செவ்வாய், 1 நவம்பர், 2022

advent Christian church ponmar Christmas song 2024


பிறப்பின் பாடல்கள் - 2024

பாடல் - 1

காட்டுக்குள்ளே பாட்டு சத்தம் கேட்குதே

கான மேய்ப்பர் கூட்டம் மகிழ்ந்தாடுதே 

இயேசு பிறந்தார் பிறந்தாரென்று தூதர் பாடிட வானம் மகிழுதே 

தாவீதின் ஊரில் தொழுவிலே தரணியை மீட்கவே 

தாழ்மையின் ரூபமாய் மனுவாய் இரட்சகர் பிறந்தார் 


1. வானத்திலே கேட்ட அந்த பாட்டு 

 வாழ்வினையே மாற்றும் புதுப்பாட்டு 

வானதூதர் பாடியதைக் கேட்டு  

விரைந்தாரே மந்தையினை விட்டு


2. நமக்கொரு பாலகன் பிறந்தார் 

நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் 

தீர்க்கன் உரைத்தானே அன்று 

திருப்பாலன் பிறந்தாரே இன்று 


3. இம்மானுவேலன் பிறந்தார் 

ஜெயமனுவேலன் பிறந்தார் 

பாரெங்கும் இச்செய்தி கூறுங்கள் 

புறப்பட்டு செல்வோம் வாருங்கள்.

பாடல் -  2

புவி ஆளும் மன்னவன்

புல் மேடையில் தவழ்கிறார்

பார் மீட்டிடும் கதிரவன்

கந்தை துணிகளில் தவழ்கிறார்


வீணை மீட்டி பாட்டுப் பாடுங்கள்

கைகள் சேர்த்து தாளம் கொட்டுங்கள்


1. நமக்கொரு பாலகன் உலகில் வந்தார்

நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2 (நமக்கொரு பால)

கர்த்தத்துவம் என்றும் அவர் தோளில் இருக்கும்

ராஜாரீகம் என்றும் அவர்க்குரியதாகும் – புவி

2. ஈசாயின் அடிமரம் துளிர்த்ததுவே

யாக்கோபில் ஓர் வெள்ளி உதித்ததுவே -2 (ஈசாயின் அடி)

அன்று சொன்ன தீர்க்கன் மொழி நிறைவாகுதே

ஆனந்தத்தால் உலகமே மகிழ்ந்திடுதே – புவி


பாடல் - 3

கைகள் தாளம் தட்டிடுதே 

இயேசு பிறந்தார்

என் கால்கள் நடனம் அடிடுதே 

பாலன் பிறந்தார்

உன்னை என்னை மீட்டிட மீட்பர் பிறந்தார்

உலகத்தை இராட்சிக்க இரட்சகர் பிறந்தார்


கடும் குளிரினில்,  மாட்டுதொழுவத்தில்

ஏழை கோலமாய் மன்னன் பிறந்தார்

Happy -2 chirsmas ohh ohhh merry-2 chirsmas -2


1.துன்பங்கள் கடந்து துயரங்கள் தகர்க்க

விடியலென இயேசு வந்துவிட்டார்

விண்ணுலக மைந்தன் மண்ணுலகை ஆள

மாட்டுதொழுவத்தில் பிறந்திட்டார்

நான் போகிறேன் என் நேசரை காணவே

எந்தன் மீட்பரை உலகெங்கும் பறைசற்றுவேன்... 


2.தொழுவம் ஒன்று தொழுகை பெரும் படி

இயேசு பாலன் பிறந்திட்டார்

சர்பம் தந்த பாவத்தை போக்க,  ஆதவன் இன்று தோன்றினார்

நான் போகிறேன் என் நேசரை காணவே

எந்தன் மீட்பரை உலகெங்கும் பறைசற்றுவேன்…


பாடல் - 4

பரலோக தேவன் பாரில் பிறந்தார்

புகலவொன்னா புதுமை

உலகில் அவர் பெயர் கேட்டிட இனிமை

உன்னதத்தில் மகிமை


மகிமை5 பிறந்தார் 5

1. பரத்தில் தூதர் பாடிட

பாரில் தீர்க்க தேடிட (2)

அலகை அதிர்ந்து நடுங்கிட

அவனியோர் மனம் மகிழ்ந்திட (2)


2. புவியை ஈர்த்திடும் காந்தமாய்

புல்லனையில் மிக சாந்தமாய் (2)

எதையும் வென்றிடும் வேந்தனாய்

ஏதும் அறியாதோர் பாலனாய் (2)


3..நமது உள்ளம் யாவிலும்

நாதர் இயேசு பிறந்திட (2)

அர்ப்பணிப்போம் நம்மையே

ஆண்டவர் இயேசுவுக்கென்றுமே (2)


பாடல் - 5

முடியாததை முடியும் என்று சொல்ல வந்தாரே

உனக்குள்ளே பல சாதனை செய்ய வந்தாரே – 2

அந்த உத்தம புத்திரனை நீ பாடிக்கொண்டாடு

நம்ம சத்தியர் பிறந்ததை நீ ஆடிக்கொண்டாடு – 2


1.உனக்குறித்ததை தரவந்த இயேசு வாழ்கவே

மானிடத்தில் உயிர்தந்த இயேசு வாழ்கவே – 2

(மானிடத்தை மீட்கவந்த இயேசு வாழ்கவே – 2)


2.மனமகிழ்ச்சியை தரவந்த இயேசு வாழ்கவே

ஆறுதலைத் தரவந்த இயேசு வாழ்கவே – 2


3.தேவமைந்தன் புகழைப் பாடி ஆர்ப்பரிப்போமே

தேவபாலன் பிறந்தநாளில் பாடிடுவோம் – 2


பாடல் - 6

வந்தாச்சு வந்தாச்சு கிறிஸ்துமஸ் வந்தாச்சு

பெத்லகேமில் மாட்டு தொழுவில் இயேசு பிறந்தாச்சு


சந்தோஷம் உற்சாகம் எங்கும் நிறைஞ்சாச்சு

தேவன் நம்மை மீட்ட நாள்தான் கிறிஸ்துமஸ் என்றாச்சு

ஜாலியாக ஆடி பாடி இயேசு பாலனை போற்றிடுவோம்

ஒன்றை சேர்ந்து நாமும் இன்றே

கிறிஸ்துமஸ் நாளை கொண்டாடிடுவோம் – வந்தாச்சு


1.குளிரும் பணியும் வீச இயேசு பாலன் தூங்க

பாட்டு பாடி தூங்க வைக்க அங்கே செல்வோம் வாங்க

அன்னை மரியின் மடியில் அன்பாய் தவழும் இறைவன்

நம்மை போல பிள்ளை பாரில் பூத்த முல்லை

நாமும் சென்று நெஞ்சம் மகிழ அவரை பணிவோமே – ஜாலியாக


2.அழகையே உருவாய் வந்த அன்பே இயேசு பாலன்

அருளின் ஒளியை ஆசிபெற இங்கே ஓடி வாங்க

சிட்டுக்குருவி போல பட்டாம் பூச்சி போல

பறந்திட சிறகுகள் தருவார் அதிசயமான பாலன்

நாமும் சென்று நெஞ்சம் மகிழ அவரை பணிவோமே – ஜாலியாக


பாடல் - 7

நட்ட நடு ராத்திரியில

கொட்டும் பனி சாரலிலே

மொட்டு போல பூத்தாரே இயேசு சாமி

மாட்டு கொட்டகையில் உதித்தாரே இயேசு சாமி -2


மெட்டு கட்டி பாடுவோம்

கை தட்டி ஆடுவோம் -2

கஷ்டமெல்லாம் போக்கிடுவார் இயேசு சாமி

நம்ம இஷ்டம் போல வாழ வைப்பார் ஓன்று கூடி – கஷ்ட


1.ஏழைகளை நேசிக்க ஏழையாக

வந்த சாமி நம்ம சாமி – நம்ம இயேசு சாமி

எல்லோருக்கும் வாழ்வு தர மனுஷனாக

வந்த சாமி நம்ம சாமி – நம்ம இயேசு சாமி – 2


நீதி நேர்மை அன்பு கொண்ட இறையாட்சியை

மண்ணில் படைத்திடவே வாழ வந்தார் இயேசு சாமி -2


காலம் பொறந்திடும் நேரம் வந்திடும்

நல்ல காலம் பொறந்திடும்

நல்ல நேரம் வந்திடும்

அன்பு அமைதி ஆண்டவரின்

ஆசி கிடைச்சுடும் – நட்ட நடு


பாடல் - 8

விண்ணிலே மேளம் முழங்க

மண்ணிலே மாந்தர் மகிழ 

தேன் நிலா கானம் பாடிட

மன்னவன் பிறந்திட்டார்


மானிடர் பாவம் போக்கிட 

பாரிலே மீட்பு பெருகிட

பரலோக வாசல் திறந்திட

இரட்சகர் உதித்திட்டார்


தேவ பாலன் இயேசு பிறந்திட்டார் 

அடிமைக் கோலம் எடுத்திட்டார்

எங்கும் நற்செய்தி கூறியே 

மீட்பரை கொண்டாடுவோம்


Happy Christmas Merry christmas  Happy Christmas

1.தூதர் சேனை பாடிட 

மேய்ப்பர் கூட்டம் தரிசிக்க 

ஞானிகள் எங்கும் தேடிட 

விண்ணின் மேன்மை தோன்றினார். பாடுவோம்.... (2)

மீட்பின் கீதம் பாரில் தொனிக்குதே..


2.சர்வ லோகம் ஆள்பவர் 

கந்தைக் கோலம் எடுத்திட்டார்

மாட்டு தொழுவில் தாழ்மையாய்

கன்னி மடியில் தவழ்கிறார்... பாடுவோம்..(2)

அளவிட முடியா அன்பின் செயலிதே..


பாடல் - 9

பாடுங்கள் புது கானங்கள்

கேளுங்கள் சுக ராகங்கள் -2

வின்னின் வேந்தன் மண்ணில் இன்று

அன்னை மரியின் மகவாய் பிறந்தார்-2


ஆ ஆ ஆஹா Happy christmas 

ஆ ஆ ஆஹா Merry christmas 


1. ரட்சகராய் மீட்பராய்.  பனிவிழும் இரவிலே

மாமரி மடியிலே.  மகவாய் பிறந்திட்டார் -2

பாவ இருள் நீக்கிட இயேசு பாரினிலே வந்து உதித்திட்டார்


2. மேய்ப்பர்கள் கானம் பாட  மண்ணில் வந்துதித்தார்

தூதர்கள் துதி பாட  துயராய் பிறந்திட்டார்

சமாதான காரணர்  ஆச்சர்யமான கர்த்தர் இவர்


பாடல் - 10

புல்லின் நுனியில் பனித்துளி

காத்திருந்த மணித்துளி

வாழ்வில் வந்த பேரொளி

வாழ வைத்த விண்ணொளி


அல்லேலூயா அல்லேலூயா

ஓசன்னா ஓசன்னா அல்லேலூயா


1.விண்ணில் பூத்த தாரகை, பாதை காட்ட வானிலே

ஞானம் கொண்ட மூவரும், தேடி பணிந்தே தொழுதனர்


2.பெத்லகேம் என்னும் ஊரிலே, சத்திரத்தில் பிறந்திட்டார்

முன்னனையில் பாலனாய், தேவ மைந்தன் தோன்றினார்


3.மரண பயமும் தீர்ந்ததே,  மானிடர் வாழ்வு மலர்ந்ததே

இயேசு உலகில் பிறந்ததால்,  எல்லையில்லா மகிழ்ச்சியே


பாடல் - 11

வான் வெள்ளி பொன்மான் வெள்ளி பொன்மான் வெள்ளி வானில் 

தைய தக்க 3 தகதிமி தோம் -2

பெத்லகேமிலே ராஜகுமாரனை பணிந்திட வாரீர் -2


1.இந்த ராத்திரியில்  வரு புவியிலே   பனிப்பொழியும் வேளையில 

வான் வெள்ளி வழியை காட்டிடுதே  பாலனை பணிந்திட வாரீர் 


2.ஆட்டிடையர்கள் பிரவேசித்திடவே அதிவேகமாய் செல்கின்றார் 

வானோர்கள் (தூதர்கள்) வாழ்த்துக்கள் பாடிடவே  பாலனை பணிந்திட  வாரிர்  


3.வந்த ஞானிகளும் மூவர் சேர்ந்துமே  பல பல பரிசுகள் படைக்கின்றனர் 

ஆனந்த பாடல்கள் பாடிய நாம்   பாலனை பணிந்திட வாரீர்


பாடல் - 12

தேவ ராஜ்ஜியத்தை இந்த உலகில் ஸ்தாபிக்க

இயேசு பாலகன் மரியின் மகவாய் புவியில் தோன்றினார்


பரலோக பரிபூரணம்  மனுக்குலம் ருசித்திடவே

தேவனே மனிதனாயினார்


1. பாவம் அறியா இயேசுவை தேவன் பாவமாக்கினார் 

நீதி அறியா நம்மை தேவன் நீதியாக்கிட

நீதிமானாய் மாற்றி என்னை,  பிள்ளையாக ஏற்றுக்கொண்டார்

ஆனந்தம் ஆனந்தமன்றோ


2. பெலவினமாய் இருக்கும் போதே பெலமுள்ளவன் நான்

பெலவீனன் தன்னை பெலவான் என்று சொல்லச் சொன்னாரே

இயேசுவின் தழும்புகளால்,  முற்றிலும் குணமடைந்தேன்

ஆனந்தம் ஆனந்தமன்றோ


3. மெய்யாகவே இயேசு எனது பாவ சாபத்தை

சுமந்து தீர்த்தார் சிலுவையிலே முற்றிலுமாக

நித்திய ஜீவன் தந்தார், ஆக்கினை தீர்ப்பு இல்லை

ஆனந்தம் ஆனந்தமன்றோ


பாடல் - 13

விண்ணின் ராஜன் சிம்மாசனம்

விட்டிறங்கி எங்கு சென்றார்

ஓ.. நமக்காக பாலகனாய்

யூதேயாவில் பிறந்திடவோ - 2


1. அருளே! அருள் நிறை ஜோதியே,  அருமை பாலகனே - 2

அருணோதயமாய் வந்தீர், இருள் நீங்கும் உந்தன் வரவால்


2. முன்னுரை படியே மன்னவா,   பிறந்தீர் இவ்வுலகில் - 2

வருவாயே இயேசு தேவா,  பாவம் நீங்கும் உந்தன் தயவால் - 2


3. ஆச்சரியமான ஒளியே,  அதிசயமானவரே - 2

சமாதான பிரபுவாய் வந்தீர்,  சாபம் நீங்கும் உந்தன் கிருபையால்


பாடல் - 14

வானில் வான் தூதர் வாழ்த்துகள் பாடிட

பூவில் மாந்தர்கள் யாவரும் மகிழ்ந்திட

விண்ணோர் மண்ணோர்  இசைந்திட - விந்தை

பாலனாய் மண்ணில் பிறந்தார்


Wish you a Happy Happy Christmas!

Merry Merry Christmas!

Happy Christmas to all!

1. இம்மானுவேலனாய் நம்மோடிருக்க

இப்புவி மீதினில் உதித்த பாலன் 

ஈடு இணையில்லா பாலனை

இன்றும் என்றும் வாழ்த்தி பாடிடுவோம்


2. மேன்மையை துறந்த மேசியா பாலன்

தாழ்மையை தரித்து அவதரித்தார் 

என்னையும் மேன்மையாக்குவார்

என்னை என்றும் வழிநடத்திடுவார்


பாடல் - 15

மாமன்னன் மானிடரை மீட்க – மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்

மாசற்ற மாணிக்கம் மகிமையைத் துறந்து – மண்ணிலே பிறந்தார்

நம் மனதிலே பிறந்தார்



மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் எண்ணத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் உள்ளத்தில்

மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் இல்லத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் வாழ்க்கையில்


1.சிறுமையானவரே எளிமையானவரே

தனிமையானவரே கைவிடப்பட்டவரே

உங்கள் விடிவெள்ளியான யேசு பெத்தலகேமில் பிறந்திருக்கிறார்


2.துயரப்படுவரே துன்பப்படுவரே

கவலைப்படுபவரே கண்ணீர் வடிப்பவரே

உங்கள் ரட்சகரான யேசு தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்


பாடல் - 16

கிறிஸ்மஸ் வந்தால் கொண்டாட்டமே

ஆடிபாடி மகிழும் நாட்களே

ஒன்றாக கூடியே கரங்களை தட்டியே

இயேசுவை கொண்டாட வாங்கலே -லா லா


1. வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே

இயேசு இன்று பிறந்ததாலே

நம் வாழ்க்கை மாறுமே புது வழி திறக்குமே

இயேசு இங்கு வந்ததினாலே


2. கொடிய வியாதி பறந்து போகுமே

யெகோவா ரஃபா என்னை தொடுவாரே

விடுவிக்கும் தேவனே மனிதனாக வந்தாரே

என் வாழ்வில் பயமில்லையே


பாடல் - 17

இம்மானுவேல் இம்மானுவேல் என்னோடு இருப்பாரே

1. பெத்லகேமில் பிறந்தவர் அவர்

பாலகனாய் ஜெனித்தவர் அவர்

இம்மானுவேல் என்னோடு இருப்பாரே

உலகத்தின் ராஜா அவர் தூதர் போற்றும் தேவனவர்


2. மகிமை நிறைந்த தேவனவர்

மகத்துவத்தின் கர்த்தரவர்

இம்மானுவேல் என்னோடுயிருப்பாரே

சமாதானபிரபு அவர் தன்னை தரும் தகப்பனவர் 

இம்மானுவேல் என்னோடுயிருப்பாரே


3. மனிதனாக பிறந்த அவர்

பரலோகத்தை திறந்த அவர்

இம்மானுவேல் என்னோடுயிருப்பாரே

மாம்சமாக வந்த அவர் தமக்குள் வாழும் இயேசு அவர்

இம்மானுவேல் என்னோடு இருப்பாரே


பாடல் - 18

சந்தோஷமான ஒரு செய்தி வந்தாச்சு 

சங்கீதம் பாட ஒரு காலம் வந்தாச்சு 

மன்னன் இயேசு மண்ணில் வந்தார் 

விண்ணின் மைந்தன் வந்துதித்தார் 

நிலவு இரங்கி மண்ணில் வந்து தவழ்வது போல 

உலகில் வாழும் குழந்தையாக இயேசு வந்தாரே


1.பனிமழை பூமியெங்கும் தூவும் வேளையில் 

பாமரர் ஆயர் எங்கும் தூங்கும் காலையில் 

தேவதூதர் வானிரங்கி துதிகள் சாற்றிட 

ஸ்தோத்திர புகழ்ச்சி பாட வந்துதித்தாரே


பாடல் - 19

கிறிஸ்மஸ் வந்தாலே கொண்டாட்டம் தான்

புதுபாட்டு நாம் பாட கும்மாளம் தான் 

பாட்டு பாடலாம் ஆட்டம் போடலாம் 

கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடலாம்


1.ஊரெங்கும் கொண்டாட்டம் உலகெங்கும் உற்சாகம்தான் - இந்த 

வாண வேடிக்கை ரொம்ப ஜோரு ஜோருதான் 

தூதர் பாடிடும் கிறிஸ்மஸ் பாட்டு சூப்பர்தான் 

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான் - 2


2.வீதியோரம் கிறிஸ்மஸ் தாத்தா 

ஜாலியாக வாரார் பாரு 

கேரல் ரௌண்டில் பாடும் பாட்டை கேளுங்க 

ஆட்டம் போட்டிடும் நண்பர் கூட்டம் கூட்டமாய் 

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான் - 2


பாடல் - 20

கிழக்கு திசையிலே அந்த சிவந்த வானத்திலே

மாலை பொழுதிலே அந்த மயங்கும் வேளையிலே   - ஓய்

அழகான வெள்ளி ஒன்று செல்லுதே

அது மன்னன் இயேசு பிறந்தசெய்தியை சொல்லுதே


1. விந்தை காணவே வந்த ஞானியார் 

கந்தை துணியிலே மன்னனைக் கண்டார் 

சிந்தை களிகூறவே உள்ளமெல்லாம் மகிழவே 

காணிக்கைகள் தந்து அவர் பாதம் பணிந்தார் 


2.சாந்த ரூபனே சாக ஜீவனே

சாரோன் ரோஜாவே லீலிபுஷ்பமே 

மின்னுகிற நட்சத்திரமாய் ஒளிதரும் ஜோதியாய் 

உண்மை சொல்ல உலக வாணில் பயணம் போகுதே


பாடல் - 21

ஸ்திரியின் வித்தாய் வந்தவர்

தாவீதின் வேரானவர்

தீர்க்கன் சொன்ன மேசியா

வாக்குத்ததமானவர் - 2


பாடுவோம் கொண்டாடுவோம்

இயேசு பிறந்தாரே - 4


1.நம்மை மீட்க மண்ணிலே

தேடி வந்த இரட்சகர்

என்றும் நம்மில் வாழவே

இம்மானுவேலானாரே - 2


2.சாபங்கள் யாவும் போக்கவே

வியாதிகள் எல்லாம் நீக்கவே

என்றும் மகிழ்ந்து வாழவே

இரட்சகராக பிறந்தாரே - 2


3.கரங்களை தட்டி பாடுவோம்

கவலையை மறந்து துதிப்போம்

என்றும் நம்மோடிருப்பவர்

சகலத்தையும் புதிதாக்குவார் -2


பாடல் - 22

அந்த மாலை காற்றினில் கீதம் 

அது தூதர்கள் பாடிடும் கீதம் 

அதைக் கேட்டு மகிழ்ந்திட நாமும் 

அந்த முன்னனை நோக்கி செல்வோம் 


1.பொன்மாளிகை உமக்கங்கு இல்லை

பசும்புல்லணைதான் பஞ்சு மெத்தை

அன்பு பாலனின் புன்னகை கண்டு 

மண மாளிகை யார் தரவில்லை


பாடல் - 23

வெள்ளி ஒன்று 

புது வெள்ளி ஒன்று வானத்திலே தோன்றியதே 

அது நல்ல செய்தி ஒன்று கூறிடுதே 

யூதருக்கு ராஜா பிறந்தார் என்று 

யூகித்தார் சாஸ்திரிகள் உண்மை அதே 


1.தங்க கட்டி கொண்டு வரலாமா 

தங்க பாலனுக்கு பரிசாகத் தரலாமா 

வாரும் வாரும் அதை தாரும்  தாரும் 

மிக நல்ல பரிசு அதுவே 

மங்கா புகழ் மன்னவனையே 

சங்கீதம் பாடி தொழுதிடுவோம் 


2.தூபவர்க்கம் கொண்டு வரலாமா 

தூய பாலனுக்கு பரிசாக தரலாமா 

வாரும் வாரும் அதை தாரும்  தாரும்

மிக நல்ல பரிசு அதுவே 

மங்காப் புகழ் மன்னவனையே 

சங்கீதம் பாடி தொழுதிடுவோம்


பாடல் - 24

பெத்தலையிலே சத்திரத்திலே

மன்னன் இயேசு பிறந்தார்2

அல்லேலூயா அல்லேலூயா 2

அல்லேலூயா 3ஆமென்


1.வானாதி வானங்களே போற்றிப்பாடுங்கள்

தூதர் சேனைகளே துதித்து பாடுங்கள் 2

துக்கம் இல்லை இனி துயரம் இல்லை

என்றென்றும் ஆனந்தமே 2


2.வானத்திலே நட்சத்திரம் வழி காட்டுதே

ஞானி மூவர் தேடி வந்து வனங்கினரே 2

வெள்ளைப்போலம் தூபவர்கம் பொன்னைக் கொடுத்தார்களே


3. தூதர்கள் சேனையெல்லாம் துதி பாடுதே

மேய்பர்கள் செய்தி கேட்டு தேடினரே 2

இயேசுவைக் கண்டு தொழுகின்றாரே

ஆனந்த சந்தோஷமே 2


பாடல் - 25

மரியின் மைந்தனாய் மன்னிலே தோன்றினார் 

மலர்கள் சிரிக்க மனங்கள் களிக்க


பண்பாடும் உள்ளங்களே 

தேவ பாலனை பாடுங்களே பாவங்கள் நீங்கவே


1.தென்றல் காற்று தாலாட்ட

தேடும் அன்பு சீராட்ட

வானத்தின் தலைவன் வையகம் வந்தார்

காரிருள் நீக்கும் பேரொளியாக உலகினில் வந்த ஒளிசுடரே


2.பாலன் வாழ்வு நமக்காக 

பாடும் உள்ளம்உமக்காக

சேவையின் வடிவாய் சிலுவையைத் தாங்கி 

நேர்மையைக் காட்டும் நேர் வழியாக

நெஞ்சினில் வாழும் நாயகணே


பாடல் - 26

துதித்து துதித்து பாடுங்கள்

தேவ பாலனை போற்றுங்கள்

துதி முழக்கம் செய்திடுங்கள்

தூய பாலனை வாழ்த்திடுங்கள்

அல்லேலூயா இறைவன் மனிதனானார்

அல்லேலூயா இயேசு பாலன் பிறந்தார்

ல ல ல ல ல லா. .... ஒ ஒ ஒகோ


1.வானம் பூமி படைத்தவரே

மேன்மை துறந்து பாரில் வந்தார்

ஏழைக்கோலமாய் மாட்டுத் தொழுவினில்

தாழ்மை ரூபமானார்

கன்னிமைந்தனாய் கருணை தேவனாய்

கர்த்தர் இயேசு பிறந்தார்


2.பாவம் சாபம் நீக்கிடவே

பாரில் அன்பு நிலைத்திடவே

குருடர் பார்த்திட, ஊமை பேசிட

முடவர் ஓடியாட

இருளில் வாழ்பவர் ஒளியைக் காணவே

இயேசு பாரில் பிறந்தார்



பாடல் - 27

தேவ புத்திரன் வந்தார் பூலோகத்தில்

ராஜ ராஜன் பாலகனாய் -2

ஆடுவோம் பாடுவோம்

பாட்டுக்கள் நாம் பாடுவோம்

தேவராஜன் …

இந்த பூவில்…

கன்னிமாதாவின் கோமகனாய் -2


1.காத்திருந்த அந்த ஜெனம்

கண்டது ஆச்சர்ரிய விந்தை -2

அன்பு கோண்டவராம் என்

இயேசு ராஜன்

பூலோகம் ரட்சிக்க வந்தார் – 2


2. என்னை தேடி என் தெய்வம்

என்னினில்லானந்தம் தந்து -2

தேவாதி தேவன் என்

இயேசு ராஜன்

இருளில் பேரொளியாய் -2


பாடல் - 28

அன்பே மனித உருவமாய்

அவதரித்தார், நம்மில் பிறந்தார்

என்றும் இம்மானுவேலராய்

தோன்றினார், நம்மில் வாழ்கின்றார்


அவர் நாமம் உயர்த்தி பாடிடுவோம்

அல்லேலூயா அல்லேலூயா (2)

அவர் மகிமையை எங்கும் பறைசாற்றுவோம்

அல்லேலூயா அல்லேலூயா (2)


1.வானத்தில் வெளிச்சம் தோன்றியதும்

அந்த மகிமை இருளை நீக்கியது

நம் வாழ்க்கையின் இருளை நீக்கிடவே

அந்த ஒளியை நமக்காய் தந்தாரே

அவர் அன்பை ருசித்த நாமும்

அந்த ஒளியில் தினமும் வாழ்ந்திடுவோம்


2.நம்மை ஐஸ்வரியனாய் மாற்றிடவே

அவர் ஏழையின் கோலமாய் பிறந்தாரே

மண்ணில் குப்பையாய் இருந்த மானிடரை அவர்

மனிதனாய் நிற்க செய்தாரே

அவர் கிருபை பெற்ற நாமும்

அவர் ராஜ்யத்தை கட்டிட உதவி செய்வோம்


பாடல் - 29

இனிமை நிறைந்த இரவு 

இருளும் குளிரும் உறவு

இறைவன் இயேசு வரவு

இகத்தில் கொண்ட பரிவு 


ஹாப்பி ஹாப்பி கிறிஸ்மஸ் ஹாப்பி ஹாப்பி -4


1.மன்னவன் விண்ணகம் துரந்தவராய்

இந்த மண்ணில் உதித்தார் பாலகனாய் 2

ஏசாயா வாக்கு நிறைவேறும் இன்று

ஈசாயின் அடி மரம் துளிர்த்ததுவே 2


விண்ணில் தூதர்கள் கானம் பாடிட

மண்ணில் மானிடர் அன்புகொண்டிட

தேவன் வானிலே மகிமையாகிட 

பாலன் பிறந்தார்


2.காவினில் பிறந்த பாவமதை

தன் சாவினில் அறுத்து வாழ்வு தர

மெய்பரும்  ஆனார் ஆயரும் காண

மாவேந்தர் இயேசு பிறந்தாரே


பாடல் - 30

ராஜாதி ராஜன் இவர்தான்

புவி வந்தாலும் மன்னன் இவர்தான் 2

மண்மீது சாபத்தை தீர்த்திடவே

மாசற்ற ஜோதியாய் வந்துதித்த

மன்னாதி மன்னவனை வணங்கிடுவோம்


1.கர்த்தாதி கர்த்தனே இளந்தளீரே 

வந்தனம் வந்தனமே

சர்வேச நாதனே சர்குனனே

சுந்தர நாயகனே

உள்ளம் தேற்றிடும் உண்மை நேசனே

இறைமகன் இயேசுவே

மனுகுலம் போற்றும் மகிமையின் நாதன் 

உம்பாதம் பணிந்திடுவோம்


2.அருள் நேசர் வரவால் அகமகிழ்வோம்

அன்புடன் உள்ளத்திலே

அதிகாலை பொழுதில் தொழுதிடவே ஆலயம் சென்றிடுவோம்

வானில் பறவைகள் காணம் பாடிட வினையின் ராகமே

பனித்துளி மின்னும் மலர்களின் வாசம்

இல்லத்தில் புது மனமே


பாடல் - 31

சின்னஞ்சிறு மலரே சித்திரை பூந்தளிரே 

உன்னை அள்ளி அணைப்பேன் 

எந்தன் நெஞ்சுக்குள் வாராயோ 2


1.வானத்தின் மேகமாய் வறட்சியைப் போக்கி ட

மழையென வாராயோ

பாரினை தாங்கிட தீமைகள் போக்கிட அன்பினை தாராயோ 2

தேவனும் நீயன்றோ  எங்கள் தேவனும் நீயன்றோ

தேசங்கள் மீட்டிட பாலனாய் பிறந்த தேவனும் நீயன்றோ


2.விண்ணுக்கு மைந்தனாய் மண்ணுக்கு வேந்தனாய் வந்தவர் நீயன்றோ

கண்ணுக்கு காவியம் விண்ணுக்கு ஓவியம் என்பவதானன்றோ

பாலகன் நீயன்றோ இயேசு பாலன் நீயன்றோ

பாரினில் வாழ்ந்திடும் பாலகர் வாருங்கள் என்றவர் நீரன்றோ


பாடல் - 32

கர்த்தர் பிறந்தார் பாடுங்கள்

கதிரவன் உதித்தார் போற்றுங்கள் 

அல்லேலுயா ஆர்ப்பரிப்போம் 

ஆனந்த நாளை கொண்டாடுவோம் 

பாவவினை உலகினில் நீங்கிடவே 

அதிசய பாலன் இயேசு பிறந்தாரே


1.ஆதாம் ஏவாள் செய்த பாவம் 

அதனாலே வந்த சாபம்

யாவும் நீக்கி வந்ததாலே

யாக்கோபின் ஓர் வெள்ளி உதித்தது வே


2.தீர்க்கன் சொன்ன வார்த்தை எல்லாம் 

இவ்வளவாய் நிறைவேற 

தேவமைந்தன் இயேசு ராஜன் 

தாழ்மையாய்  உலகில் பிறந்தாரே


பாடல் - 33

சின்ன ஊர்தான் அது பெத்தலகேமில் தான் 

மன்னன் இயேசு பாலனாக பிறந்துவிட்டாரு 


1.மாடி இல்ல மெத்தை இல்ல புல்லணை இல்ல 

மன்னன் இயேசு பிறந்துவிட்டார் மாட்டுத்தொழுவில

சொந்தம் என்று சொல்லிக்கொள்ள ஆட்களும் இல்லை 

சொந்தத்தில் வந்துவிட்டார் கவலையே இல்லை


2.சேதி சொல்ல யாரும் இல்ல தேவதூதர் தான் 

வழிகாட்ட யாரும் இல்ல நட்சத்திரம்தான் 

துதிபாடி தூதர் கூட்டம் சூழ்ந்து நிற்கையில

மன்னன் இயேசு பிறந்துவிட்டார் மனு உருவினிலே


பாடல் - 34

கிறிஸ்மஸ் பிறந்ததே 

உள்ளம் மகிழுதே ஆடுவோம் நாங்கள் பாடுவோம் 

இறைமகன் இயேசு இன்று பிறந்தார்


1.இருளில் வாழும் மாந்தர் 

பாவம் போக்கிட ஒளியாய் வந்தார் 

அளவில்லாத மீட்பை நமக்கு அளித்திட தானே பிறந்தார் 

ஆவின் குடியில் மாட்டுத்தொழுவில் 

ஏழை கோலமாய் அவர் வந்தார் 

கந்தைத் துணியில் முன்னணியில் 

கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார்

ஹேப்பி  கிறிஸ்மஸ் மேரி கிறிஸ்மஸ்


பாடல் - 35

குளிர் வாடை வீசும் நேரம் 

நடுவானில் தூதர் கூட்டம் 

மண்ணிலே மேசியா 

பிறந்த செய்தி கூறினார் 


விண்ணில் மகிமை 

மண்ணில் சமாதானம் 

மானுடர் மேல் பிரியமே 


1.மந்தை மேய்ப்பரே புது காணம் பாடுங்கள் 

விந்தை காணவே விரைந்தேகி செல்லுங்கள் 

மேசியா இயேசு பிறந்தார் 

மேன்மைகள் யாவும் துறந்தார் 

மாட்டுத்தொழுவில் தவழ்கிறார்


பாடல் - 36

பணிவிழும் இரவினில் இயேசு  

மண்ணில் மனிதனாய் இறைமகன் இயேசு 

வானத்தில் விண் தூதர் பாட 

அந்த காணத்தில் விண்மீன்கள் ஆட 


1.கனிவாக மண்ணோடு பாட 

எங்கும் குளிர் வாடை இதமாக வீச

சுகமாக ராகங்கள் சேர 

ஓடி வா தென்றலே 

மலரே மலரே மலர்ந்திடு 

மகிழும் மனமே தந்திடு


2.ஒளி வீசும் அழகான தோற்றம் 

அவர் கேட்கின்றார் உந்தன் மனமாற்றம் 

எண்ணத்தில் வேண்டாம் தடுமாற்றம் 

ஓடி வா நெஞ்சமே 

பரிசுத்தர் பாதத்தில் வந்திடு 

பணிவுடன் உள்ளத்தை தந்திடு


பாடல் - 37

இசை மழையில் தேன்கவி பொழிந்தே

கர்த்தர் ஜெனித்தார் அன்பாய் பாடுங்கள்

 

1.வான்மலர்தான் இப்புவியிலே 

மலர்ந்திடதே நம் வாழ்வில் இன்று 

நமக்காய் பிறந்தார் பாசம் கொண்டு 

வாழ்வின் மீட்பின் பாதையிலே


2.மாசற்றவர் நம் வாழ்வினிலே

மகிமை என்றே கண்டோமே இன்று 

விடிவெள்ளியாகவே தேவபாலன் 

தாழ்மை தாங்கி அவதரித்தார்


பாடல் - 38

சத்திரத்தை தேடி வாருங்க 

சந்தோஷமாய் ஆர்ப்பரித்து ஒன்று கூடுங்க 

சாலேமின் ராஜனையே பார்க்க வாருங்கள

மேலாக ராஜன் இவர் மேன்மை விட்டு வந்தாரே 

பூலோக மாந்தரின் பாவம் நீக்க வந்தாரே 

மகிமையின் ராஜனிவர் மகத்துவ தேவனிவர் 

மண்ணின் மீட்பரிவர் மனுவுருவானார்


1. காட்டுக்குள்ளே பாட்டு கேக்குது 

கேட்டு கேட்டு ஆயர் கூட்டம் பாட்டு பாடுது 

ஆடுகளும் துள்ளி துள்ளி தலையை ஆட்டுது 

வாருங்கள் மேய்ப்பரே நாம் பெத்தலகேம் செல்வோம் 

வானம் விட்டு பூமி வந்த மேசியாவை காணுவோம் 

பெத்தலையின் சத்திரத்திலே  மாடடையும் குளிரினிலே 

மரியன்னை மடிதனிலே  மன்னனை கண்டார்


2. உன்னை மீட்க இயேசு வந்தாரே 

பாரிலே என்னை மீட்க இயேசு வந்தாரே 

பாரிலே நம்மை மீட்க இயேசு வந்தாரே 

மாசில்லா பாலனை போற்றி போற்றி பாடுவோம் 

மாறிடா அன்பினை உலகமெங்கும் சொல்லுவோம் 

இவரே இரட்சகராம் இவரே வல்லவராம் 

இவரே பரிசுத்தராம் என்றே பாடுவோம்


பாடல் - 39

 ஆராரோ ஆரிரரோ ஆராரோ 

ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ


ராசாதி ராசா எங்க மகராசா 

இந்த ஏழைகளை ஆளவந்த இயேசு ராசா

மனசெல்லாம் சந்தோஷம் பொங்குதுங்க

சின்னஞ்சிறுசெல்லாம் சங்கீதம் பாடு துங்க


1. பூ போல முகமுங்க அத 

பார்த்தாலே அழகுங்க 

சகிக்காத இடமுங்க அங்க 

பொறந்தாரு மகனுங்க 

கதிதானோ ஏனுங்க 

கதை எல்லாம் கேளுங்க


பாடல் - 40

வானிலிருந்து நம் தேவன் 

இயேசு பாலகனாய் பிறந்தார் 

பாவ மனிதர் நலம் வாழ 

இங்கு மானிடனாய் பிறந்தார் 

ஆரிரரோ ஆராரோ


1.வாழும் மனிதர் பாவங்களை 

தோளில் சுமக்க பிறந்தாரே 

தேவ உலக வாழ்வு தனில் 

நாமும் பிறக்க பிறந்தாரே 

உலகில் பிறந்தார் நீதியின் ராஜா 

தீர்ப்பும் தருவார் சாரோனின் ரோஜா


பாடல் - 41

விண்ணில் தூதன் தோன்றி டவே 

மண்ணில் மாற்றி சிறந்திடவே 

மன்னன் தேவன் உதயமானார் 

தேவபாலன் மகிமை ஆனார்


1.மாமரி மடி மீதிலே 

மாடடையும் குடில் நாடியே -மன்னன் 


2.வான்வெளி வழிகாட்டவே 

ஞானியர் மூவர் நாடவே -மன்னன்


பாடல் - 42

அசைந்தாடும் தென்றல் 

இசையோடு சேர்ந்து 

திசையெங்கும் ஒலிக்கின்றது 

மழலை தவழும் 

அழகில் நீ மனமும் 

மகிழ்ந்துன்னை தாலாட்டுது -பாலா


1.மரியன்னை மடியில் 

மந்தையின் தொழுவில் 

பிறந்தரே இயேசு தேவா 

உம் குடில் நாடி 

ஓடோடி வந்தேன் 

பாலா நீ துயில் கொள்ளுவாய் 


2.பனி தூவும் ராவில் 

பாழும் இவ்வுலகில் 

பயம் நீக்க வந்தாயன்றோ 

பூ மெத்தை இல்லை 

புல் மெத்தை தானே 

பாலா நீ துயில் கொள்ளுவாய்


பாடல் - 43

ஜெனித்தார் ஜெனித்தார்

எங்கள் ஜெகதல இரட்சகனே

உதித்தார் உதித்தார்

எங்கள் உயர் மனுவேலனே


1.கந்தைகள் அணிந்தவரே

பாவ கந்தைகள் அகற்றிடவே

சொந்த குமாரனாய் சொந்தம் பாராட்டியே

விந்தையாக ஜெனித்தார்


2.உன்னதம் துறந்தவரே

எம்மை உன்னதராக்கிடவே

கண்மணி பாலனாய் கனி வினையகற்ற

கன்னியின் மடியிலுதித்தார்


3.வானம் திறந்திடவே

வான சேனைகள் துதித்திடவே

ஞானியர் தேடிட இடையர் வாழ்ந்திட

இனிய தேவன் பிறந்தார்


4.தலைமுறை தலைமுறையாய்

அவர் இரக்கங்கள் முடிவதில்லை

இரட்சண்ய வார்த்தையே இரட்சகர்

இயேசுவே இகத்தின் மீது ஜெனித்தார்


பாடல் - 44

மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! (2)

ஜெய மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானாரே ஜெய! ஜெய!

மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய!


1. ஆசீர்வாதமே! கன தேசார் நீதமே (2)

ஒளிர் காசினி மீததி நேசப்பிரகாச விண் வாச கிருபாசன


2. சத்திய வாசகர் சதா நித்திய தேசிகர் (2)

வளர் பெத்லகேம் ஊர்தனிலே கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில்


3. அந்தரம் பூமியும் அதி சுந்தர நேமியும் (2)

தினம் ஐந்தொரு நாளினிலே திரு முந்தின மூன்றிலொன்றாகிய



பாடல் - 45

பெத்லகேம் உரினிலே ,மாட்டு தொழுவதிலே

நம் இயேசு பிறந்தரே, பிறந்தரே பிறந்தரே

நம் இயேசு பிறந்தரே, நம் வாழ்வை மாற்றிடவே

பிறந்தரே பிறந்தரே, புது வாழ்வு தந்திடவே


ஜீவன் தந்திடவே,நம்மை மீட்டிடவே

நாம் இயேசு பிறந்தாரே, பிறந்தாரே பிறந்தாரே

நாம் இயேசு பிறந்தாரே ,நம் வாழ்வை மாற்றிடவே

பிறந்தாரே பிறந்தாரே ,புது வாழ்வு தந்திடவே


தூதர் பாடிடவே ,மேய்ப்பர் போற்றிடவே

நம் இயேசு பிறந்தாரே ,பிறந்தாரே பிறந்தாரே

நம் இயேசு பிறந்தாரே ,உலகத்தை வென்றிடவே

பிறந்தாரே பிறந்தாரே ,நம்மை பரலோகம் சேர்த்திடவே


வானம் போற்றிடவே ,பூமி மகிழ்திடவே

நாம் இயேசு பிறந்தாரே ,பிறந்தாரே பிறந்தாரே

நாம் இயேசு பிறந்தாரே ,உலகத்தை வென்றிடவே

பிறந்தாரே பிறந்தாரே ,நம்மை பரலோகம் சேர்த்திடவே


பாடல் 46

என் இதயம் இன்பத்தாலே பாடுதே ஏசு பாலனாக பூவில் வந்ததால் ஆ...ஆ...இன்பமே பொங்குதே அன்புடன் அழைக்குதே அவர் தந்த பாசமே


1. வானாதி வானங்களின் அரசர் - இவர் வையகத்தில் வந்துதித்த தேவன் மன்னனவர் மாளிகையாய் தெரிந்தார் பசும் புல்லனையில் தானே அவர் பிறந்தார்


2. வையகமே! வானகமாய் மாறுதே 

எங்கள் வள்ளல் முகம் மலராக மலருதே! நள்ளிரவில் தேவதூதன் உதித்தார் புவி நாற்றிசையும் அமுதமாக கேட்குதே


பாடல் 47

பாட்டு பாடுவேன் புது பாட்டு பாடுவேன்
இயேசு என்னை தேடி வந்ததால்
தாளம் போடுவேன் கைத்தாளம் போடுவேன்
இயேசு எந்தன் உள்ளம் பிறந்ததால்

விண்ணும் மண்ணும் பாடிட விந்தை பாலன் கேட்டிட
நானும் பாடுவேன் மகிழ்ந்தாடிப்பாடுவேன்
ஆனந்த பாட்டு இது சந்தோஷ பாட்டு
ஆனந்த பாட்டு இது இரட்சிப்பின் பாட்டு

1.கடலலைகள் ஆர்ப்பரித்து வாழ்த்துச் சொல்லிடுதே
கலகலவென நீரோடைகள் இசை எழுப்பிடுதே
கானமயிலும் சோலைக்குயில்
ராகங்களை சேர்த்திட
துள்ளி ஓடிடும் புள்ளிமான் கூட்டமும்
தாளங்களை தந்திட – நிநிச

2. யார் இவர் யாரோ இவர் மகிமையின் ராஜன்
யார் இவர் யாரோ இவர் மகத்துவ தேவன்
துதிகள் மத்தியில் வாசம் செய்திடும் தேவகுமாரனிவர்
தூதரும் தூயரும் போற்றிப்பாடிடும் துதிகளின் பாத்திரர்

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD