திங்கள், 28 டிசம்பர், 2015

வேதாகம புதையல்

💥வேதாகம புதையல்💥

பழைய ஏற்பாட்டிலேயே மிகப் பழமையான புத்தகமாக சிலர் யோபுவையும் (கி.மு.1500), வேறு சிலரோ முதல் ஐந்து ஆகமங்களையும் (கி.மு 1446-1406) குறிப்பிடுகின்றனர்.
பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து ஆகமங்களையும் எழுதியது மோசே. இவற்றை எபிரேய மொழியில் தோரா (Torah)என்பர். இது தான் யூதர்களின் புனிதப் புத்தகம். நாம் பஞ்சாகமம் என்கிறோம். Pentateuch என்று ஆங்கிலத்திலே கூறுகின்றனர்.

• வேதாகமம் ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பிய கண்டங்களை மையமாக கொண்டுள்ளது. 66 புத்தகங்கள், 40 ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். 1600 வருட இடைவெளியில் எழுதப்பட்டது. எபிரேயம், கிரேக்கம், அராமிக் மொழிகளில் ஆதியில் எழுதப்பட்டது. கிறிஸ்துவை நோக்கியே எழுதப்பட்டுள்ளதை அறியலாம்.

• பழைய ஏற்பாட்டில் மிக சமீபத்தில் எழுதப்பட்ட புத்தகம் மல்கியா.இது எழுதப்பட்ட காலம் கி.மு 400.
புதிய ஏற்பாட்டின் மிகப் பழமையான புத்தகமாக கருதப்படுவது யாக்கோபு. இது கி.பி 45-ல் எழுதப்பட்டது.
புதிய ஏற்பாட்டில் சமீபமாய் எழுதப்பட்ட புத்தகம் வெளிப்படுத்தின விசேசம், இது கி.பி 95-ல் எழுதப்பட்டது.

• புதிய ஏற்பாட்டிற்க்கும் பழைய ஏற்பாட்டிற்க்கும் இடைப்பட்ட காலம் 400 ஆண்டுகள். கடவுளின் குரல் அப்போது இல்லை.

• எஸ்ரா 6 -க்கும் 7-க்கும் இடையே அந்த காலகட்டத்திலே வாழ்ந்த கன்பூசியசும் புத்தரும் மரித்துப் போனார்கள்.
(கிமு 516-458)

• சங்கீத புத்தகத்தில் ஒரு ஹாட்ரிக் சாதனை உண்டு. வேதாகமத்தின் மிகச் சிறிய அதிகாரம் சங்கீதம் 117, நடுவான வசனம் சங்கீதம் 118-ல் உள்ளது. மிக நீளமான அதிகாரம் சங்கீதம் 119.
நடுவான வார்த்தை கர்த்தர் என அமைந்து விட்டது.

• சங்கீதம் 21 கடந்த காலத்தையும், 22 சங்கீதம் நிகழ்காலத்தையும் 23 சங்கீதம் எதிர்காலத்தையும் குறிப்பதை படித்து உணரலாம்.

• சாலமோன் ஒரு தீர்க்கதரிசனத்தை மாத்திரம் உரைத்துள்ளார்.

• II இராஜாக்கள் 19 -ம் அதிகாரமும் ஏசாயா 37-ம் அதிகாரமும் பிரதி எடுத்தது போல் ஒரே மாதிரியானவை.

• I கொரிந்தியர் 13-ம் அதிகாரத்தை “அன்பின் அதிகாரம்” என்றால், எபிரெயர் 11-ம் அதிகாரத்தை “விசுவாசத்தின் அதிகாரம்” எனலாம்.

• வேதாகமத்தில் பாட்டி என்கின்ற உறவுமுறை குறித்து ஒரே ஒருமுறைதான் குறிப்பிடப்பட்டுள்ளது.
(II தீமோத்தேயு 1:5.)

• வேதாகமத்தில் மிக அதிகமாக பேசப்படும் விலங்கு ஆடு. நாய்கள் பற்றி 14 முறையும் சிங்கத்தை குறித்து 55 முறையும் குறிப்பிடபட்டுள்ளது. 133 வகையான விலங்குகள் குறிக்கப்பட்டுள்ளன.
வேதாகமத்தில் பூனை பற்றிய குறிப்பு ஒருமுறை கூட இல்லை.
கழுதை பேசிய நிகழ்ச்சி கர்த்தரின் நகைச்சுவை உணர்வு என்று பலர் எழுதியிருந்தாலும் உலகில் அவர் படைத்த எல்லோரும் பேசுகிறார்கள் என்பதுதான் உண்மை. வெ.விசேசத்தில் எக்காளம் பேசுவதால் சொல்ல முடிகிறது.

• வேதாகமத்தின் படி மிக அதிகமான நாட்கள் பூமியில் உயிரோடு வாழ்ந்தவர் மெத்தூசலா. இவர் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம் வாழ்ந்தார்.  (ஆதி:5:27)

• கர்த்தரோடு சஞ்சரித்தவர்கள்
(Walk with God)ஏனோக்கும் நோவாவும்.  பெரும்பாலான தீர்க்கதரிசிகளின் இறப்பு வேதனை மிகுந்தது. சில தீர்க்கதரிசிகள் சமாதானத்தோடே மரித்தனர், உதாரணமாக டேனியல், நாத்தான், செப்பானியா, மல்கியாவை சொல்லலாம்.

• இருவர் வேதாகமத்தின் படி மரிக்கவேயில்லை.ஒருவர் ஏனோக்கு (ஆதி:5 :22-24). இன்னொருவர் எலியா (IIஇராஜா:2:11). இவ்விருவரும் உயிரோடிருக்கும் போதே தேவனால் பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்கள்.

• வேதாகமத்தில் மிக பராக்கிரமசாலியான மனுஷன் சிம்சோன்.
மிக ஞானியாக திகழ்ந்தவர் சாலோமோன். மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தவர் மோசே.(எண்:12:3)
கர்த்ருக்கு பிரியமானவன் தாவீது. ( 2 சாமுவேல்
மிகச் சிறந்த வீரனாக திகழ்ந்தவர் கிதியோன். தேவ உதவியோடு 135,000 மீதியானியர்களை வெட்டிப்போட்டவன்.

• அதிக மனைவிகளையும், மறுமனையாட்டிகளையும் கொண்டிருந்தவர் சாலமோன் இராஜா.700 மனைவிகளையும் 300 மறுமனையாட்டிகளையும் கொண்டிருந்தார்.

• வேதாகமத்தில் மிக உயரமான மனிதனாக வருபவன் கோலியாத். ஒன்பதரை அடி உயரம். குள்ளமான மனிதனாக வர்ணிக்கப்பட்டவர் சகேயு.

• எபிரேயன் என வேதாகமத்தில் முதன் முதலில் அழைக்கப்பட்டவர் ஆபிரகாம். எபிரேயர்கள் முதன் முதலாக யூதர்கள் என அழைக்கப்பட்டது
II இராஜாக்கள்:16:6-ல்.

• கிறிஸ்தவர்கள் அல்லது கிறிஸ்தவன் எனும் சொல் வேதாகமத்தில் மொத்தம் மூன்று இடங்களில் மட்டுமே குறிக்கப்பட்டுள்ளது. அப் 11:26, 26:28 மற்றும்
I பேதுரு:4:16

• எபிரேயத்தில் இயேசுவை Yeshua என்பதுதான் பிதா இட்ட பெயர். தமிழ் உச்சரிப்பு அதே மாதிரி இருக்கும்.
கிரேக்க மொழியில் Jesous என்றும் ஆங்கிலத்தில் Jesus என்றும் வழங்குகின்றனர். கிரேக்க மொழி வழக்கில் இல்லை. மலையாளத்தில் യേശ (Yeshu),  மராட்டியில் Yeshu, தெலுங்கில் Yesu, கன்னடத்தில் Yesu, இந்தியில்
Yisu என அழைக்கின்றனர். தமிழ் உச்சரிப்பில் ஏசு என்று பொதுவாக உலகம் முழுதும் அழைக்கப்பட்டாலும், ஜீசஸ் என ஆங்கிலத்திலும், சில மொழிகளிலும் இயேசு அழைக்கப்படுகிறார். எம்மொழியிலும் நம் ஜெபத்தை கேட்கிறவர் கர்த்தர்.

• வேதாகமத்தில் அந்திக்கிறிஸ்து எனும் வார்த்தை யோவான் சீஷனால் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர் நான்கு முறை இந்த வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். மூன்று முறை  I யோவானிலும், ஒருமுறை II யோவானிலும் வருகிறது. வெளிப்படுத்தின விசேசம் புத்தகத்தில் அந்திக்கிறிஸ்து எனும் வார்த்தை பயன்படுத்தப் படவேயில்லை.
கள்ளத்தீர்க்கதரிசி என்ற வார்த்தை 4 சுவிசேசங்களிலும் வெ. விசேசத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

• புதிய ஏற்பாட்டின் அதிகமான புத்தகங்களை எழுதியது அப்போஸ்தலனாகிய பவுல். இவர் எழுதிய புத்தகங்கள் மொத்தம் 14 .

• எஸ்தர் 8: 9 தான் நீளமான வசனம்,  குறைவான வசனம் :

யோவான் 11: 35
” இயேசு கண்ணீர் விட்டார்.”

• நீளமான வார்த்தை:
   ஏசாயா 8: 1
” மகேர் – சாலால் – அஷ் – பாஸ் ”

• பைபிளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஜான் வொய்கிளிப் முதன்முதலில் முயற்ச்சித்தார், அதை 1338 ல்
ஜான் புர்வே நிறைவு செய்தார்.

• உலகில் முதன்முதலாக 1450 ல் குட்டன்பெர்க் அச்சகத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தகம் பைபிள்தான். பைபிள் அதிகாரங்களாகவும் வசனத்திற்க்கு எண்கள் போடப்பட்டும் 1560 ம் ஆண்டு வெளிவந்தது ஜெனிவா பைபிள் பதிப்பில்தான்.

• அமெரிக்கா அச்சகத்தால் 1663 ம் ஆண்டில் இந்திய மொழியில் பைபிள் அச்சடிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் முதன்முதலாக தமிழில் அச்சடிக்கப்பட்ட புத்தகம் பைபிள் ஆகும்.

• பைபிள் உலகில் உள்ள 1200 மொழிகளில் முழுவதுமாகவோ பகுதியாகவே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
உலகில் அதிகமாக விற்பனையாகும் புத்தகமும் பைபிள்தான்.

• ஒரு சாதாரண மனிதன் 70 மணி நேரத்தில் பைபிளை தொடர்ந்து படித்து முடித்து விடலாம்.

• ஒரு நாளைக்கு 3 அதிகாரம் – ஞாயிற்றுக் கிழமை 5 அதிகாரமாக படித்தால் ஒரு வருடத்தில் படித்து விடலாம்.

• ஒரு நாளைக்கு 14 அதிகாரம் படித்தால்
3 மாதத்தில் படித்து விடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...