வியாழன், 26 ஜூன், 2014

இயேசுவின் கிருபை நமக்கு போதும


அந்த வார்த்தை (இயேசு) மாம்சமாகி கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம்பண்ணினார் அவருடைய மகிமையைக் கண்டோம் அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. (யோவா 1:14)

கிருபை என்ற வார்த்தையை எபிரேய பதம் “CHEN” சேன், கிரேக்க பதம் “CHARIS”  காரிஸ், அது ஆங்கிலத்தில் “GRACE” என்றும் தமிழில் கிருபை என்றும் அழைக்கப்படுகிறது. கிருபை என்பது தகுதியற்றவர்கள் மீது தேவன் காண்பிக்கும் அளவில்லாத இரக்கம் ஆகும். பழைய ஏற்பாட்டு நாட்களில் மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லாமலிருந்தது.ஏனென்றால், எல்லா பாவத்திற்கும்,தவறுக்கும் தண்டனை உண்டு. மன்னிப்புகிடையாது. அறியாமல் தவறு செய்தாலும், அறிந்து செய்தாலும் தண்டனைஉண்டு.இதை தான், கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்று பழைய ஏற்பாட்டில்கூறப்பட்டுள்ளது. அதன் அர்த்தம் என்ன? உங்கள் கண்ணைஒருவர் குருடாக்கிவிட்டால், அதற்கு பதிலாக, தண்டனையாக அவர் கண்ணை குருடாக்கி விட வேண்டும்என்பது தான். இங்குமன்னிப்புக்கு இடமே இல்லை.

இயேசு என்றைக்கு இந்த உலகத்தில் உதித்தாரோ, அன்று தான் கிருபை வெளிப்பட்டது. இயேசு கிறிஸ்து கிருபையும், சத்தியமும் நிறைந்தவராக இந்த உலகத்தில் வந்தார். அவர் நியாயாதிபதியாக வரவில்லை,மாறாக கிருபை நிறைந்தவராக வந்தார். சத்தியம் நிறைந்தவராக வந்தார். பல்வேறு காரியங்களை செய்தார். இயேசுவைப்போலமாற விரும்புகிற நாம் கிருபையும், சத்தியமும் நிறைந்த இயேசு தன்வாழ்நாட்களில் என்ன செய்தார் என்பதை அறிந்துகொண்டோமானால், நாம் அப்படியேநடந்து தேவனின் திட்டத்தை நிறைவேற்றலாம். அந்த கிருபையின் மூலமாகமன்னிப்பு நமக்கு கிடைக்கிறது. அது தான்புதிய ஏற்பாடாகிய கிருபையின் காலத்தின் தொடக்கம். இயேசு முழுவதுமாககிருபைநிறைந்தவராக இருந்தார். அவரது பார்வை அது கிருபை. ஆகவே தான்,வேதனை படுகிறவர்களை கண்ட போது மனதுருகினார். அவரது பேச்சு அது கிருபை (லூக். 4:22). அவரது செயல்களெல்லாம் கிருபை நிறைந்ததாகவே காணப்பட்டது.

ஆகவே தான் தாவீது சொல்கிறார், “ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன் (சங்கீதம்  86:15) என்று. அந்த மனவுருக்கம் நிறைந்த கிருபையின் தெய்வம் இயேசு. இந்த நாளில் உங்களையும் கூட தமது கிருபையின் கண்களால் தான் பார்த்துகொண்டிருகின்றார். உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் தடைகளை மாற்ற அவருடைய கிருபை போதுமானதாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...