தீர்க்கதரிசிகளின்பிரிவுகள்
1. புத்தகம் எழுதிய தீர்க்கதரிசிகள் (Canonical)
புத்தகம் எழுதாத தீர்க்கதரிசிகள் (Non-Canonical)
2. பெரிய தீர்க்கதரிசிகள், சிறிய தீர்க்கதரிசிகள்.
பெரிய தீர்க்கதரிசிகள்: 4 பேர்.
ஏசாயா, எரேமியா, எசேக்கியேல், தானியேல்
சிறிய தீர்க்கதரிசிகள்: 12 பேர்.
ஓசியா, யோவேல், ஆமோஸ், ஒபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா.
பெரிய தீர்க்கதரிசி என்றும் சிறிய தீர்க்கதரிசி என்றும் எதனால் அழைக்கப்படுகிறது?
தீர்க்கதரிசிகள் எழுதின புத்தக அளவை வைத்து, பெரிய தீர்க்கதரிசி என்றும் சிறிய தீர்க்கதரிசி என்றும் அழைக்கப்படுகிறது. அவர்களின் வயதின் அடிப்படையில் அல்ல; இரு சாராரும் சமமானவர்கள்.
தீர்க்கதரிசிகளின் காலம்: (கி.மு.900 - கி.மு.400 வரை)
சுமார் கி.மு.850 க்கும் கி.மு.400 க்கும் இடைப்பட்ட காலத்தில்தான் இந்த 16 தீர்க்கதரிசிகளும் தீர்க்கதரினம் உரைத்தார்கள். அதாவது, கி.மு.9 ஆம் நூற்றாண்டுக்கும் 4 வது நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம். இப்போது 21 ஆம் நூற்றாண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக