தமிழ் பைபிளில் உள்ள சில கடின சொற்களுக்கான விளக்கம்..
அகத்தியம் (எஸ் 4:8) - கட்டாயம், அவசியம்.
அகரதமான (ஏசா 14:15) - ஆழமான.
அசங்கியம் (எஸ்றா 9:11) - அருவருப்பு, தூய்மையின்மை.
அசம்பி (1 சாமு 21:5) - பயணிகள் தோட்பை (அகராதி குறிப்பு).
அஸ்திராயுதம் (எரே 50:25,51:20) - அதிகபட்ச கோபத்தில் பிரயோகிக்கும் ஒரு கொடுமையான ஆயுதம்.
அஞ்சிக்கை (ஓசி 3:5) - அச்சம், பயம்.
அசூசம் (புலம்பல்) - தீட்டு.
அசுப்பு (யோபு 9:23, எரோ 4:20) - சடுதியாக, திடீரென வருதல்.
அபரஞ்சி பூஷணம் (நீதி 25:12) - புடமிடப்பட்ட பொன்.
அழுங்கு (லேவி 11:30) - எறும்பு தின்னும் ஒருவித விலங்கு.
அழிம்பு (எரே 6:7) - கொள்ளையும், சூறையாடுதலும்.
ஆரோகணம் (சங் 120-134) - இசையில் மேலேறும் ஓர்சுருதி.
இதமியம் (நியா 18:20) - மகிழ்ச்சியோடு உடன்படுதல்.
ஈசல் போடுதல் - விசிலடித்தல் (விசிலடித்து நையாண்டி செய்தல்).
இளக்கரிப்பு (ஏசா 42:4) - சோர்ந்து போதல்.
உக்கல் (ஆப 3:16) - உறுத்துப் போதல்.
உசாவு துணை (யோபு 26:3) - உற்ற துணைவன்.
உம்பிளிக்கை (எஸ்றா 9:12) - மானியமாக கொடுக்கப்பட்ட பொருள்.
ஆனால் இவ்விடத்தின அர்த்தம் (நித்திய சுதந்திரம்).
உறுமால் (அப் 19:12) - கைக்குட்டை துணி.
ஒற்தலாம் (மத் 23:23,லூக் 11:42) - ஒரு தானிய வகை. (புதினா).
கடாட்சம் (உன் 8:10) - அருட்பார்வை, கருணை பெறுதல்.
ஏகோபித்து (நியா 20:1) - ஒருமித்து. கட்டியக்காரன் (தானி 3:4) - அரசு கட்டளையை ஊரில் பறைசாட்டுவோன்.
கலாதி (எஸ்றா 4:15) - கலகம், சண்டை, புரட்சி.
கலிக்கம் (வெளி 3:18) - கண்ணிலிடும் மருந்து.
கிரியிருப்பவர்கள் (2 இராஜா 14:14) - பிணைக் கைதிகள்.
கறளை (எரே 48:6) - பிரயோஜனமில்லாத.
காங்கை (ஏசா 25:5) - வெப்பம்.
காய்மகாரம் (1சாமு 18:9) - பொறாமை.
கிரியாப்பிரமாணம் (ரோம 3:27) - செயல்களில் முக்தியடைய முயற்சித்தல்..
கிரித்தியங்கள் (நியா 2:19) - தீய பழக்கங்கள், காலங்காலமாக விடாமல் வைத்திருக்கும் தீய கிரியைகள்.
குருக்கு (ஆதி 3:18) - நெருங்சில் செடி (அதிக முட்களை கொண்ட ஓர் தாவரம்).
குங்கிலியம் (யாத் 30:34) - ஒருவகை நறுமணப் பொருள். (வெள்ளை குங்கிலியம், கருங்குங்கிலியம் என இரண்டு வகை இருப்பதாக தெரிகிறது).
குலாரி வண்டில் (ஏசா 66:20) - மிருகங்கள் இழுத்துச்செல்லும் வண்டி. பல்லாக்கு.
கொறுக்கை (ஏசா 19:6) - கோரைப்புல் / நாணல்.
கொடி மாசி (யோபு 38:37) - நிலையற்று அலையும் மேகங்கள்.
கும்பு (எசே 7:14) - ஜனக்கூட்டம்.
கொம்மை (நெகே 3:1,11) - இவ்வார்த்தைக்குபல அர்த்தங்கள் உண்டு. இவ்விடத்தில் பெரிய மதில்களின் மேல் ஏற்படுத்தப்படும் காவல் மாடங்கள் என பொருள்படும்..
கோரி (யோபு 21:32) - கல்லறை, சமாதி.
சாமாசி பண்ணும் தூதன் (யோபு 33:23) - மத்தியஸ்தர், சமரசம் செய்பவர்.
சம்பாரம் (எசே 24:10) - உணவில் சேர்க்கப்படும் நறுமணப் பொருள்..
சலக்கரணை (2 இராஜா 4:13) - கரிசணையோடு. சளுக்கு (எரே 5:28) - நயமாக பேசுதல்.
சன்னது (எஸ்றா 7:11) - ஆவணம், கடிதம், அரசாணை.
சர்ப்பனை (அப் 25:3) - வஞ்சனை, பதுங்கி இருந்து தாக்குவதற்கு சூழ்ச்சி.
சன்னதக்காரன் (உபா 18:11) - பில்லி சூனிய, ஏவல் வேலை செய்கிறவன்.
சுயம்பாகி (ஆதி 40:1) - சமையற்காரன்.
சீதளம் (ஆதி 8:22) - பல அர்த்தங்கள்உண்டு. குளிர்ச்சி என்ற அர்த்தம்.
சிரேஷ்டம் (நாகூம் 3:8) - தலை சிறந்தது..
சொகுசா (எசே 1:4,8:2) - துத்தநாகமும், செம்பும் கலந்த ஓர் உலோகம்..
சுணை (எரே 51:27) - கூர்மையான முட்கள் போன்ற கொடுக்கு..
தகசுத்தோல் (யாத் 25:5,26:14) - கடற்பசுவின் தோல், (நீர் நாய், நீர் பசு).
தஸ்திர அறை (எஸ் 6:1) - பத்திரங்கள், அரசு ஆவணங்கள் வைக்கும் அறை.
தர்ப்பணம் (யாத் 38:8) - கண்ணாடி (வெண்கல கண்ணாடி).
தாக்கீது (தானி 6:7,8,12) - ஆணை.
Thanks to: Pastor Beviston.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக