இருந்தவர்!
இருக்கிறவர்!!
வருகிறவர்!!!
வெளிப்படுத்தல் அதிகாரம் 4,5,6 சுருக்கம்:
முத்திரை 1
நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக் குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப்பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்.
முத்திரை 2
அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலைசெய்யதக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப்போடும்படியான அதிகாப்பட்டது; ஒரு பெரிய பட்டயமும் அவனுக்கு கொடுக்கப்பட்டது.
முத்திரை 3
நான் பார்த்தபோது, இதோ, ஒரு கருப்புக் குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான்.
அப்பொழுது ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன்.
முத்திரை 4
ஒரு மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன் அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர் பாதாளம் அவன் பின்னே சென்றது. பட்டயத்தினாலும் பஞ்சத்தினாலும் சாவினாலும் பூமியின் துஷ்ட மிருகங்களாலும் பூமியின் கர்பங்களில் உள்ளவர்களை கொலைசெய்யும்படியான அதிகாரம் அவனுக்கு கொடுக்கப்பட்டது
முத்திரை 5
அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது தேவ வசனத்தின் நிமித்தம் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தம் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களை பலிபீட்த்தின் கீழ் கண்டேன்.
அவர்கள்; பரிசுத்தமும் சத்தியமுள்ல ஆண்டவரே தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவரிடத்தில் எங்கள் இரத்தத்தை எதுவரைக்கும் நியாயத்தீர்ப்பு செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீரென்று மகாசத்தமிட்டு கூப்பிட்டார்கள்.
அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும் அவர்கள் தங்களைப்போல கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன் பனிவிடைக்காரர்களும் தங்கள் சகோதரமானவர்களின் தொகையை நிறைவாக்குமளவும் இன்னுங்கொஞ்சகாலம் இளைப்பாறவேண்டுமென்று அவர்களுக்கு சொல்லப்பட்டது.
முத்திரை 6
அவர் ஆறாம்முத்திரையை உடைக்க கண்டேன் ; இதோ பூமி மிகவும் அதிர்ந்தது. சூரியன் கருப்பு கம்பளியைப்போல் கருத்தது சந்திரன் இரத்தம் போல் ஆயிற்று;
அத்திமரமானது பெரும்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின்காய் உதிர்கிறது போல வானத்தின் நச்சத்திரங்களும் பூமியின்மேல் விழுந்தது.
வானமும் சுருட்டப்பட்ட புஸ்தகம் போலாகி விலகிபோயிற்று; மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு அகன்று போயின;
பூமியின் ராஜாக்களும் பெரியோர்களும் ஐசுவரியவான்களும் சோதனைத்தலைவர்களும் பெலவான்களும் அடிமைகள் யாவரும் சுயாதீனர் யாவரும் பர்வதங்களின் குகைகளிலும் கண்மலைகளிலும் ஒளிந்துக்கொண்டு,
பர்வதங்களையும் கண்மலைகளையும் நோக்கி; நீங்கல் எங்கள் மேல் விழுந்து சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள் அவருடைய கோபாக்கினையையும் மகாநாள் வந்துவிட்டது யார் நிலைநிற்க கூடும் என்றார்கள்.