தன் இயேசுவையே பூமிக்கு                              தந்தாரே(2) 
எங்கெங்கும் என்றென்றும்
சந்தோஷம் சங்கீதம் சரிகம பதநிஸா...
                          (2)
தென்றல் காற்றே (2) மெல்ல  நீ வீசு (2)
சின்ன இயேசு பாலன் மகிழ்ந்து தூங்கிட வா வா.. நீ வா வா
பாடல்கள் தந்திடு ஆயிரம் ஆயிரம் (2)
                                  - எங்கெங்கும்

                                (3)
தேவக்குமாரா (2) இராஜக்குமாரா(2)
பாவி என்னை மீட்டு மனதில் தங்கிட வாவா நீ வாவா
பாடுவன்‌ ஆடுவேன் பாரெல்லாம் சொல்லுவேன்
                         - எங்கெங்கும்

எத்தனை இனிமை எத்தனை மகிமை Christmas songs

எத்தனை இனிமை எத்தனை மகிமை கிறிஸ்மஸ் நாளினிலே
எங்கெங்கும் கொண்டாட்டமே
இயேசு பிறந்ததினால் அல்லேலூயா

1. வானம் பூமி வாழ்த்திடுதே
கீதம் பாடி மகிழ்ந்திடுதே 2
ஞானியரும் வணங்கினரே
தெய்வமகன் பிறந்தாரே 2

2. விண்ணை துறந்து பூமியிலே 
அன்னை மேரி மடியினிலே
அன்பு மகன் அவதரித்தார் அவனியிலே வந்துதித்தார்

3. பாவம் போக்க பிறந்தாரே
சாபம் நீக்க உதித்தாரே
பாரில் நம்மை இரட்சிக்கவே
 இரட்சகர் இயேசு பிறந்தாரே

பார் எங்கும் மகிழ்ந்து ஆட Christmas songs

பார் எங்கும் மகிழ்ந்து ஆட
விண் தூதர் இசைந்து பாட
சின்னஞ்சிறு பாலகனாய்
மண்ணில் வந்த  மன்னவனாம்
அன்னைமரி  பாலகனை போற்றுவோம்

விண்ணோர்கள் வாழ்த்த மண்ணோர்கள் போற்ற 
தேவ மைந்தன் இன்று பிறந்தார்

மேய்ப்பர்கட்கு வானதூதர் செய்தி சொல்லவே
பாலகனை காண அவர்
சென்றனரே
கந்தை  துணி கோலமாக
முன்னனையின் மீதினிலே
உலகத்தின் இரட்சகரை தொலுதனரே

வானில் புது விடிவெள்ளி
தோன்றியதே
தேவ மகன் பிறப்பினை
கூறியதே
ஞானிகளும் பின்சென்று
காணிக்கைகள் கொண்டு சென்று
இயேசு பாலன் முன்பாக பணிந்தனர்

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...