எத்தனை இனிமை எத்தனை மகிமை கிறிஸ்மஸ் நாளினிலே
எங்கெங்கும் கொண்டாட்டமே
இயேசு பிறந்ததினால் அல்லேலூயா
1. வானம் பூமி வாழ்த்திடுதே
கீதம் பாடி மகிழ்ந்திடுதே 2
ஞானியரும் வணங்கினரே
தெய்வமகன் பிறந்தாரே 2
2. விண்ணை துறந்து பூமியிலே
அன்னை மேரி மடியினிலே
அன்பு மகன் அவதரித்தார் அவனியிலே வந்துதித்தார்
3. பாவம் போக்க பிறந்தாரே
சாபம் நீக்க உதித்தாரே
பாரில் நம்மை இரட்சிக்கவே
இரட்சகர் இயேசு பிறந்தாரே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக