Original Key: Em - 4/4
Em Esus4 Em
உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
Am Em
உம்மையன்றி யாரைப் பாடுவேன் - இயேசையா
C Bm Em
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே!
.
Em B Em
பரிசுத்தமே பரவசமே
Am Em B Em
பரனேசருளே வரம் பொருளே
.
தேடினதால் கண்டடைந்தேன்
C D Bm Em
பாடிடப் பாடல்கள் ஈந்தளித்தீர்!
.
புது எண்ணெயால் புது பெலத்தால்
புதிய கிருபை புதுக்கவியால்
நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
நூதன சாலேமில் சேர்த்திடுவீர்!
.
நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசைக்கெட்டெங்கும் அலைந்திடாமல்
தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர்
.
என்முன் செல்லும் உம் சமூகம்
எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம் தடியும்
உண்மையாய் என்னையும் தேற்றிடுதே!
.
கனிசெடி நீர் நிலைத்திருக்கும்
கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
கிளை நறுக்கி களைபிடுங்கி
கர்த்தரே காத்தென்னைச் சுத்தம் செய்வீர்!
.
என் இதய தெய்வமே நீர்
எனது இறைவா! ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம்
நேசமுகம் என்று கண்டிடுவேன்!
.
சீருடனே பேருடனே
சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
சீக்கிரமாய் சேர்த்திடுவீர்
சீயோனை வாஞ்சித்து நாடுகிறேன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக