திங்கள், 2 பிப்ரவரி, 2015

சேலா” - பொருள் விளக்கம்

சேலா” - பொருள் விளக்கம்

“சேலா” (Celah) - என்ற சொல் வேதத்தில் 71 முறை வருகிறது. இதன் பொருள் “இணைத்துப் பார்த்தல்” என்பதாகும். அதாவது, இரண்டு கருத்துக்களை இணைக்கிறது.

உதாரணமாக...

”ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி் - நாலும் ரெண்டும் சொல்லுக்கு உறுதி”

நாலும் - நாலடியார்
ரெண்டும் - திருக்குறள்
சொல்லுக்கு உறுதி. - இரண்டு கருத்துக்களையும் இணைக்கிறது - “சேலா”.

“சேலா” என்பதற்கு 7 வித கருத்து விளக்கங்கள் உண்டு. அவை...

1. இரண்டு கருத்துக்களையும் இணைத்தல் - சேலா.

2. பாடிக் கொண்டே இருக்கும்போது இடையில் நிறுத்துவது - சேலா.

3. எப்போதும் அதுதான் உண்மை என்று ஸ்தாபிப்பதற்கு என்று உபயோகப்படுத்துவது - சேலா.

4. திரும்பத் திரும்ப அதையே சொல்லுதல் - சேலா.

5. மெதுவாக பாடுகிறவன் சத்தத்தை உயர்த்திப் பாடுகிறான் - சேலா.

6. ஸ்பிரிதம் விடுதல் அல்லது பரப்பி விடுதல் அதாவது, இராகம் விடுதல் - சேலா. (உ.ம்) “நன்றி ராஜா... நன்றி ராஜா...”

7. பாடிக் கொண்டு இருக்கும்போதே வாத்தியக் கருவியில் ஒரு இடைச் சொருகல் - சேலா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD