பெலமளித்தெமைப் புது வழிகளில் நடத்திட
தாரகம் நீரல்லவோ (3)
அனுபல்லவி
தாரணியில் எமக்குத் தயை புரிந்திடும்
இயேசு நாயகன் நீரல்லவோ
சரணங்கள்
1. இருவரொருமித்தெம்மை வரவழைத்திடல்
திரு சமுகமளிப்பேன் என்றீரே (3)
நீரன்றி எமக்கேது வீரமுலகிலுண்டு
விரைந்து எழுந்திடுவீரே - பெலமளி
2. அதிசயமானவர் என்பதுமது பெயர்
அதிசயம் விளங்கச் செய்யுமே (3)
இது சமயம் உமது இதயம் விரும்புவதை
இறைவா விளங்கச் செய்யுமே - பெலமளி
3. பாவிகளுமதண்டை சேரும் உணர்வடைந்து
தாகமுடன் அண்டிட (3)
நாவின் அறிக்கையினால் நவீன இதயம் பெற்று
நாதனைப் பின் சென்றிட -
4.கலங்காதே சிறுமந்தையே என்ற நல்லுரை
பலமாயுரைக்க வேணுமே
நலமெனக் காண்பதை நமது மத்தியில் செய்து
அலகை அடக்க வேணுமே - பல
5. வழி நடத்திட எம்மை வல்லமையுள்ளவரே
ஒளியாக முன் நடவுமே
விழிப்புடனேயிருந்து திரும்பி நீர் வரும் போது
களித்திட எம்மைக் காருமே - பல
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக