காஃப் சிரப் எதற்கு...??? கஷாயம் இருக்க.....??
குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல்
என்று அவதிப்படும் சீஸன் இது. அப்பாயின்மென்ட்
வாங்கி, டாக்டரிடம் சென்று, ஆன்டிபயாடிக், சிரப், டேப்ளட் என்று
மெடிக்கலில் செலவழிப்பதற்கு முன், இந்த கை
வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். செய்வதும்
எளிது, உடலுக்கும் நல்லது, விளைவுகளும் இல்லாதது.
சில துளசி இலைகளை
அலசி வைத்துக்கொள்ளவும். 10 மிளகை பொடித்து வைத்துக்கொள்ளவும்.
சித்தரத்தை சிறிது எடுத்துக்கொள்ளவும். 600 மிலி தண்ணீரில்
துளசி இலைகள், மிளகுப் பொடி, சித்தரத்தையை சேர்த்து
கொதிக்க வைக்கவும். 200 மிலி-ஆக தண்ணீர்
வற்றியதும் இறக்கி, வடிகட்டி, அதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு
சேர்த்து கலக்கவும். பெரியவர்கள் சுடச்சுடவும், குழந்தைகள் இளஞ்சூட்டிலும் இதைப் பருகலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக