இயேசு ராஜனின் திருவடிக்கு சரணம் சரணம் சரணம்
ஆத்மா நாதனின் மலரடிக்கு சரணம் சரணம் சரணம்
பார் போற்றும் தூய தூய தேவனே
மெய் ராஜாவே எங்கள் நாதனே
பயம் நீக்கும் துணை யாவும் ஆனீரே – சரணம் (3)
இளைப்பாறுதல் தரும் வேந்தனே
இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதரே
ஏழை என்னை ஆற்றி தேற்றி காப்பீரே – சரணம் (3)
பெலவீனம் யாவும் போக்கும் வல்லோரே
பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே
ஆவி ஆத்துமா சரீரத்தை படைக்கிறேன் – சரணம் (3)
உந்தன் சித்தம் செய்ய அருள் தாருமே
எந்தன் சித்தம் யாவும் என்றும் ஒழிப்பீரே
சொந்தமாக ஏற்று என்னை ஆட்கொள்ளும் – சரணம் (3)
அல்லேலூயா பாடி வந்து துதிப்பேன்
மனதார உம்மை என்றும் போற்றுவேன்
அல்லேலூயா அல்லேலூயா ஆமென் – சரணம் (3)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக