இஸ்ரவேலரின் அரசர்கள் ஆரம்பமும் நியாயாதிபதிகளின் ஆட்சி முடிவும்
🌹 1 சாமுவேல் 🌹
☀ தற்கால எபிரேய வேதாகமத்தில் “ஷ்மூஏல் – ஆலேப்”, “ஷ்மூஏல் பேத்” என்று முறையே 1 சாமுவேல், 2 சாமுவேல் புத்தகங்களை அழைக்கின்றனர்.
☀ மூல பாஷையான எபிரேயுவில் 1 சாமுவேல் மற்றும் 2 சாமுவேல் ஆகிய இரண்டு ஆகமங்களும் “மூர்க்கால தீர்க்கதரிசிகள்” என்னும் ஒரே தலைப்பில் கீழ் வருகிறது.
☀ இந்த புத்தகத்தின் ஆசிரியர்கள் சாமுவேல். நாத்தான் மற்றும் காத் ஆகும். இவர்களுல், சாமுவேல் அதிகமான அதிகாரங்களை எழுதியுள்ளார்.
☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 9-வது புத்தகமாக வருகிறது.
☀ சரித்திரத்திலேயே முதல் முதலாக இஸ்ரவேலர்களுக்கு இராஜாவாய் ஏற்படுத்தப்பட்ட சவுலின் சரித்திரம் இந்த புத்தகத்தில் தான் வருகிறது.
☀ அநேக நூறு வருடங்கலாக நடந்து வந்த நியாயாதிபதிகளின் ஆட்சி இந்த புத்தகத்தோடு முடிவடைகிறது.
☀ சாமுவேல் தீர்க்கதரிசிதான் கடைசியாக வந்த நியாயாதிபதியாகும்.
☀ சாமுவேல் பிறப்பு முதல் சவுலின் இறப்பு வரையிலான சரித்திர சம்பவங்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
☀ இந்நூலை 3 பிரிவுகளாக பிரிக்களாம் a. 1-7 அதி சாமுவேலும் ஏலியும், b. 8-15 அதி சவுலும் சாமுவேலும். c. 16-31 அதி தாவீதும், சவுலும்.
☀ அன்னாளின் ஜெபம்(1அதி), சிறுவனாகிய சாமுவேல் (3அதி), தாவீதும் கோலியாத்தும் (17அதி), தாவீது – யோனத்தானின் நட்பு (18அதி) என்று சிறுவர்கள் மனதில் இடம் பிடித்த சம்பவங்கள் இப்புத்தகத்தில் உண்டு.
☀ சாமுவேலை குறித்து அதிகமாய் வருவதால் இந்நூலுக்கு அவருடைய பெயரே வைக்கப்பட்டுள்ளது.
☀ இந்நூலில் முக்கிய கதாபாத்திரங்களாக அன்னாள், சாமுவேல், சவுல் மற்றும் தாவீது வருகின்றனர்.
☀ இந்த நூலில் “எபனேசர்”, என்றும் “சேனைகளின் கர்த்தர்” என்றும் “மேசியா” என்றும், “ராஜா வாழ்க” என்றும் முதல் முதலாக வருகிறது. (1:3, 2:10, 7:12, 10:24).
☀ சாமுவேல் தான் முதல் முதல் தீர்க்கதரிசனத்தை கையால் எழுதி வைத்த தீர்க்கதரிசி ஆவார்.
☀ இந்நூலில் பரிசுத்த ஆவியானவரை குறித்து அநேக காரியங்களை அறிந்துக்கொள்ளலாம் 10:69; 11:6; 14:13,18; 16:14.
☀ இந்நூலில் “ஜெபம்”, “விண்ணப்பம்”, “வேண்டுதல்”, போன்ற வார்த்தைகள் அடிக்கடி வருகின்றன. ஏறக்குறைய 11 இடங்களில் ஜெபத்தை பற்றி வருகிறது.
☀ தாவீது சவுலுக்கு தப்பி ஒடி தங்கியிருந்த 15 இடங்களை பற்றி இப்புத்தகத்தில் படிக்கலாம்.
☀ இந்நூலில் மொத்தம் 31 அதிகாரங்கள் உள்ளன, இவைகளில் 17-ம் அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 29-ம் அதிகாரம் சிறிய அதிகாரமாகவும் உள்ளது.
☀ சாமுவேல், நாத்தான் மற்றும் காத் எழுதின சம்பவங்களை ஏசாயா தீர்க்கதரிசி ஒன்று சேர்த்திருப்பார் என்று கருதப்படுகிறது.
☀ ஆங்கில வேதாகமத்தில் 810 வசனங்களாகவும் தமிழ் வேதாகமத்தில் 811 வசனங்களாகவும் வருகிறது.
☀ இந்த ஆகமத்தில் 50 வசனங்கள் நிறைவேறின தீர்க்கதரிசனங்களையும் 2 வசனங்கள் இனி நிறைவேற வேண்டிய தீர்க்கதரிசனங்களையும் கொண்டுள்ளது.
☀ இந்நூலில் 4 வாக்குத்தத்தங்களையும் 117 கட்டளைகளையும், 157 கேள்விகளையும் கொண்டுள்ளது.
☀ ஏறக்குறைய 57 காரியங்களை முன்னறிவிக்கிறது.
சாமுவேல் புத்தகமும் ஜெபமும்...,
1. அன்னாளின் ஜெபத்தால் சாமுவேல் பிறக்கிறார் – 1 சாமு 1:10-28.
2. சாமுவேலின் ஜெபத்தால் இஸ்ரவேல் ஜனங்கள் ஜெயம் பெறுதல் – 1 சாமு 7:5-10.
3. ராஜாவை தெரிந்தெடுக்க சாமுவேல் கர்த்தரை நாடுதல் – 1 சாமு 8:5,6.
4. ஜெபிப்பதால். தேவனிடம் இரகசிய ஆலோசனைகளை கற்றுக் கொள்ளலாம் – 1 சாமு 9:15.
5. தனக்கு கொடுக்கப்பட்ட ஜனங்களுக்காக ஜெபிக்காமல் இருப்பது பாவம் – 1 சாமு 12:23.
6. சவுலின் ஜெபத்தை தேவன் நிராகரித்தல் – 1 சாமு 18:6
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக