எலியாவின் தேவனே
அவர் இரங்கிடும் நேரமே 2
அசைவாடும் அனலாக்கும்
எங்கள் அக்கினி ஜுவாலயே.. 2
1.நான் ஒருவன் மாத்திரம் மீந்திருக்க-
பாகாலின் படைகளை எதிர்திடுவேன் 2
நான் ஜெபிக்க ஜெபிக்க அவர் தலை அசைப்பார் 2
நெருப்பாய் இறங்கிடுவார்-என் தெய்வம் 2
ஆவியே..ஆவியே 2
அசைவாடும் அனலாக்கும்
எங்கள் அக்கினி ஜுவாலயே 2
2.வழி மாறி கீழ் தட்டில் படுத்தாலும்
வார்த்தை தெய்வம் நம்மை பின்தொடர்வார் 2
நான் கடலின் அலை நோக்கி குதித்தாலும் 2
மீனை கொண்டு மீட்பார்-என் ஜீவனை 2
3.கேரீத் ஆற்றுநீர் வற்றி போனாலும்
வற்றாத ஜீவநதி நமக்கு உண்டு 2
பின்னிட்டு பாராமல் முன் நடப்பேன் 2
அழைத்தவர் கரம் நடத்தும்-நம்மை 2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக